ETV Bharat / state

தமிழகத்தை உலுக்கிய நாவரசு படுகொலை.. ராகிங் தடுப்பு சட்டம் உருவான பின்னணி..!

தமிழகத்தில் ராகிங் தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டதற்கு காரணமாக இருந்த மருத்துவ மாணவர் படுகொலை சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.

மாணவர்கள் ராகிங்(மாதிரி புகைப்படம்)
மாணவர்கள் ராகிங்(மாதிரி புகைப்படம்) (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

சென்னை: தமிழகத்தில் ராகிங் தடுப்பு சட்டம் எப்போது கொண்டு வரப்பட்டது என்பதையும், அந்த சட்டம் கொண்டு வரப்பட காரணமாக இருந்த சிதம்பரம் மருத்துவ மாணவர் கொலை எப்படி நிகழ்ந்தது என்பதையும் தெரிந்து கொள்வோம்.

நாவரசு கொலை செய்யப்பட்டது எப்படி?: தமிழகத்தில் கடந்த 1996ம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை மருத்துவ கல்லூரியில் படித்த முதலாமாண்டு மருத்துவ மாணவன் பொன் நாவரசு, விடுதியில் தங்கியிருந்த சக மாணவர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கடலூர் மாவட்ட நீதிமன்றம் 1998ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் மிகவும் கொடூரமான முறையில் நாவரசு கொலை நடந்திருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

இதன்படி, கொலையான நாவரசுவின் உடல் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். உறுப்புகள் இல்லாத முண்டத்தை ஒரு சூட்கேசிலும், உடல் உறுப்புகளை மற்றொரு சூட்கேசிலும் கொலையாளி எடுத்துள்ளார். நாவரசுவின் தலையை ஒரு ஜிப் பேக்கில் அடைத்து எடுத்துள்ளார். நாவரசு உடலில் இருந்த மோதிரம், வாட்ச் ஆகியவற்றை எடுத்துக் கொண்ட பின்னர் கல்லூரி விடுதியின் மேல் தளத்திற்குச் சென்று அவரது உடைகளை எரித்துள்ளார்.

தலை இருந்த பையை கால்வாயில் வீசி எறிந்துள்ளார். பின்னர் இரண்டு சூட்கேஸ்களுடன் சென்று தஞ்சையிலிருந்து, சென்னை நோக்கிச் சென்ற ரயிலில் ஏறி புறப்பட்டுள்ளார். ரயில் கடலூரைத் தாண்டும் போது உடலுறுப்புகளை ஆற்றில் வீசியுள்ளார். பின்னர் சென்னை சென்று தாம்பரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பேருந்தின் பின்னிருக்கையில் உறுப்புகள் இல்லாத முண்டத்துடன் இருந்த சூட்கேசை வைத்து விட்டு கொலையாளி சிதம்பரம் திரும்பி விட்டதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த கொலையை கொலையாளி தனியாக செய்திருக்க முடியாது எனவும், உடல்களை பல்வேறு இடங்களில் வீசிச் செல்ல மற்றவர்களின் துணை கண்டிப்பாக தேவைப்பட்டிருக்கும் எனவும் கூறப்பட்டது. ஆனால், காவல்துறையின் பல கட்ட விசாரணையில் மற்ற மாணவர்களுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைக்காததால் ஜான் டேவிட் மீது மட்டும் கொலை வழக்கு (ஐபிசி 302) மற்றும் தடயங்களை அழிக்க முயற்சித்ததாக (ஐபிசி 364) வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

விடுதலை: இந்த வழக்கை விசாரித்த கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், ஜான் டேவிட்டுக்கு 1998ம் ஆண்டு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் (ஓய்வு) நீதிபதி பாலசுப்ரமணியன், ஜான் டேவிட் மீதான குற்றத்திற்கு போதிய ஆதாரங்களை காவல்துறை தாக்கல் செய்யவில்லை என தெரிவித்து கடந்த 2001ம் ஆண்டு அவரை விடுதலை செய்தது.

