ETV Bharat / state

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர் அறிவிப்பு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2024, 7:50 PM IST

Virudhunagar Fire Accident: விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (ஜன. 24) காலை பட்டாசுக்கான ரசாயன மூலப் பொருட்களை கலவை செய்யும் போது ஏற்பட்ட உராய்வு காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்தில் 3 அறைகள் சிதறி தரைமட்டமான நிலையில், அறையில் பணியாற்றிய இருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், இருவர் 90 சதவீத தீக்காயத்துடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  • விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/zXN1h6V3l7

    — CMOTamilNadu (@CMOTamilnadu) January 24, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம், வச்சக்காரபட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (24-01-2024) காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், முதலிபட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரக்குமார் (வயது 55) மற்றும் விருதுநகர் வட்டம், கன்னிசேரி புதூர் கிராமத்தைச் சேர்ந்த காளிராஜ் (வயது 20) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வரும் கன்னிசேரி புதூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணக்குமார் (வயது 24) மற்றும் இனாம் ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (வயது 17) ஆகிய இருவருக்கும் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: “கண்ணு உங்க காலைத் தொட்டு மன்னிப்பு கேட்கிறேன்” - மாணவர்கள் காலில் சட்டென விழுந்த பாமக எம்.எல்.ஏ அருள்..

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டியில் முருகேசன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (ஜன. 24) காலை பட்டாசுக்கான ரசாயன மூலப் பொருட்களை கலவை செய்யும் போது ஏற்பட்ட உராய்வு காரணமாக பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இந்த வெடி விபத்தில் 3 அறைகள் சிதறி தரைமட்டமான நிலையில், அறையில் பணியாற்றிய இருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், இருவர் 90 சதவீத தீக்காயத்துடன் விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  • விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். pic.twitter.com/zXN1h6V3l7

    — CMOTamilNadu (@CMOTamilnadu) January 24, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "விருதுநகர் மாவட்டம் மற்றும் வட்டம், வச்சக்காரபட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (24-01-2024) காலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், முதலிபட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரக்குமார் (வயது 55) மற்றும் விருதுநகர் வட்டம், கன்னிசேரி புதூர் கிராமத்தைச் சேர்ந்த காளிராஜ் (வயது 20) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வரும் கன்னிசேரி புதூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணக்குமார் (வயது 24) மற்றும் இனாம் ரெட்டியபட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (வயது 17) ஆகிய இருவருக்கும் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: “கண்ணு உங்க காலைத் தொட்டு மன்னிப்பு கேட்கிறேன்” - மாணவர்கள் காலில் சட்டென விழுந்த பாமக எம்.எல்.ஏ அருள்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.