ETV Bharat / state

முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை..திராவிட இதழியல் பயிற்சிக் களம்..புகழஞ்சலி நிகழ்ச்சியில் ஸ்டாலின் அறிவிப்பு!

முரசொலி செல்வம் பெயரால் விரைவில் அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டு, திராவிட இயக்கத்தைச் சார்ந்த படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் ஆண்டுதோறும் திமுக முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என்று திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கூறினார்.

முரசொலி செல்வம் புகழஞ்சலி நிகழ்ச்சியில் பேசும் திமுக தலைவர் ஸ்டாலின்
முரசொலி செல்வம் புகழஞ்சலி நிகழ்ச்சியில் பேசும் திமுக தலைவர் ஸ்டாலின் (Credits - ETV Bharat Tamilnadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 6 hours ago

சென்னை: மறைந்த முரசொலி செல்வத்தின் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:

முரசொலி செல்வம் அவர்கள் மறைந்துவிட்டார் என்பதை எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை; ஏன் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பேசுவதால் அவர் திரும்பி வந்துவிடப் போகிறாரா? என்ற அந்த ஏக்கமும் என்னுடைய நெஞ்சத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது.

அவர் மறைவதற்கு முதல் நாள் மாலை என்னுடைய தங்கை செல்வியிடத்தில் பேசியிருக்கிறார். கலாநிதி மாறனிடத்தில் பேசியிருக்கிறார். அவருடைய மகள் எழிலரசியிடம் பேசியிருக்கிறார். என்னுடைய தம்பி தமிழரசு உடன் பேசியிருக்கிறார். ஏன் என்னிடத்திலும் பேசினார். “நாளை நான் சென்னைக்கு புறப்பட்டு வருகிறேன்” என்று சொன்னார்; வந்தார். உயிருடன் வரவில்லை. உடல் மட்டும்தான் வந்தது. நம்மையெல்லாம் ஒரு சோகச் சூழ்நிலையில் அவர் தவிக்க விட்டுவிட்டுப் போய்விட்டார்.

என்னை ஊக்கப்படுத்தியவர்: நம்முடைய தலைவர் கலைஞர் மறைவிற்குப் பிறகு நம்முடையப் பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியரின் மறைவிற்குப் பிறகு, நம்முடைய முரசொலி செல்வம் அவர்களின் மறைவிற்குப் பிறகு எனது மனம் உடைந்து சுக்குநூறு ஆகியிருக்கிறது. அதிலிருந்து எப்படி மீளப்போகிறோம் என்பதை நான் எண்ணி எண்ணித் தவித்துக்கொண்டு இருக்கிறேன்.

எதற்காகச் சொல்கிறேன் என்றால், பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தபோதும், கோபாலபுரத்தில் இளைஞர் திமுக என்ற அமைப்பை தொடங்கியபோதும் எனக்குத் துணையாக இருந்தவர். எப்படி கூட்டம் நடத்த வேண்டும். எப்படி பேச்சாளரை அழைத்து வர வேண்டும். எப்படி நோட்டீஸ் போட வேண்டும். எப்படி போஸ்டர் அடிக்க வேண்டும். என்பதையெல்லாம் எனக்குக் கற்றுக்கொடுத்தவர். அதற்குப் பிறகு இளைஞர் அணியாக உருவாகியபோது அப்போதும் எனக்குத் துணை நின்று என்னை ஊக்கப்படுத்தியவர், உற்சாகப்படுத்தியவர்.

ஒரு மாநாடு என்று சொன்னால், கட்சியின் பெரிய கூட்டம் என்று சொன்னால், ஏதேனும் கழக நிகழ்ச்சி என்று சொன்னால், ஏதேனும் நிகழ்ச்சிக்குப் போகிறேன் என்றால் அதைக் கேள்விப்பட்டு முதல்நாளே என்னை அழைத்து ஒரு சீட்டை கொடுப்பார். என்ன பேசவேண்டும்; எப்படி பேசவேண்டும்; என்ன பாயிண்டில் பேசவேண்டும்; அதை எப்படி ஏற்ற இறக்கத்தோடு பேசவேண்டும் என்று எனக்குப் பயிற்சி அளித்தவர். அப்படிப்பட்டவர் இன்றைக்கு இல்லை என்று எண்ணும்போது நான் வேதனைப்படுகிறேன்.

கழகத்தின் முக்கியமான நிகழ்ச்சிகள் மட்டும் அல்ல, தேர்தல் களத்தில் பிரசாரக் கூட்டங்கள் அல்லது அரசு நிகழ்ச்சிகள் என நான் கலந்து கொள்ளும் அத்தனை நிகழ்ச்சிகளையும் நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்வார்கள். அந்தக் காட்சிகளை முழுமையாகப் பார்ப்பார். அந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு நான் காரில் வந்து ஏறுவேன். அவ்வாறு ஏறியவுடன் முதல் அழைப்பு அவருடைய அழைப்பாகத்தான் இருக்கும். அவர் அழைக்காவிட்டாலும் நான் அழைத்து விடுவேன்.