இந்த விடுதலையை எதிர்த்து காவல்துறை சார்பில் தொடரப்பட்ட மேல் முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜான் டேவிட்டின் இரட்டை ஆயுள் தண்டனையை ஒரு ஆயுள் தண்டனையாக குறைத்து, சம்மந்தபட்ட நீதிமன்றத்தில் சரணடைய 2011ம் ஆண்டு உத்தரவிட்டது. தற்போது வரை 17 ஆண்டுகளாக ஜான் டேவிட் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ராகிங் தடுப்பு சட்டம் 1997: இந்தியாவையே உலுக்கிய மாணவர் நாவரசுவின் படுகொலை, கல்வி நிறுவனங்களில் ஏற்படும் ராகிங் கொடுமைக்கு முற்றுப்புள்ளியாக அமைந்தது. ராகிங் கொடுமைகளை தடுக்க இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1997ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி கொண்டுவரப்பட்ட "தமிழ்நாடு ராகிங் தடுப்பு சட்டத்தின்" படி நேரடியாக பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் நடந்து கொள்வது, அச்சுறுத்துவது, உடல்ரீதியாக துன்புறுத்துவது, விருப்பமில்லாத சில செயல்களை செய்ய தூண்டுவது உள்ளிட்டவை குற்றமாக சேர்க்கப்பட்டது.

கல்வி நிறுவனங்களின் உள்ளேயும், வெளியேயும் சக மாணவர்களை கிண்டல் செய்வது தடை செய்யப்பட்டது. ராகிங் செய்தது நிரூபிக்கப்பட்டால், குறைந்தது 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கலாம். பிரிவு 4-ன்படி ராகிங் செய்து ஒருவர் தண்டிக்கப்பட்டால், சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து உடனடியாக நீக்கப்படுவார். வேறு எந்த கல்வி நிறுவனத்திலும் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்.

ராகிங் தொடர்பாக புகார்கள் வந்தால், உடனே சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனம் விசாரணை நடத்த வேண்டும். விசாரணையில் உண்மை இருக்கும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட மாணவரை கல்லூரியில் இருந்து உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும்.

ராகிங் புகார் தொடர்பாக சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் முடிவே இறுதியானது. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க தவறினால், கல்வி நிறுவனமும் துணை போனதாக கருதி கல்வி நிறுவனத்துக்கும் தண்டனை விதிக்கலாம் என சட்டம் கூறுகிறது.

வழக்கறிஞர் நடராஜன், வழக்கறிஞர் கே.எம்.விஜயன் புகைப்படம்
வழக்கறிஞர் நடராஜன், வழக்கறிஞர் கே.எம்.விஜயன் புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கே.எம் விஜயனிடம், ஏன் இன்னும் கல்வி நிறுவனங்களில் ராகிங் தொடர்கிறது? அதை தடுக்க என்ன செய்ய வேண்டும்? என கேட்ட போது, ''தமிழகத்தில் தற்போது ராகிங் கொடுமைகள் பெரிய அளவில் இல்லை. புகார்கள் வந்தால் கல்வி நிறுவனத்தில் இருந்து நீக்கப்படுவோம் என்ற பயத்தில் மாணவர்கள் ராகிங் செய்வது குறைந்துள்ளது. முழுமையாக தடுப்பது என்பது நடைமுறை சாத்தியமற்றது'' என்றார்.

