ETV Bharat / state

ராமேஸ்வரம் மீனவரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு.. நடுக்கடலில் என்ன நடந்தது? மீனவர் மூக்கையா கூறிய தகவல் - Rameswaram Fishermen

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 3, 2024, 10:05 AM IST

Rameswaram Fishermen: இலங்கை கடற்படையின் ரோந்துப் படகு மோதிய விபத்தில், மீட்கப்பட்ட மூக்கையா, முத்து முனியாண்டி ஆகியோர் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு காலை நான்கு மணி அளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர். அவர்களோடு உயிரிழந்த மீனவர் மலைச்சாமியின் உடலும் கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மீட்கப்பட்ட மீனவர்,  உயிரிழந்த மீனவரின் உடல்
மீட்கப்பட்ட மீனவர், உயிரிழந்த மீனவரின் உடல் (Credits - ETV Bharat Tamil Nadu)

ராமநாதபுரம்: எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக ஜூலை 31ஆம் தேதி நெடுந்தீவு கடற் பகுதியில் வைத்து இலங்கை ரோந்து படகு ஒன்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது விசைப்படகு மீது மோதியதில் மீனவர்களின் படகு கடலில் மூழ்கியது. அந்த விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூக்கையா, முத்து முனியாண்டி, மலைச்சாமி, ராமச்சந்திரன் உள்ளிட்ட நால்வரும் உயிர் பயத்தில் கடலில் குதித்தனர்.

இதில் மூவர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், மலைச்சாமி என்பவர் உயிரிழந்தார். மேலும் ஒரு மீனவரான ராமச்சந்திரனை தேடும் பணியில் இலங்கை கடற்படை அதிகாரிகள் தற்போது வரை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த மலைச்சாமியின் உடல், உடற்கூறு ஆய்வுக்குப் பின் காங்கேசன் கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் மலைச்சாமியின் உடல் மற்றும் அவருடன் மீன்பிடிக்க சென்ற முத்து முனியாண்டி, மூக்கையா ஆகியோரை சரியாக சுமார் இரண்டு மணி அளவில் ஐ.எம்.பி.எல் எல்லையில் இருந்த இந்திய கடற்படை அதிகாரிகளிடம், இலங்கை கடற்படை அதிகாரிகள் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து காலை நான்கு மணி அளவில் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திற்கு இறந்த மீனவரின் உடல் கொண்டுவரப்பட்டது.

இது குறித்து மீனவர் மூக்கையா கூறுகையில், "ஜூலை 31ஆம் தேதி காலை 1.30 மணி அளவில் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றோம். மீன்பிடித்து விட்டு பகல் ஒரு மணி அளவில் திரும்பி வந்து கொண்டிருக்கும் பொழுது, அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை கடற்படையின் கப்பல் எங்கள் படகின் மீது திடீரென மோதியதில் எங்களது படகின் ஒரு பகுதிக்குள் தண்ணீர் புகுந்த உடனே ஒரு நிமிடத்திற்குள் விசைப்படகு கடலுக்குள் மூழ்கியது.

நாங்கள் நான்கு பேரும் தண்ணீரிலேயே சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் மிதந்தோம். மலைச்சாமி மயக்கம் அடைந்தார். அவரை இலங்கை கடற்படை அதிகாரிகள் மீட்டு மருத்துவ உதவி செய்து மாற்று கப்பலில் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி விட்டனர். ராமச்சந்திரனை தேடும் பணியில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட கப்பல் தற்போது வரை தேடி வருகின்றனர். எங்களை மாலை 5 மணி அளவில் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று, மாற்று உடை மற்றும் உணவு கொடுத்தனர்.

அதன்பின் ஊர்க்காவல் துறை காவல்நிலையத்தில் இச்சம்பவம் குறித்து வாக்குமூலம் அளித்தோம். மேலும் எனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், மருத்துவமனை அழைத்துச் சென்று மருத்துவ உதவி செய்தனர். இந்திய தூதரக அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததன் காரணமாகவே, உடனடியாக ஊர்காவல்துறை நீதிபதி இறந்த மலைச்சாமியின் உடலை ஆய்வு செய்தார். அதன் பின் உடற்கூறு ஆய்வுக்கு பின், உடனடியாக தாயகம் திரும்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்.

