ETV Bharat / state

கோவை பாமக மாவட்ட செயலாளருக்கு கொலை மிரட்டல்.. வீடியோ உடன் புகார்! - PMK Ashok Srinithi video on Killers

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 8:24 PM IST

PMK Ashok Srinithi got Threat to kill Case: கோவை பாமக செயலாளர் அசோக் ஸ்ரீநிதியை கொலை செய்யும் முயற்சியில் சிலர் ஈடுபட்டிருப்பதாக, வீடியோ ஆதாரத்தோடு மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாமக பிரமுகர் அசோக் ஸ்ரீநிதி
பாமக பிரமுகர் அசோக் ஸ்ரீநிதி (Credits- ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: பாட்டாளி மக்கள் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளராக இருப்பவர் அசோக் ஸ்ரீநிதி. இவர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த ஜூலை 30ஆம் தேதி அவினாசி சாலையில், துணிக்கடையில் துணி எடுத்து விட்டு வந்த தன்னை இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

பாமக பிரமுகர் அசோக் ஸ்ரீநிதி (Credits- ETV Bharat Tamil Nadu)

My V3 Ads நிறுவனத்திற்கு எதிராக, அதன் மோசடிகளை வெளிப்படுத்த துவங்கியதில் இருந்து தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தாலும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, எனவே அவர்களிடமிருந்து தப்பி அருகில் இருந்த கடைக்குள் புகுந்ததாகக் கூறி அன்றைய தினம் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளையும் அசோக் ஸ்ரீ நிதி வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் குறித்து அசோக் ஸ்ரீநிதி கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருப்பதாகவும், My V3 Ads நிறுவனத்திற்கு எதிராக செயல்பட்டதால்தான் தன்னை மர்ம நபர்கள் தாக்க முயன்றார்கள் எனக் குறிப்பிட்டுட்டிருந்தார்.

எனவே, இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விரைவில் விசாரித்து நடவடிக்கைகள் எடுப்பதுடன், தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து, அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இதுதொடர்பாக பந்தயசாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: செம்பியம் பெண் சிறப்பு எஸ்ஐ மாரடைப்பால் மரணம்.. திடீரென எடுத்த வாந்தி.. போலீஸ் தீவிர விசாரணை..!

கோயம்புத்தூர்: பாட்டாளி மக்கள் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளராக இருப்பவர் அசோக் ஸ்ரீநிதி. இவர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த ஜூலை 30ஆம் தேதி அவினாசி சாலையில், துணிக்கடையில் துணி எடுத்து விட்டு வந்த தன்னை இருசக்கர வாகனத்தில் வந்த 3 நபர்கள் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

பாமக பிரமுகர் அசோக் ஸ்ரீநிதி (Credits- ETV Bharat Tamil Nadu)

My V3 Ads நிறுவனத்திற்கு எதிராக, அதன் மோசடிகளை வெளிப்படுத்த துவங்கியதில் இருந்து தனக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும், இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருந்தாலும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை, எனவே அவர்களிடமிருந்து தப்பி அருகில் இருந்த கடைக்குள் புகுந்ததாகக் கூறி அன்றைய தினம் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளையும் அசோக் ஸ்ரீ நிதி வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் குறித்து அசோக் ஸ்ரீநிதி கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருப்பதாகவும், My V3 Ads நிறுவனத்திற்கு எதிராக செயல்பட்டதால்தான் தன்னை மர்ம நபர்கள் தாக்க முயன்றார்கள் எனக் குறிப்பிட்டுட்டிருந்தார்.

எனவே, இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விரைவில் விசாரித்து நடவடிக்கைகள் எடுப்பதுடன், தனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதையடுத்து, அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இதுதொடர்பாக பந்தயசாலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits- ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: செம்பியம் பெண் சிறப்பு எஸ்ஐ மாரடைப்பால் மரணம்.. திடீரென எடுத்த வாந்தி.. போலீஸ் தீவிர விசாரணை..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.