அதேபோல, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நடராஜன் கூறுகையில், ''கல்வி நிறுவனங்களில் ராகிங்காக கொலை நடக்குமா? என்ற விவாதத்தை மக்களிடம் ஏற்படுத்தியது. அதன் தாக்கமே ராகிங் தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. எந்த சட்டமும் குற்றங்களை முழுமையாக ஒழித்து விட முடியாது. சம்மந்தப்பட்ட மாணவர்கள் திருந்தினால் மட்டுமே ராகிங் போன்ற கொடுமைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்'' என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

சென்னை: தமிழகத்தில் ராகிங் தடுப்பு சட்டம் எப்போது கொண்டு வரப்பட்டது என்பதையும், அந்த சட்டம் கொண்டு வரப்பட காரணமாக இருந்த சிதம்பரம் மருத்துவ மாணவர் கொலை எப்படி நிகழ்ந்தது என்பதையும் தெரிந்து கொள்வோம்.

நாவரசு கொலை செய்யப்பட்டது எப்படி?: தமிழகத்தில் கடந்த 1996ம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை மருத்துவ கல்லூரியில் படித்த முதலாமாண்டு மருத்துவ மாணவன் பொன் நாவரசு, விடுதியில் தங்கியிருந்த சக மாணவர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கடலூர் மாவட்ட நீதிமன்றம் 1998ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் மிகவும் கொடூரமான முறையில் நாவரசு கொலை நடந்திருப்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

இதன்படி, கொலையான நாவரசுவின் உடல் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். உறுப்புகள் இல்லாத முண்டத்தை ஒரு சூட்கேசிலும், உடல் உறுப்புகளை மற்றொரு சூட்கேசிலும் கொலையாளி எடுத்துள்ளார். நாவரசுவின் தலையை ஒரு ஜிப் பேக்கில் அடைத்து எடுத்துள்ளார். நாவரசு உடலில் இருந்த மோதிரம், வாட்ச் ஆகியவற்றை எடுத்துக் கொண்ட பின்னர் கல்லூரி விடுதியின் மேல் தளத்திற்குச் சென்று அவரது உடைகளை எரித்துள்ளார்.

தலை இருந்த பையை கால்வாயில் வீசி எறிந்துள்ளார். பின்னர் இரண்டு சூட்கேஸ்களுடன் சென்று தஞ்சையிலிருந்து, சென்னை நோக்கிச் சென்ற ரயிலில் ஏறி புறப்பட்டுள்ளார். ரயில் கடலூரைத் தாண்டும் போது உடலுறுப்புகளை ஆற்றில் வீசியுள்ளார். பின்னர் சென்னை சென்று தாம்பரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பேருந்தின் பின்னிருக்கையில் உறுப்புகள் இல்லாத முண்டத்துடன் இருந்த சூட்கேசை வைத்து விட்டு கொலையாளி சிதம்பரம் திரும்பி விட்டதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த கொலையை கொலையாளி தனியாக செய்திருக்க முடியாது எனவும், உடல்களை பல்வேறு இடங்களில் வீசிச் செல்ல மற்றவர்களின் துணை கண்டிப்பாக தேவைப்பட்டிருக்கும் எனவும் கூறப்பட்டது. ஆனால், காவல்துறையின் பல கட்ட விசாரணையில் மற்ற மாணவர்களுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைக்காததால் ஜான் டேவிட் மீது மட்டும் கொலை வழக்கு (ஐபிசி 302) மற்றும் தடயங்களை அழிக்க முயற்சித்ததாக (ஐபிசி 364) வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

விடுதலை: இந்த வழக்கை விசாரித்த கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், ஜான் டேவிட்டுக்கு 1998ம் ஆண்டு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் (ஓய்வு) நீதிபதி பாலசுப்ரமணியன், ஜான் டேவிட் மீதான குற்றத்திற்கு போதிய ஆதாரங்களை காவல்துறை தாக்கல் செய்யவில்லை என தெரிவித்து கடந்த 2001ம் ஆண்டு அவரை விடுதலை செய்தது.

