ETV Bharat / state

சென்னையில் 800 கிலோ கெட்டுப்போன மாட்டிறைச்சி பறிமுதல்! - 800kg BEEF SEIZED

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 8, 2024, 7:12 PM IST

800KG ROTTEN BEEF: சென்னை சூளைமேடு செனாய் நகரில் உள்ள இறைச்சி பதப்படுத்தும் கூடத்தில் 800 கிலோ கெட்டுப்போன மாட்டிறைச்சியை பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதனை ஆய்விற்கு அனுப்பியுள்ளனர்.

கெட்டுப்போன மாட்டிறைச்சி பறிமுதல்
கெட்டுப்போன மாட்டிறைச்சி பறிமுதல் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சியை பயண்படுத்தி உணவு சமைக்கப்படுவதாக எழுந்த புகார் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை செனாய் நகரில் உள்ள உணவுப் பதப்படுத்தும் இடத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் இன்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கெட்டுப்போன நிலையில் இருந்த 800 கிலோ மாட்டிறைச்சி பதப்படுத்தப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், இறைச்சிகளை பறிமுதல் செய்து மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அப்புறப்படுத்தினர்.மேலும் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த கடைக்கு சீல் வைத்தனர். இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதிஷ் குமார் கூறும்போது, "செனாய் நகர் பகுதியில் உள்ள கடையில் ஆய்வு செய்தப்போது, 800 கிலோவுக்கும் மேலான அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசும் விதமாக கெட்டுப்போன மாட்டிறைச்சியை கைப்பற்றி உள்ளோம்.

எங்களுடன் இறைச்சியை ஆய்வு செய்வதற்காக கால்நடை மருத்துவரையும் அழைத்து வந்தோம். இந்த இறைச்சி பதப்படுத்தும் கூடம் எந்த ஒரு அனுமதியும் இன்றி செயல்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. அதனால் இந்த கூடத்திற்கு நாங்கள் சீல் வைத்து விட்டோம்.

ஜீ.என்.எஸ் அனுமதி இன்றி நடத்தப்படும் அனைத்து இறைச்சி கூடங்களும் மூடப்படும். இவர்களிடம் எந்தெந்த உணவகங்கள் இறைச்சியை கொள்முதல் செய்தனர் என்பதையும் இவர்கள் இறைச்சிகளை எங்கே வாங்கினார்கள் என்பதையும் விசாரித்து வருகின்றோம். அதுமட்டுமில்லாமல் இறைச்சிகளை வாங்குபவர்கள் மாநகராட்சியே நடத்துகின்ற இறைச்சி பதப்படுத்தும் கூடத்தில் இறைச்சியை வாங்குங்கள்" என்று கூறினார்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் உறைகிணற்றை சுத்தம் செய்த சம்பவத்தில் மேலும் ஒருவர் மரணம்.. போலீசார் விசாணை! - Thoothukudi gas attack

சென்னை: உணவகங்களில் கெட்டுப்போன இறைச்சியை பயண்படுத்தி உணவு சமைக்கப்படுவதாக எழுந்த புகார் அடிப்படையில் தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை செனாய் நகரில் உள்ள உணவுப் பதப்படுத்தும் இடத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் இன்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு கெட்டுப்போன நிலையில் இருந்த 800 கிலோ மாட்டிறைச்சி பதப்படுத்தப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், இறைச்சிகளை பறிமுதல் செய்து மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அப்புறப்படுத்தினர்.மேலும் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த கடைக்கு சீல் வைத்தனர். இது குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதிஷ் குமார் கூறும்போது, "செனாய் நகர் பகுதியில் உள்ள கடையில் ஆய்வு செய்தப்போது, 800 கிலோவுக்கும் மேலான அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசும் விதமாக கெட்டுப்போன மாட்டிறைச்சியை கைப்பற்றி உள்ளோம்.

எங்களுடன் இறைச்சியை ஆய்வு செய்வதற்காக கால்நடை மருத்துவரையும் அழைத்து வந்தோம். இந்த இறைச்சி பதப்படுத்தும் கூடம் எந்த ஒரு அனுமதியும் இன்றி செயல்பட்டது தற்போது தெரியவந்துள்ளது. அதனால் இந்த கூடத்திற்கு நாங்கள் சீல் வைத்து விட்டோம்.

ஜீ.என்.எஸ் அனுமதி இன்றி நடத்தப்படும் அனைத்து இறைச்சி கூடங்களும் மூடப்படும். இவர்களிடம் எந்தெந்த உணவகங்கள் இறைச்சியை கொள்முதல் செய்தனர் என்பதையும் இவர்கள் இறைச்சிகளை எங்கே வாங்கினார்கள் என்பதையும் விசாரித்து வருகின்றோம். அதுமட்டுமில்லாமல் இறைச்சிகளை வாங்குபவர்கள் மாநகராட்சியே நடத்துகின்ற இறைச்சி பதப்படுத்தும் கூடத்தில் இறைச்சியை வாங்குங்கள்" என்று கூறினார்.

இதையும் படிங்க: தூத்துக்குடியில் உறைகிணற்றை சுத்தம் செய்த சம்பவத்தில் மேலும் ஒருவர் மரணம்.. போலீசார் விசாணை! - Thoothukudi gas attack

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.