ETV Bharat / state

கட்டட அனுமதி பெறும் புதிய திட்டம்; தவறான தகவல் தந்தால் கிரிமினல் நடவடிக்கை! - Building Permission

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 25, 2024, 2:15 PM IST

Building Permission: சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டட அனுமதி பெறும் திட்டத்தில் தவறான தகவல்கள் அளிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: 2024 - 2025 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சுயசான்றிதழ் மூலமாகப் பொதுமக்கள் கட்டட அனுமதி பெறுவதற்குப் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜூன் 22ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் 2 ஆயிரத்து 500 சதுரஅடி வரையுள்ள மனையிடத்தில், 3 ஆயிரத்து 500 சதுர அடி கட்டடப் பரப்பளவிற்குள் தரைதளம் அல்லது முதல் தளம் கொண்ட 7 மீட்டர் உயரத்திற்குட்பட்டு குடியிருப்புக் கட்டடத்தைக் கட்டுவதற்கு விரும்பும் பொதுமக்கள், சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டட அனுமதியை ஆன்லைன் மூலம் பெறமுடியும்.

இது பொதுமக்கள் கட்டட அனுமதிக்காக அலுவலகங்களுக்குச் சென்றுவரும் நேரத்தை முழுமையாகத் தவிர்த்து. அதிகபட்ச வெளிப்படைத்தன்மையுடனும், நடைமுறையில் உள்ள கட்டட விதிகளை எளிமைப்படுத்தியும் மக்கள் மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சி என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக ஒற்றைச் சாளர முறையில் சுயசான்றிதழ் திட்டத்திற்கான மென்பொருள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தேவையான உரிய கட்டணங்களைச் செலுத்தியபின், விரைவுத் துலங்கல் (QR) குறியீட்டுடன் கட்டட அனுமதி மற்றும் வரைபடங்களை உடனடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடும் நடவடிக்கை:இந்த நிலையில், இத்திட்டம் குறித்து தமிழக அரசு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, சுயசான்றிதழ் திட்டத்தின்கீழ், தவறான தகவல்களை அளிப்பவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசிதழில், 'கட்டுமான பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளுவார்கள். ஆய்வின்போது விதிமீறல் கண்டறியப்பட்டால் கட்டிட உரிமையாளர்கள் அதை சரி செய்ய வேண்டும். அவ்வாறு விதிமீறல்களைச் சரி செய்யாவிடில் அவற்றை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.

மேலும் உள்ளாட்சி சட்டங்களின் படியும் நடவடிக்கை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தவறான தகவல்களை அளிப்பவர்களின் கட்டிடங்களுக்கான அனுமதியை நோட்டீஸ் அளித்து திட்டத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்' எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: இந்திய விமானப் படையில் பணி வாய்ப்பு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

சென்னை: 2024 - 2025 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சுயசான்றிதழ் மூலமாகப் பொதுமக்கள் கட்டட அனுமதி பெறுவதற்குப் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜூன் 22ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் 2 ஆயிரத்து 500 சதுரஅடி வரையுள்ள மனையிடத்தில், 3 ஆயிரத்து 500 சதுர அடி கட்டடப் பரப்பளவிற்குள் தரைதளம் அல்லது முதல் தளம் கொண்ட 7 மீட்டர் உயரத்திற்குட்பட்டு குடியிருப்புக் கட்டடத்தைக் கட்டுவதற்கு விரும்பும் பொதுமக்கள், சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டட அனுமதியை ஆன்லைன் மூலம் பெறமுடியும்.

இது பொதுமக்கள் கட்டட அனுமதிக்காக அலுவலகங்களுக்குச் சென்றுவரும் நேரத்தை முழுமையாகத் தவிர்த்து. அதிகபட்ச வெளிப்படைத்தன்மையுடனும், நடைமுறையில் உள்ள கட்டட விதிகளை எளிமைப்படுத்தியும் மக்கள் மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சி என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக ஒற்றைச் சாளர முறையில் சுயசான்றிதழ் திட்டத்திற்கான மென்பொருள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தேவையான உரிய கட்டணங்களைச் செலுத்தியபின், விரைவுத் துலங்கல் (QR) குறியீட்டுடன் கட்டட அனுமதி மற்றும் வரைபடங்களை உடனடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடும் நடவடிக்கை:இந்த நிலையில், இத்திட்டம் குறித்து தமிழக அரசு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, சுயசான்றிதழ் திட்டத்தின்கீழ், தவறான தகவல்களை அளிப்பவர்கள் மீது குற்றவியல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசிதழில், 'கட்டுமான பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளுவார்கள். ஆய்வின்போது விதிமீறல் கண்டறியப்பட்டால் கட்டிட உரிமையாளர்கள் அதை சரி செய்ய வேண்டும். அவ்வாறு விதிமீறல்களைச் சரி செய்யாவிடில் அவற்றை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள்.

மேலும் உள்ளாட்சி சட்டங்களின் படியும் நடவடிக்கை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தவறான தகவல்களை அளிப்பவர்களின் கட்டிடங்களுக்கான அனுமதியை நோட்டீஸ் அளித்து திட்டத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்' எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: இந்திய விமானப் படையில் பணி வாய்ப்பு; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.