ETV Bharat / state

அலுவலகப் பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. சினிமா தயாரிப்பாளர் கைது! - Film producer arrest

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 2, 2024, 9:55 PM IST

Film Producer Sexual Harassment: சென்னையில் தனது அலுவலகத்தில் பணிபுரிந்த பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சினிமா தயாரிப்பாளரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Film Producer
முகமது அலி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் முகமது அலி (30). இவர் சினிமா தயாரிப்பாளர் ஆவார். இவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தில் சென்னையைச் சேர்ந்த 28 வயது பெண் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பணிக்கு சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், அப்பெண் கடந்த மே 13ஆம் தேதி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், முகமது அலி தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறி தொல்லை கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் குடித்த குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து, தன்னிடம் தவறாக நடந்துகொண்டு அதனை வீடியோவாக பதிவு செய்திருப்பதாகவும், அதனால் தான் கர்ப்பம் அடைந்த நிலையில் சத்து மாத்திரைகள் எனக் கூறி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து கருவினை கலைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கருக்கலைப்பு குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் எனவும், தன்னை பாலியல் வன்கொடுமை செய்தபோது பதிவு செய்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்து விடுவேன் என மிரட்டியதாகவும், 5 லட்சம் ரூபாய் வரை பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கீதா, அப்பெண் அளித்த புகாரின் சார்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, சினிமா தயாரிப்பாளரான முகமது அலி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையும் படிங்க:

சென்னை: சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் முகமது அலி (30). இவர் சினிமா தயாரிப்பாளர் ஆவார். இவருடைய தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகத்தில் சென்னையைச் சேர்ந்த 28 வயது பெண் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பணிக்கு சேர்ந்துள்ளார்.

இந்நிலையில், அப்பெண் கடந்த மே 13ஆம் தேதி அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சினிமா தயாரிப்பாளர் முகமது அலி மீது புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், முகமது அலி தனக்கு ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் கூறி தொல்லை கொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் குடித்த குளிர்பானத்தில் மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து, தன்னிடம் தவறாக நடந்துகொண்டு அதனை வீடியோவாக பதிவு செய்திருப்பதாகவும், அதனால் தான் கர்ப்பம் அடைந்த நிலையில் சத்து மாத்திரைகள் எனக் கூறி கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கிக் கொடுத்து கருவினை கலைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கருக்கலைப்பு குறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் எனவும், தன்னை பாலியல் வன்கொடுமை செய்தபோது பதிவு செய்த வீடியோவை இணையத்தில் பதிவேற்றம் செய்து விடுவேன் என மிரட்டியதாகவும், 5 லட்சம் ரூபாய் வரை பணத்தைப் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கீதா, அப்பெண் அளித்த புகாரின் சார்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, சினிமா தயாரிப்பாளரான முகமது அலி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையும் படிங்க:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.