ETV Bharat / state

ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.55 லட்சம் மோசடி.. குஜராத் இளைஞர்கள் சிக்கியது எப்படி? - Online Money Fraud case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 27, 2024, 8:17 AM IST

Online Money Fraud case: தூத்துக்குடியைச் சேர்ந்த நபரிடம் இணையதளத்தில் ரிவ்யூ (Review) கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று டெலிகிராம் மூலம் மெசேஜ் அனுப்பி, கொஞ்சம் கொஞ்சமாக சுமார் ரூ.55.5 லட்சம் வரை மோசடி செய்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 2 இளைஞர்களை சைபர் கிரைம் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள்
கைது செய்யப்பட்ட நபர்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூலம், ஆன்லைனில் (Online job) பணம் சம்பாதிக்கலாம் என டெலிகிராமில் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், அவர்கள் கூறிய தனியார் நிறுவனத்திற்கு (L&T construction sites and buildings) ரிவ்யூ கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அதனை நம்பிய தூத்துக்குடியைச் சேர்ந்த நபரும், மர்ம நபர்கள் கூறியபடி ரிவ்யூ கொடுத்துள்ளார். அதற்காக சிறிதளவு பணத்தையும் ஈட்டியுள்ளார். பின்னர், அந்த மர்ம நபர்கள் தூத்துக்குடி நபரைத் தொடர்பு கொண்டு www.intecct.net என்ற இணையதளத்தில் முதலீடு செய்வதன் மூலமாகவும் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தைக் கூறியதாகக் கூறப்படுகிறது.

அதனையும் நம்பி, மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு பல்வேறு பணம் அனுப்பும் செயலிகள் மற்றும் வங்கியின் பண பரிவர்த்தனை செயலிகள் மூலமாகப் பல தவணைகளாக மொத்தம் ரூ.55 லட்சத்து 49 ஆயிரத்து 916 முதலீடு செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, சுதாரித்துக் கொண்ட அவர், பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்து, சைபர் கிரைமில் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையில் தனிப்படை அமைத்து பண மோசடி செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் மேற்கொண்ட தொழில் நுட்பரீதியான விசாரணையில், பண மோசடியில் ஈடுபட்டது குஜராத் மாநிலம் சூரத் பகுதியைச் சேர்ந்த சந்திரேஷ் பாய் ரவிஜ்பூ மகன் ஜேய் சவாலியா(24) மற்றும் அசோக் பாய் மகன் மிலப் தக்கர்(22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த ஜூலை 23ஆம் தேதி குஜராத்தில் வைத்து இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து, சூரத் நகர் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தினர்.

தொடர்ந்து, டிரான்சிட் வாரண்ட் (Transit Warrant) பெற்று, தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு, நேற்று (ஜூலை 26) தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IV-ல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர். மேலும், இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, இந்த சைபர் குற்ற வழக்கில், குற்றவாளிகளைக் கண்டு பிடித்து குஜராத் வரை சென்று கைது செய்த, குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் பாராட்டியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: அமைச்சர் ஷோபா கரந்தலாஜே மன்னிப்பு கோரினால் ஏற்கப்படுமா? அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூலம், ஆன்லைனில் (Online job) பணம் சம்பாதிக்கலாம் என டெலிகிராமில் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், அவர்கள் கூறிய தனியார் நிறுவனத்திற்கு (L&T construction sites and buildings) ரிவ்யூ கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அதனை நம்பிய தூத்துக்குடியைச் சேர்ந்த நபரும், மர்ம நபர்கள் கூறியபடி ரிவ்யூ கொடுத்துள்ளார். அதற்காக சிறிதளவு பணத்தையும் ஈட்டியுள்ளார். பின்னர், அந்த மர்ம நபர்கள் தூத்துக்குடி நபரைத் தொடர்பு கொண்டு www.intecct.net என்ற இணையதளத்தில் முதலீடு செய்வதன் மூலமாகவும் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தைக் கூறியதாகக் கூறப்படுகிறது.

அதனையும் நம்பி, மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்குகளுக்கு பல்வேறு பணம் அனுப்பும் செயலிகள் மற்றும் வங்கியின் பண பரிவர்த்தனை செயலிகள் மூலமாகப் பல தவணைகளாக மொத்தம் ரூ.55 லட்சத்து 49 ஆயிரத்து 916 முதலீடு செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து, சுதாரித்துக் கொண்ட அவர், பின்னர் தான் மோசடி செய்யப்பட்டதையறிந்து, சைபர் கிரைமில் (National Cyber crime Reporting Portal) புகார் பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி தலைமையில் தனிப்படை அமைத்து பண மோசடி செய்த குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அந்த உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் மேற்கொண்ட தொழில் நுட்பரீதியான விசாரணையில், பண மோசடியில் ஈடுபட்டது குஜராத் மாநிலம் சூரத் பகுதியைச் சேர்ந்த சந்திரேஷ் பாய் ரவிஜ்பூ மகன் ஜேய் சவாலியா(24) மற்றும் அசோக் பாய் மகன் மிலப் தக்கர்(22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த ஜூலை 23ஆம் தேதி குஜராத்தில் வைத்து இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்து, சூரத் நகர் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர்படுத்தினர்.

தொடர்ந்து, டிரான்சிட் வாரண்ட் (Transit Warrant) பெற்று, தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு, நேற்று (ஜூலை 26) தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண். IV-ல் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர். மேலும், இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, இந்த சைபர் குற்ற வழக்கில், குற்றவாளிகளைக் கண்டு பிடித்து குஜராத் வரை சென்று கைது செய்த, குற்றப்பிரிவு தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் பாராட்டியுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: அமைச்சர் ஷோபா கரந்தலாஜே மன்னிப்பு கோரினால் ஏற்கப்படுமா? அரசு விளக்கமளிக்க ஐகோர்ட் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.