ETV Bharat / state

தந்தை கண் முன்னே டிராக்டர் ரோலரில் சிக்கி மகன் உயிரிழப்பு! - boy died for trapped tractor roller

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 30, 2024, 5:42 PM IST

Boy Died for Trapped in Tractor Roller: வேலூர் அருகே விவசாய நிலத்தில் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தபோது தந்தையின் கண் முன்னே டிராக்டரின் ரோலரில் சிக்கி 8 வயது மகன் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டிராக்டர் ரோலரில் சிக்கி உயிரிழந்த சிறுவன் புகைப்படம்
டிராக்டர் ரோலரில் சிக்கி உயிரிழந்த சிறுவன் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

வேலூர்: வேலூர் மாவட்டம், லத்தேரி அடுத்த கூக்கலபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன் - கவிதா தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இளைய மகன் பரத்குமார் (8) கூக்கலபள்ளி அரசு ஆரம்பப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இன்று விடுமுறை நாள் என்பதால் தனது தந்தையுடன் அவர் வயலுக்குச் சென்றுள்ளார். அவரது தந்தை விவசாய நிலத்தில் வேர்க்கடலை விளைவிப்பதற்காக, டிராக்டர் மூலம் உழுவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ஆதிகேசவன் என்பவரை அழைத்துச் சென்றுள்ளார். அவர் டிராக்டரை கொண்டு வந்து நிலத்தில் உழுவதற்காக நிறுத்தி வைத்திருந்தபோது, பரத்குமார் டிராக்டரின் பின்புறம் உள்ள ரோலர் மீது ஏறி நின்றுள்ளார்.

அப்போது ஆதி கேசவன் டிராக்டரை நிலத்தில் உழுவதற்காக எடுத்தபோது நிலை தடுமாறி பரத்குமார் கீழே விழுந்துள்ளார். அதில், டிராக்டர் ரோலரில் சிக்கி தந்தையின் கண் முன்னே உடல் நசுங்கியுள்ளது. உடனே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பரத்குமாரை மீட்க முயற்சித்துள்ளனர். ஆனால், பரத்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பின்னர், சம்பவம் குறித்து லத்தேரி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சிறுவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவை போக்சோ வழக்கு; பணி ஓய்வுக்கு முந்தைய நாளில் சஸ்பண்ட் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்..!

வேலூர்: வேலூர் மாவட்டம், லத்தேரி அடுத்த கூக்கலபள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன் - கவிதா தம்பதி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில், இளைய மகன் பரத்குமார் (8) கூக்கலபள்ளி அரசு ஆரம்பப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இன்று விடுமுறை நாள் என்பதால் தனது தந்தையுடன் அவர் வயலுக்குச் சென்றுள்ளார். அவரது தந்தை விவசாய நிலத்தில் வேர்க்கடலை விளைவிப்பதற்காக, டிராக்டர் மூலம் உழுவதற்காக அதே பகுதியைச் சேர்ந்த ஆதிகேசவன் என்பவரை அழைத்துச் சென்றுள்ளார். அவர் டிராக்டரை கொண்டு வந்து நிலத்தில் உழுவதற்காக நிறுத்தி வைத்திருந்தபோது, பரத்குமார் டிராக்டரின் பின்புறம் உள்ள ரோலர் மீது ஏறி நின்றுள்ளார்.

அப்போது ஆதி கேசவன் டிராக்டரை நிலத்தில் உழுவதற்காக எடுத்தபோது நிலை தடுமாறி பரத்குமார் கீழே விழுந்துள்ளார். அதில், டிராக்டர் ரோலரில் சிக்கி தந்தையின் கண் முன்னே உடல் நசுங்கியுள்ளது. உடனே, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பரத்குமாரை மீட்க முயற்சித்துள்ளனர். ஆனால், பரத்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பின்னர், சம்பவம் குறித்து லத்தேரி காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சிறுவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கோவை போக்சோ வழக்கு; பணி ஓய்வுக்கு முந்தைய நாளில் சஸ்பண்ட் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.