அவர் அந்த அழைப்பில், “இப்படி எல்லாம் பேசினாய், மிகவும் சிறப்பாக இருந்தது; எழுச்சியாக இருந்தது. இன்னும் இவ்வாறு மாற்றிப் பேசி இருக்கலாம்; இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசியிருக்கலாம்” என்றெல்லாம் அறிவுரை சொல்வார். ஒன்று விடாமல் பார்த்து விடுவார். தொடர்ந்து எனக்கு அறிவுரைகளை வழங்கி வந்தார். காலை, மாலை என்று இரண்டு முறையாவது எனக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுகின்ற வழக்கத்தை நாங்கள் பெற்றிருந்தோம்.

தனக்கென்று எதையும் எதிர்பார்க்காமல், அவன் நல்லவனோ – கெட்டவனோ, அவன் எதிரியா - நண்பனா என்று அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஏதேனும் ஒரு சூழ்நிலையில் அவர்களுக்கு நல்ல காரியத்தைத்தான் அவர் தொடர்ந்து செய்திருக்கிறார். அதுதான் உண்மை.

‘முரசொலி: சில நினைவலைகள்‘ பற்றிக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். 100 கட்டுரைகளை அதில் எழுதி, அது புத்தக வடிவில் கூட வந்திருக்கிறது. அதைக்கூட நம்முடைய ஆசிரியர் அவர்கள் பேசுகிறபோது ‘பொக்கிஷம்‘ என்று சொன்னார்கள். இளைஞர்களுக்கெல்லாம் அது ‘பாடம்‘ என்று சொன்னார்கள்.

முரசொலி செல்வம் அவர்கள் பெயரால் மிக விரைவில் அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டு, திராவிட இயக்கத்தைச் சார்ந்த படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் ஆண்டுதோறும் விருதுகள் வழங்குவது, அந்தப் பரிசை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் திமுக முப்பெரும் விழா நிகழ்ச்சியில் வழங்குவது‘ என முடிவு செய்திருக்கிறோம்.

இதைத்தொடர்ந்து இங்கு நம்முடைய ஆசிரியர் அவர்கள் வைத்த வேண்டுகோளான, முரசொலி செல்வம் அவர்களின் பெயரில் ’திராவிட இதழியல் பயிற்சிக் களம் ஒன்றை கல்லூரியாக உருவாக்க வேண்டும்’ என்ற அந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

சென்னை: மறைந்த முரசொலி செல்வத்தின் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:

முரசொலி செல்வம் அவர்கள் மறைந்துவிட்டார் என்பதை எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை; ஏன் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பேசுவதால் அவர் திரும்பி வந்துவிடப் போகிறாரா? என்ற அந்த ஏக்கமும் என்னுடைய நெஞ்சத்தை அடைத்துக் கொண்டிருக்கிறது.

அவர் மறைவதற்கு முதல் நாள் மாலை என்னுடைய தங்கை செல்வியிடத்தில் பேசியிருக்கிறார். கலாநிதி மாறனிடத்தில் பேசியிருக்கிறார். அவருடைய மகள் எழிலரசியிடம் பேசியிருக்கிறார். என்னுடைய தம்பி தமிழரசு உடன் பேசியிருக்கிறார். ஏன் என்னிடத்திலும் பேசினார். “நாளை நான் சென்னைக்கு புறப்பட்டு வருகிறேன்” என்று சொன்னார்; வந்தார். உயிருடன் வரவில்லை. உடல் மட்டும்தான் வந்தது. நம்மையெல்லாம் ஒரு சோகச் சூழ்நிலையில் அவர் தவிக்க விட்டுவிட்டுப் போய்விட்டார்.

என்னை ஊக்கப்படுத்தியவர்: நம்முடைய தலைவர் கலைஞர் மறைவிற்குப் பிறகு நம்முடையப் பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியரின் மறைவிற்குப் பிறகு, நம்முடைய முரசொலி செல்வம் அவர்களின் மறைவிற்குப் பிறகு எனது மனம் உடைந்து சுக்குநூறு ஆகியிருக்கிறது. அதிலிருந்து எப்படி மீளப்போகிறோம் என்பதை நான் எண்ணி எண்ணித் தவித்துக்கொண்டு இருக்கிறேன்.

