ETV Bharat / state

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குறித்து கடந்த ஆண்டே ஈபிஎஸ் கடிதம்.. அரசின் அலட்சியத்தால் வந்த ஆபத்து என சாடல்! - Illegal liquor issue

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 21, 2024, 11:23 AM IST

Kallakurichi Illegal liquor issue: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கடந்த வருடம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய புழக்கம் அதிகமாக இருப்பதாக சட்டப்பேரவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளது தெரியவந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி கடிதம்
எடப்பாடி பழனிசாமி கடிதம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 100க்கும் மேற்பட்டோருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் ஆகியவற்றில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 19 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்தவர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த விவகாரத்தில் கள்ளச்சாராயம் விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனி இது போன்ற சம்பவம் ஏற்படாதவாறு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி போலீசார் கள்ளச்சாராயம் விற்றதாக இதுவரை 4 பேரை கைது செய்துள்ளனர். இதனிடையே கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

முன்னதாக கடந்தாண்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை சபாநாயகருக்கு கள்ளச்சாராய விவகாரத்தால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில், "கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியம், கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரது மகன் ஜெகன்ஸ்ரீ என்பவர் 25.03.2023 அன்று காலை 8 மணி அளவில் தனது மகனை காணவில்லை என புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் புகார் தொடர்பாக கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்த மூன்று நபர்களை பிடித்து விசாரித்ததில் ஜெகன்ஸ்ரீ என்பவரை மது அருந்த அழைத்து சென்று மது பாட்டிலால் தலையில் அடித்து, கழுத்தில் குத்தி கூத்தக்குடியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் புதைத்து விட்டனர்.

எனவே இப்பகுதியில் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் பெருமளவில் புழக்கத்தில் உள்ளதால் உடனடியாக அதனை தடுத்து நிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்து விவாதம் செய்ய வேண்டும்" என கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த வருடம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்திற்கு இதுவரை 50 பேர் பலி; 115 பேருக்கு தொடர் சிகிச்சை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - kallakurichi liquor death

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 100க்கும் மேற்பட்டோருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் ஆகியவற்றில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் இதுவரை 50 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 19 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்தவர்களின் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த விவகாரத்தில் கள்ளச்சாராயம் விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனி இது போன்ற சம்பவம் ஏற்படாதவாறு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி போலீசார் கள்ளச்சாராயம் விற்றதாக இதுவரை 4 பேரை கைது செய்துள்ளனர். இதனிடையே கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

முன்னதாக கடந்தாண்டு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவை சபாநாயகருக்கு கள்ளச்சாராய விவகாரத்தால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில், "கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஒன்றியம், கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரது மகன் ஜெகன்ஸ்ரீ என்பவர் 25.03.2023 அன்று காலை 8 மணி அளவில் தனது மகனை காணவில்லை என புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் புகார் தொடர்பாக கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்த மூன்று நபர்களை பிடித்து விசாரித்ததில் ஜெகன்ஸ்ரீ என்பவரை மது அருந்த அழைத்து சென்று மது பாட்டிலால் தலையில் அடித்து, கழுத்தில் குத்தி கூத்தக்குடியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் புதைத்து விட்டனர்.

எனவே இப்பகுதியில் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் பெருமளவில் புழக்கத்தில் உள்ளதால் உடனடியாக அதனை தடுத்து நிறுத்த வேண்டியதன் அவசியம் குறித்து விவாதம் செய்ய வேண்டும்" என கூறியுள்ளார்.

இந்நிலையில் கடந்த வருடம் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து 21 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்திற்கு இதுவரை 50 பேர் பலி; 115 பேருக்கு தொடர் சிகிச்சை.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! - kallakurichi liquor death

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.