ETV Bharat / state

திருப்பத்தூரில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை உயிரிழப்பு.. தந்தை தற்கொலை! - Tirupathur suicide issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 3:19 PM IST

Tirupathur Suicide issue: நாட்றம்பள்ளி அருகே குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை உயிரிழந்தது. இந்த நிலையில், தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை செய்து கொண்ட நபரின் புகைப்படம்
தற்கொலை செய்து கொண்ட நபரின் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மகாத்மா காந்தி தெருவைச் சேர்ந்தவர் தண்டபாணி மகன் பழனி (32). இவர் ஓசூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 1 வருடங்களுக்கு முன்னர், ஏழரைபட்டி பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவருடன் திருமணமாகி, தற்போது காயத்ரி 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னர் காயத்ரிக்கு வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது, காயத்ரிக்கு குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்து, சில மணி நேரத்திலேயே இறந்துள்ளது. இதன் காரணமாக, பழனி சரியாக சாப்பிடாமல், தூங்காமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தற்கொலை தடுப்பு உதவி மையம் எண்
தற்கொலை தடுப்பு உதவி மையம் எண் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையி, அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் வந்த நாட்றம்பள்ளி போலீசார், பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒரே இரவில் அடுத்து அடுத்து இருவர் கொலை.. தாம்பரம் பகுதியில் பகீர் சம்பவம்!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மகாத்மா காந்தி தெருவைச் சேர்ந்தவர் தண்டபாணி மகன் பழனி (32). இவர் ஓசூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த 1 வருடங்களுக்கு முன்னர், ஏழரைபட்டி பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவருடன் திருமணமாகி, தற்போது காயத்ரி 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னர் காயத்ரிக்கு வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது, காயத்ரிக்கு குறைப்பிரசவத்தில் குழந்தை பிறந்து, சில மணி நேரத்திலேயே இறந்துள்ளது. இதன் காரணமாக, பழனி சரியாக சாப்பிடாமல், தூங்காமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தற்கொலை தடுப்பு உதவி மையம் எண்
தற்கொலை தடுப்பு உதவி மையம் எண் (Credits - ETV Bharat Tamil Nadu)

இந்த நிலையி, அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் வந்த நாட்றம்பள்ளி போலீசார், பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஒரே இரவில் அடுத்து அடுத்து இருவர் கொலை.. தாம்பரம் பகுதியில் பகீர் சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.