ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தலைமறைவான பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை கைது! - Armstrong murder case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 20, 2024, 7:34 AM IST

Armstrong murder case: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், போலீசாரால் தேடப்பட்டு வந்த பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் , அஞ்சலை
ஆம்ஸ்ட்ராங் , அஞ்சலை (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: பெரம்பூர் பகுதியில் கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதலில் 11 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அப்போது ஆயுதங்களை பறிமுதல் செய்ய திருவேங்கடம் என்ற ரவுடியை அழைத்து சென்றபோது போலீசார் என்கவுன்டர் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் வேறு யாராவது மூளையாக செயல்பட்டார்களா?, பெரும் அளவில் பணம் ஏதாவது கைமாற்றப்பட்டு கூலிப்படைகள் மூலம் இந்த கொலை நடத்தப்பட்டதா? என்ற பல்வேறு கோணத்தில் செம்பியம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் சென்னை ஜாம்பஜார் பகுதியைச் சேர்ந்த மறைந்த பிரபல ரவுடி தோட்டம் ரவியின் மனைவி மலர்க்கொடிக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தம் இருப்பதாக செம்பியம் தனிபடை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவருக்கு உதவியாக இருந்ததாக வழக்கறிஞர் ஹரிகரன், திமுக நிர்வாகி மகன் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 14 நபர்களை போலீசார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை என்பவருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்த போலீசார் தேடி வந்த நிலையில், அஞ்சலை தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடி, சென்னை ஓட்டேரி பகுதியில் வைத்து அஞ்சலையை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள அஞ்சலை மீது ஏற்கனவே புளியந்தோப்பு, வியாசர்பாடி, பெரம்பூர், ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் இவர் கடந்த ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் காதலியாக இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பணம் ஏதாவது கொடுத்து உதவினாரா? நாட்டு வெடிகுண்டு போன்ற ஆயுதங்கள் வாங்க ஏதாவது ஏற்பாடு செய்தாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை வழக்கில் சம்பவம் செந்தில் என்கிற பிரபல ரவுடியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: “திசை திரும்புகிறதா ஆம்ஸ்ட்ராங் வழக்கு?” - பகுஜன் சமாஜ் கட்சியினர் கேள்வி! - Armstrong murder case

சென்னை: பெரம்பூர் பகுதியில் கடந்த ஐந்தாம் தேதி பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதலில் 11 நபர்களை செம்பியம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அப்போது ஆயுதங்களை பறிமுதல் செய்ய திருவேங்கடம் என்ற ரவுடியை அழைத்து சென்றபோது போலீசார் என்கவுன்டர் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் வேறு யாராவது மூளையாக செயல்பட்டார்களா?, பெரும் அளவில் பணம் ஏதாவது கைமாற்றப்பட்டு கூலிப்படைகள் மூலம் இந்த கொலை நடத்தப்பட்டதா? என்ற பல்வேறு கோணத்தில் செம்பியம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் சென்னை ஜாம்பஜார் பகுதியைச் சேர்ந்த மறைந்த பிரபல ரவுடி தோட்டம் ரவியின் மனைவி மலர்க்கொடிக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தம் இருப்பதாக செம்பியம் தனிபடை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் அவருக்கு உதவியாக இருந்ததாக வழக்கறிஞர் ஹரிகரன், திமுக நிர்வாகி மகன் சதீஷ்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 14 நபர்களை போலீசார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை என்பவருக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் அவரிடம் விசாரணை நடத்த போலீசார் தேடி வந்த நிலையில், அஞ்சலை தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து தனிப்படை போலீசார் அவரை தீவிரமாக தேடி, சென்னை ஓட்டேரி பகுதியில் வைத்து அஞ்சலையை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தற்போது கைது செய்யப்பட்டுள்ள அஞ்சலை மீது ஏற்கனவே புளியந்தோப்பு, வியாசர்பாடி, பெரம்பூர், ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் இவர் கடந்த ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்ட ரவுடி ஆற்காடு சுரேஷின் காதலியாக இருந்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பணம் ஏதாவது கொடுத்து உதவினாரா? நாட்டு வெடிகுண்டு போன்ற ஆயுதங்கள் வாங்க ஏதாவது ஏற்பாடு செய்தாரா? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொலை வழக்கில் சம்பவம் செந்தில் என்கிற பிரபல ரவுடியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: “திசை திரும்புகிறதா ஆம்ஸ்ட்ராங் வழக்கு?” - பகுஜன் சமாஜ் கட்சியினர் கேள்வி! - Armstrong murder case

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.