ETV Bharat / state

ராமோஜி ராவ் மறைவு; கோவை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல்! - RAMOJI RAO DEATH

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 8, 2024, 3:07 PM IST

RAMOJI RAO DEATH: ராமோஜி குழும நிறுவனர் ராமோஜி ராவ் இன்று உயிரிழந்த நிலையில், அவரது மறைவிற்கு கோவை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Coimbatore Press Club logo and Ramoji rao
Coimbatore Press Club logo and Ramoji rao (Credit -ETVBharat TamilNadu)

கோயம்புத்தூர்: மூத்த பத்திரிகையாளரும், ராமோஜி குழும நிறுவனருமான ராமோஜி ராவ் (87) உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 4.50 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல் செய்தி
கோவை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல் செய்தி (Credit -ETVBharat TamilNadu)

அவரது உடல், ராமோஜி ஃபிலிம் சிட்டியில் உள்ள அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு அரசியல் மற்றும் திரைப் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கோவை பத்திரிகையாளர் மன்றம் ராமோஜி ராவ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளது. அதில், “ஈநாடு ஊடக குழுமங்களின் தலைவரும், திரைப்பட தயாரிப்பாளர், தொழிலதிபர் என பன்முகம் கொண்டவருமான ராமோஜி ராவ் இன்று காலமாகிவிட்டார்.

அவரது மறைவிற்கு கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த செடிகுரி ராமோஜி ராவ், நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட ஈடிவி ஊடக குழுமங்களின் தலைவராக இருந்து வந்திருக்கிறார். நாட்டிலேயே மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நகரமான ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி நிறுவனத்தை நடத்தி வந்ததோடு, ஈநாடு செய்தித்தாள் மற்றும் ஈடிவி செய்தி நிறுவனங்களின் தலைவராக அவர் பதவி வகித்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: நவீன ஊடக உலகின் பிதாமகன்.. ராமோஜி ராவ் கடந்து வந்த பாதை! - Ramoji Rao Passes away

இன்று நாடு முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளிவரும் ஈடிவி தொலைக்காட்சிகள், இணையதளங்கள், ஆப்கள் ஆகியவற்றை கவனிக்கப்படும் மிக முக்கியமான ஊடகமாக வளர்த்தெடுத்ததில் அவரது பங்கு அளப்பரியது. குறிப்பாக, மாறிவரும் தொழில்நுட்ப சூழலுக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்களை ஊடகத் துறைக்கு அறிமுகப்படுத்தியதில் அவரது பங்கு மிகவும் முக்கியமானது. ஊடகத்துறைக்கு அவரது பங்களிப்பை பாராட்டும் வகையில், மத்திய அரசு நாட்டின் 2வது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

அவரது மறைவு ஊடகத்துறைக்கு பெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், ஊடக மற்றும் பிற நிர்வாக தொழிலாளர்களுக்கு கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ராமோஜி ராவ் மறைவு: முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்! - RAMOJI RAO DEATH

கோயம்புத்தூர்: மூத்த பத்திரிகையாளரும், ராமோஜி குழும நிறுவனருமான ராமோஜி ராவ் (87) உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 4.50 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல் செய்தி
கோவை பத்திரிகையாளர் மன்றம் இரங்கல் செய்தி (Credit -ETVBharat TamilNadu)

அவரது உடல், ராமோஜி ஃபிலிம் சிட்டியில் உள்ள அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு அரசியல் மற்றும் திரைப் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், கோவை பத்திரிகையாளர் மன்றம் ராமோஜி ராவ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளது. அதில், “ஈநாடு ஊடக குழுமங்களின் தலைவரும், திரைப்பட தயாரிப்பாளர், தொழிலதிபர் என பன்முகம் கொண்டவருமான ராமோஜி ராவ் இன்று காலமாகிவிட்டார்.

அவரது மறைவிற்கு கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த செடிகுரி ராமோஜி ராவ், நாடு முழுவதும் நன்கு அறியப்பட்ட ஈடிவி ஊடக குழுமங்களின் தலைவராக இருந்து வந்திருக்கிறார். நாட்டிலேயே மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நகரமான ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி நிறுவனத்தை நடத்தி வந்ததோடு, ஈநாடு செய்தித்தாள் மற்றும் ஈடிவி செய்தி நிறுவனங்களின் தலைவராக அவர் பதவி வகித்து வந்துள்ளார்.

இதையும் படிங்க: நவீன ஊடக உலகின் பிதாமகன்.. ராமோஜி ராவ் கடந்து வந்த பாதை! - Ramoji Rao Passes away

இன்று நாடு முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளிவரும் ஈடிவி தொலைக்காட்சிகள், இணையதளங்கள், ஆப்கள் ஆகியவற்றை கவனிக்கப்படும் மிக முக்கியமான ஊடகமாக வளர்த்தெடுத்ததில் அவரது பங்கு அளப்பரியது. குறிப்பாக, மாறிவரும் தொழில்நுட்ப சூழலுக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்களை ஊடகத் துறைக்கு அறிமுகப்படுத்தியதில் அவரது பங்கு மிகவும் முக்கியமானது. ஊடகத்துறைக்கு அவரது பங்களிப்பை பாராட்டும் வகையில், மத்திய அரசு நாட்டின் 2வது உயரிய விருதான பத்ம விபூஷன் விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

அவரது மறைவு ஊடகத்துறைக்கு பெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், ஊடக மற்றும் பிற நிர்வாக தொழிலாளர்களுக்கு கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ராமோஜி ராவ் மறைவு: முதலமைச்சர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்! - RAMOJI RAO DEATH

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.