ETV Bharat / state

ஒகேனக்கல் நீர்வரத்து 53 ஆயிரம் கன அடியாக சரிவு! - Hogenakkal water level

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 3:37 PM IST

Hogenakkal Water Level: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 75 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், இன்று பகல் 1 மணி நிலவரப்படி 53,000 கனஅடியாக சரிந்துள்ளது.

ஒகேனக்கல்
ஒகேனக்கல் (Credits- ETV Bharat Tamil Nadu)

தருமபுரி: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, கர்நாடகாவில் இருந்து அணைக்கு வந்து சேரும் நீரின் அளவைப் பொறுத்து அதிகரித்தும், குறைந்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீரின் அளவு 75 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், இன்று நீர்வரத்து 5,000 கன அடி நீர் குறைந்து, காலை நிலவரப்படி 70 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளது. மேலும், நீர் வரத்து பகல் 1 மணி நிலவரப்படி 53,000 கனஅடியாக மேலும் சரிந்தது.

இவ்வாறு நீா்வரத்து 53 ஆயிரம் கனஅடிக்கு மேல் உள்ளதால், ஒகேனக்கல் மெயின் அருவி மற்றும் ஆற்றுப் பகுதிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் ஏழாவது நாளாக தடை விதித்துள்ளது. மேலும், நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி நீரில் மூழ்கி ஆற்றுப்பகுதியும், அருவிப் பகுதியும் ஒரே நீர்மட்ட அளவில் காணப்படுகிறது.

அதேபோல், ஐவர் பவனி சினி அருவி உள்ளிட்ட பகுதிகள் நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், கபினி அணையில் இருந்து இன்று 20 ஆயிரத்து 386 கன அடி நீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 45,327 கன அடி நீரும் என 58,779 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தருமபுரி: கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு, கர்நாடகாவில் இருந்து அணைக்கு வந்து சேரும் நீரின் அளவைப் பொறுத்து அதிகரித்தும், குறைந்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீரின் அளவு 75 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், இன்று நீர்வரத்து 5,000 கன அடி நீர் குறைந்து, காலை நிலவரப்படி 70 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளது. மேலும், நீர் வரத்து பகல் 1 மணி நிலவரப்படி 53,000 கனஅடியாக மேலும் சரிந்தது.

இவ்வாறு நீா்வரத்து 53 ஆயிரம் கனஅடிக்கு மேல் உள்ளதால், ஒகேனக்கல் மெயின் அருவி மற்றும் ஆற்றுப் பகுதிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தருமபுரி மாவட்ட நிர்வாகம் ஏழாவது நாளாக தடை விதித்துள்ளது. மேலும், நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி நீரில் மூழ்கி ஆற்றுப்பகுதியும், அருவிப் பகுதியும் ஒரே நீர்மட்ட அளவில் காணப்படுகிறது.

அதேபோல், ஐவர் பவனி சினி அருவி உள்ளிட்ட பகுதிகள் நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், கபினி அணையில் இருந்து இன்று 20 ஆயிரத்து 386 கன அடி நீரும், கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 45,327 கன அடி நீரும் என 58,779 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஈடிவி பாரத் தமிழ் நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.