ETV Bharat / state

சபாநாயகர் அப்பாவு மீதான கிரிமினல் அவதூறு வழக்கு: 2 வாரத்தில் உத்தரவு பிறப்பிக்க உயர்நீதிமன்றம் ஆணை - SPEAKER APPAVU HIGH COURT CASE

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 24, 2024, 12:58 PM IST

SPEAKER APPAVU CASE: சபாநாயகர் அப்பாவு மீதான கிரிமினல் அவதூறு வழக்கை விசாரித்து 2 வாரத்திற்குள் உத்தரவு பிறப்பிக்க அமர்வு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்(கோப்புப்படம்)
சென்னை உயர்நீதிமன்றம்(கோப்புப்படம்) (CREDITS- ETV Bharat Tamil Nadu)

சென்னை: கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சட்டப்பேரவை சபாநாயகரும், ராதாபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு, 2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 40 பேர் திமுகவில் சேர தயாராக இருப்பதாக கூறினார்.

மேலும், அதிமுகவின் முக்கியத் தலைவர் ஒருவர் தன்னைத் தொடர்பு கொண்டதாகவும், இதுக்குறித்த செய்தியை திமுக கட்சி தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் கூறினார். இதனையடுத்து அ.தி.மு.க.வை களங்கப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இவ்வாறு சபாநாயகர் பேசியுள்ளார் என அக்கட்சியின் வழக்கறிஞர் பாபு முருகவேல், சபாநாயகர் மீது மானநஷ்ட வழக்கு தொடுத்தார்.

இதில் சபாநாயகருக்கு எதிராக அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழும்பூர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளுக்களை சிறப்பு நீதிமன்றம் மட்டுமே விசாரிக்க முடியும் என வழக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை உரிய நீதிமன்றத்துக்கு மாற்றும் அதிகாரம் கொண்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றாமல், உயர்நீதிமன்றத்தை அணுக முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதன் பின்னர், அமர்வு நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று ஜூன் 24ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், 2 வாரங்களில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: சபைக்குள் வெளிமேடையில் பேசுவதைப் போல பேசக்கூடாது! - அமைச்சருக்கும் சபாநாயகருக்கும் இடையே காரசார விவாதம்

சென்னை: கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சட்டப்பேரவை சபாநாயகரும், ராதாபுரம் திமுக சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு, 2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 40 பேர் திமுகவில் சேர தயாராக இருப்பதாக கூறினார்.

மேலும், அதிமுகவின் முக்கியத் தலைவர் ஒருவர் தன்னைத் தொடர்பு கொண்டதாகவும், இதுக்குறித்த செய்தியை திமுக கட்சி தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் சபாநாயகர் கூறினார். இதனையடுத்து அ.தி.மு.க.வை களங்கப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இவ்வாறு சபாநாயகர் பேசியுள்ளார் என அக்கட்சியின் வழக்கறிஞர் பாபு முருகவேல், சபாநாயகர் மீது மானநஷ்ட வழக்கு தொடுத்தார்.

இதில் சபாநாயகருக்கு எதிராக அவதூறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழும்பூர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் எம்.பி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளுக்களை சிறப்பு நீதிமன்றம் மட்டுமே விசாரிக்க முடியும் என வழக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை உரிய நீதிமன்றத்துக்கு மாற்றும் அதிகாரம் கொண்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆனால் வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றாமல், உயர்நீதிமன்றத்தை அணுக முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதன் பின்னர், அமர்வு நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று ஜூன் 24ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், 2 வாரங்களில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: சபைக்குள் வெளிமேடையில் பேசுவதைப் போல பேசக்கூடாது! - அமைச்சருக்கும் சபாநாயகருக்கும் இடையே காரசார விவாதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.