இந்த விடுதலையை எதிர்த்து காவல்துறை சார்பில் தொடரப்பட்ட மேல் முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜான் டேவிட்டின் இரட்டை ஆயுள் தண்டனையை ஒரு ஆயுள் தண்டனையாக குறைத்து, சம்மந்தபட்ட நீதிமன்றத்தில் சரணடைய 2011ம் ஆண்டு உத்தரவிட்டது. தற்போது வரை 17 ஆண்டுகளாக ஜான் டேவிட் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ராகிங் தடுப்பு சட்டம் 1997: இந்தியாவையே உலுக்கிய மாணவர் நாவரசுவின் படுகொலை, கல்வி நிறுவனங்களில் ஏற்படும் ராகிங் கொடுமைக்கு முற்றுப்புள்ளியாக அமைந்தது. ராகிங் கொடுமைகளை தடுக்க இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டது. 1997ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி கொண்டுவரப்பட்ட "தமிழ்நாடு ராகிங் தடுப்பு சட்டத்தின்" படி நேரடியாக பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வகையில் நடந்து கொள்வது, அச்சுறுத்துவது, உடல்ரீதியாக துன்புறுத்துவது, விருப்பமில்லாத சில செயல்களை செய்ய தூண்டுவது உள்ளிட்டவை குற்றமாக சேர்க்கப்பட்டது.

கல்வி நிறுவனங்களின் உள்ளேயும், வெளியேயும் சக மாணவர்களை கிண்டல் செய்வது தடை செய்யப்பட்டது. ராகிங் செய்தது நிரூபிக்கப்பட்டால், குறைந்தது 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கலாம். பிரிவு 4-ன்படி ராகிங் செய்து ஒருவர் தண்டிக்கப்பட்டால், சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து உடனடியாக நீக்கப்படுவார். வேறு எந்த கல்வி நிறுவனத்திலும் சேர்த்துக் கொள்ளப்பட மாட்டார்.

ராகிங் தொடர்பாக புகார்கள் வந்தால், உடனே சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனம் விசாரணை நடத்த வேண்டும். விசாரணையில் உண்மை இருக்கும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட மாணவரை கல்லூரியில் இருந்து உடனடியாக இடைநீக்கம் செய்ய வேண்டும்.

ராகிங் புகார் தொடர்பாக சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்தின் முடிவே இறுதியானது. புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க தவறினால், கல்வி நிறுவனமும் துணை போனதாக கருதி கல்வி நிறுவனத்துக்கும் தண்டனை விதிக்கலாம் என சட்டம் கூறுகிறது.

வழக்கறிஞர் நடராஜன், வழக்கறிஞர் கே.எம்.விஜயன் புகைப்படம்
வழக்கறிஞர் நடராஜன், வழக்கறிஞர் கே.எம்.விஜயன் புகைப்படம் (Credit - ETV Bharat Tamil Nadu)

இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கே.எம் விஜயனிடம், ஏன் இன்னும் கல்வி நிறுவனங்களில் ராகிங் தொடர்கிறது? அதை தடுக்க என்ன செய்ய வேண்டும்? என கேட்ட போது, ''தமிழகத்தில் தற்போது ராகிங் கொடுமைகள் பெரிய அளவில் இல்லை. புகார்கள் வந்தால் கல்வி நிறுவனத்தில் இருந்து நீக்கப்படுவோம் என்ற பயத்தில் மாணவர்கள் ராகிங் செய்வது குறைந்துள்ளது. முழுமையாக தடுப்பது என்பது நடைமுறை சாத்தியமற்றது'' என்றார்.

அதேபோல, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் நடராஜன் கூறுகையில், ''கல்வி நிறுவனங்களில் ராகிங்காக கொலை நடக்குமா? என்ற விவாதத்தை மக்களிடம் ஏற்படுத்தியது. அதன் தாக்கமே ராகிங் தடுப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. எந்த சட்டமும் குற்றங்களை முழுமையாக ஒழித்து விட முடியாது. சம்மந்தப்பட்ட மாணவர்கள் திருந்தினால் மட்டுமே ராகிங் போன்ற கொடுமைகள் ஏற்படாமல் தடுக்க முடியும்'' என தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.