அதன் பின் எங்களை மலைச்சாமியின் உடலுடன் இந்திய கடற்படை அதிகாரிகளிடம் நடுக்கடலில் ஒப்படைத்தனர். ஐந்து கப்பல் கொண்டு சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் தேடியும் ராமச்சந்திரனின் உடல் கிடைக்கவில்லை" என்று கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: விரைவில் இந்தியா - இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்.. மத்திய அரசு ஐகோர்ட்டில் தகவல்! - fisherman attack by SL navy

ராமநாதபுரம்: எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக ஜூலை 31ஆம் தேதி நெடுந்தீவு கடற் பகுதியில் வைத்து இலங்கை ரோந்து படகு ஒன்று ராமேஸ்வரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவரது விசைப்படகு மீது மோதியதில் மீனவர்களின் படகு கடலில் மூழ்கியது. அந்த விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூக்கையா, முத்து முனியாண்டி, மலைச்சாமி, ராமச்சந்திரன் உள்ளிட்ட நால்வரும் உயிர் பயத்தில் கடலில் குதித்தனர்.

இதில் மூவர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், மலைச்சாமி என்பவர் உயிரிழந்தார். மேலும் ஒரு மீனவரான ராமச்சந்திரனை தேடும் பணியில் இலங்கை கடற்படை அதிகாரிகள் தற்போது வரை ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உயிரிழந்த மலைச்சாமியின் உடல், உடற்கூறு ஆய்வுக்குப் பின் காங்கேசன் கடற்படை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் மலைச்சாமியின் உடல் மற்றும் அவருடன் மீன்பிடிக்க சென்ற முத்து முனியாண்டி, மூக்கையா ஆகியோரை சரியாக சுமார் இரண்டு மணி அளவில் ஐ.எம்.பி.எல் எல்லையில் இருந்த இந்திய கடற்படை அதிகாரிகளிடம், இலங்கை கடற்படை அதிகாரிகள் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்து காலை நான்கு மணி அளவில் ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்திற்கு இறந்த மீனவரின் உடல் கொண்டுவரப்பட்டது.

இது குறித்து மீனவர் மூக்கையா கூறுகையில், "ஜூலை 31ஆம் தேதி காலை 1.30 மணி அளவில் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்கு சென்றோம். மீன்பிடித்து விட்டு பகல் ஒரு மணி அளவில் திரும்பி வந்து கொண்டிருக்கும் பொழுது, அப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இலங்கை கடற்படையின் கப்பல் எங்கள் படகின் மீது திடீரென மோதியதில் எங்களது படகின் ஒரு பகுதிக்குள் தண்ணீர் புகுந்த உடனே ஒரு நிமிடத்திற்குள் விசைப்படகு கடலுக்குள் மூழ்கியது.

நாங்கள் நான்கு பேரும் தண்ணீரிலேயே சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் மிதந்தோம். மலைச்சாமி மயக்கம் அடைந்தார். அவரை இலங்கை கடற்படை அதிகாரிகள் மீட்டு மருத்துவ உதவி செய்து மாற்று கப்பலில் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி விட்டனர். ராமச்சந்திரனை தேடும் பணியில் சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட கப்பல் தற்போது வரை தேடி வருகின்றனர். எங்களை மாலை 5 மணி அளவில் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று, மாற்று உடை மற்றும் உணவு கொடுத்தனர்.

அதன்பின் ஊர்க்காவல் துறை காவல்நிலையத்தில் இச்சம்பவம் குறித்து வாக்குமூலம் அளித்தோம். மேலும் எனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், மருத்துவமனை அழைத்துச் சென்று மருத்துவ உதவி செய்தனர். இந்திய தூதரக அதிகாரிகள் அழுத்தம் கொடுத்ததன் காரணமாகவே, உடனடியாக ஊர்காவல்துறை நீதிபதி இறந்த மலைச்சாமியின் உடலை ஆய்வு செய்தார். அதன் பின் உடற்கூறு ஆய்வுக்கு பின், உடனடியாக தாயகம் திரும்புவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார்.

அதன் பின் எங்களை மலைச்சாமியின் உடலுடன் இந்திய கடற்படை அதிகாரிகளிடம் நடுக்கடலில் ஒப்படைத்தனர். ஐந்து கப்பல் கொண்டு சுமார் 5 மணி நேரத்திற்கு மேல் தேடியும் ராமச்சந்திரனின் உடல் கிடைக்கவில்லை" என்று கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: விரைவில் இந்தியா - இலங்கை கூட்டு நடவடிக்கை குழு கூட்டம்.. மத்திய அரசு ஐகோர்ட்டில் தகவல்! - fisherman attack by SL navy

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.