எதற்காகச் சொல்கிறேன் என்றால், பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தபோதும், கோபாலபுரத்தில் இளைஞர் திமுக என்ற அமைப்பை தொடங்கியபோதும் எனக்குத் துணையாக இருந்தவர். எப்படி கூட்டம் நடத்த வேண்டும். எப்படி பேச்சாளரை அழைத்து வர வேண்டும். எப்படி நோட்டீஸ் போட வேண்டும். எப்படி போஸ்டர் அடிக்க வேண்டும். என்பதையெல்லாம் எனக்குக் கற்றுக்கொடுத்தவர். அதற்குப் பிறகு இளைஞர் அணியாக உருவாகியபோது அப்போதும் எனக்குத் துணை நின்று என்னை ஊக்கப்படுத்தியவர், உற்சாகப்படுத்தியவர்.

ஒரு மாநாடு என்று சொன்னால், கட்சியின் பெரிய கூட்டம் என்று சொன்னால், ஏதேனும் கழக நிகழ்ச்சி என்று சொன்னால், ஏதேனும் நிகழ்ச்சிக்குப் போகிறேன் என்றால் அதைக் கேள்விப்பட்டு முதல்நாளே என்னை அழைத்து ஒரு சீட்டை கொடுப்பார். என்ன பேசவேண்டும்; எப்படி பேசவேண்டும்; என்ன பாயிண்டில் பேசவேண்டும்; அதை எப்படி ஏற்ற இறக்கத்தோடு பேசவேண்டும் என்று எனக்குப் பயிற்சி அளித்தவர். அப்படிப்பட்டவர் இன்றைக்கு இல்லை என்று எண்ணும்போது நான் வேதனைப்படுகிறேன்.

கழகத்தின் முக்கியமான நிகழ்ச்சிகள் மட்டும் அல்ல, தேர்தல் களத்தில் பிரசாரக் கூட்டங்கள் அல்லது அரசு நிகழ்ச்சிகள் என நான் கலந்து கொள்ளும் அத்தனை நிகழ்ச்சிகளையும் நேரலையாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பு செய்வார்கள். அந்தக் காட்சிகளை முழுமையாகப் பார்ப்பார். அந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு நான் காரில் வந்து ஏறுவேன். அவ்வாறு ஏறியவுடன் முதல் அழைப்பு அவருடைய அழைப்பாகத்தான் இருக்கும். அவர் அழைக்காவிட்டாலும் நான் அழைத்து விடுவேன்.

அவர் அந்த அழைப்பில், “இப்படி எல்லாம் பேசினாய், மிகவும் சிறப்பாக இருந்தது; எழுச்சியாக இருந்தது. இன்னும் இவ்வாறு மாற்றிப் பேசி இருக்கலாம்; இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசியிருக்கலாம்” என்றெல்லாம் அறிவுரை சொல்வார். ஒன்று விடாமல் பார்த்து விடுவார். தொடர்ந்து எனக்கு அறிவுரைகளை வழங்கி வந்தார். காலை, மாலை என்று இரண்டு முறையாவது எனக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுகின்ற வழக்கத்தை நாங்கள் பெற்றிருந்தோம்.

தனக்கென்று எதையும் எதிர்பார்க்காமல், அவன் நல்லவனோ – கெட்டவனோ, அவன் எதிரியா - நண்பனா என்று அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், ஏதேனும் ஒரு சூழ்நிலையில் அவர்களுக்கு நல்ல காரியத்தைத்தான் அவர் தொடர்ந்து செய்திருக்கிறார். அதுதான் உண்மை.

‘முரசொலி: சில நினைவலைகள்‘ பற்றிக் குறிப்பிட்டுச் சொன்னார்கள். 100 கட்டுரைகளை அதில் எழுதி, அது புத்தக வடிவில் கூட வந்திருக்கிறது. அதைக்கூட நம்முடைய ஆசிரியர் அவர்கள் பேசுகிறபோது ‘பொக்கிஷம்‘ என்று சொன்னார்கள். இளைஞர்களுக்கெல்லாம் அது ‘பாடம்‘ என்று சொன்னார்கள்.

முரசொலி செல்வம் அவர்கள் பெயரால் மிக விரைவில் அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டு, திராவிட இயக்கத்தைச் சார்ந்த படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் ஆண்டுதோறும் விருதுகள் வழங்குவது, அந்தப் பரிசை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் திமுக முப்பெரும் விழா நிகழ்ச்சியில் வழங்குவது‘ என முடிவு செய்திருக்கிறோம்.

இதைத்தொடர்ந்து இங்கு நம்முடைய ஆசிரியர் அவர்கள் வைத்த வேண்டுகோளான, முரசொலி செல்வம் அவர்களின் பெயரில் ’திராவிட இதழியல் பயிற்சிக் களம் ஒன்றை கல்லூரியாக உருவாக்க வேண்டும்’ என்ற அந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என்று மு.க.ஸ்டாலின் பேசினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.