ETV Bharat / state

"கல்விக்கான தடைகள் புதிய வடிவங்களில் வருகிறது" - முதலமைச்சர் ஸ்டாலின்! - mk stalin in loyola college

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 1, 2024, 10:58 PM IST

M.K.Stalin: கல்விக்கான தடைகள் புதிய வடிவங்களில் வர தொடங்கியிருக்கிறது. கல்வியின் முக்கியத்துவத்தை குறைக்கின்ற மாதிரியான பேச்சுக்கள் மீண்டும் எழத் தொடங்கியிருக்கிறது. அதையெல்லாம் அரசியல் களத்தில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

MKS
முக ஸ்டாலின் (Credits - MK Stalin 'X' Page)

சென்னை: லயோலா கல்லூரியின் நூற்றாண்டு தொடக்க விழா இன்று (ஆகஸ்ட் 1) அக்கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “நான் படித்தது பிரஸிடன்ஸி கல்லூரி. என்னுடைய மகன் உதயநிதி படித்ததும் இந்த கல்லூரியில் தான். உதயநிதி மட்டுமல்ல, இங்கே இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், அவர் அண்ணன் கலாநிதி மாறன் ஆகியோர் இங்கு தான் படித்தார்கள். நான் மட்டும்தான் மிஸ் ஆகிவிட்டேன்.

இந்த நிகழ்ச்சிக்கு நான் முதலமைச்சராக மட்டுமல்லாமல், உங்கள் கல்லூரியில் படித்த மாணவரின் பெற்றோராகவும் வந்திருக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் ஏராளமான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உருவாக்கியிருக்கிறோம். ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நிலை இருந்ததா? தமிழ்நாடு முழுக்க இருக்கின்ற கல்லூரிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம் அப்போது.

கல்விதான் அழிக்க முடியாத செல்வம் என்று சொல்கிறோமே. அந்த செல்வம் அப்போது எல்லோருக்கும் கிடைக்கவில்லை. கிடைக்கவில்லை என்று சொல்வதைவிட கொடுக்கப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சேவை மனப்பான்மையுடன் இந்த லயோலா கல்லூரி தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான பள்ளிகளையும், கல்லூரிகளையும் உருவாக்கித் தந்த கருணாநிதியுடைய பிறந்த நாளில் 1924-ஆம் ஆண்டில் இந்த லயோலா நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

1925-ம் ஆண்டு தன்னுடைய கல்விப் பணியை இந்தக் கல்லூரி தொடங்கியது. 75 மாணவர்களோடு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் இன்றைக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னார்தான் படிக்கலாம் - இன்னார் படிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் தலைவிரித்து ஆடிய காலத்தில் அனைவரும் படிக்கலாம் என்ற பெரிய வாசலை திறந்து விட்ட எத்தனையோ கல்லூரிகளில் லயோலா கல்லூரியும் மிகவும் முக்கியமான ஒன்று.

சமூகத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்விக் கண்ணைத் திறந்து விட்ட கல்லூரி இந்தக் கல்லூரி. இந்திய நாட்டின் முதல் பத்து சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக இந்த லயோலா கல்லூரி இருக்கிறது. இந்த பெருமை லயோலாவுக்கு மட்டுமில்லை, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் தான் பெருமை. இந்தியாவில் எந்த வகைப்பட்ட கல்வி நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் தலைசிறந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.

நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற திட்டங்கள் அனைவருக்கும் தரமான கல்வி கிடைத்தால்தான், திராவிட மாடல் என்று சொல்வதில் அர்த்தம் இருக்கும். பெருந்தலைவர் காமராஜரின் காலம் பள்ளிக் கல்வியின் பொற்காலமாக இருந்தது. கருணாநிதி ஆட்சிக்காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலமாக இருந்தது. இன்றைய திராவிட மாடல் ஆட்சியானது உயர் கல்வியின் பொற்காலமாக ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாக திகழ்ந்து வருகிறது.

கல்வியின் தேவையை அடுத்தடுத்து வருகின்ற மாணவர்களிடமும் பதிய வைக்க வேண்டும். ஏனென்றால், கல்விக்கான தடைகள் புதிய வடிவங்களில் வரத் தொடங்கியிருக்கிறது. கல்வியின் முக்கியத்துவத்தை குறைக்கின்ற மாதிரியான பேச்சுக்கள் மீண்டும் எழத் தொடங்கியிருக்கிறது. அதையெல்லாம் அரசியல் களத்தில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆனால், மாணவர்களான நீங்கள் அறிவுக்களத்தில் உள்ள பயணத்தை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் ” இவ்வாறு அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவு; அமித் ஷா தவறான தகவல்? வானிலை அறிக்கை கூறுவது என்ன? - amit shah misleading statements

சென்னை: லயோலா கல்லூரியின் நூற்றாண்டு தொடக்க விழா இன்று (ஆகஸ்ட் 1) அக்கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “நான் படித்தது பிரஸிடன்ஸி கல்லூரி. என்னுடைய மகன் உதயநிதி படித்ததும் இந்த கல்லூரியில் தான். உதயநிதி மட்டுமல்ல, இங்கே இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், அவர் அண்ணன் கலாநிதி மாறன் ஆகியோர் இங்கு தான் படித்தார்கள். நான் மட்டும்தான் மிஸ் ஆகிவிட்டேன்.

இந்த நிகழ்ச்சிக்கு நான் முதலமைச்சராக மட்டுமல்லாமல், உங்கள் கல்லூரியில் படித்த மாணவரின் பெற்றோராகவும் வந்திருக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் ஏராளமான கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உருவாக்கியிருக்கிறோம். ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இந்த நிலை இருந்ததா? தமிழ்நாடு முழுக்க இருக்கின்ற கல்லூரிகளை விரல்விட்டு எண்ணிவிடலாம் அப்போது.

கல்விதான் அழிக்க முடியாத செல்வம் என்று சொல்கிறோமே. அந்த செல்வம் அப்போது எல்லோருக்கும் கிடைக்கவில்லை. கிடைக்கவில்லை என்று சொல்வதைவிட கொடுக்கப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சேவை மனப்பான்மையுடன் இந்த லயோலா கல்லூரி தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பல்லாயிரக்கணக்கான பள்ளிகளையும், கல்லூரிகளையும் உருவாக்கித் தந்த கருணாநிதியுடைய பிறந்த நாளில் 1924-ஆம் ஆண்டில் இந்த லயோலா நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

1925-ம் ஆண்டு தன்னுடைய கல்விப் பணியை இந்தக் கல்லூரி தொடங்கியது. 75 மாணவர்களோடு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரியில் இன்றைக்கு ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னார்தான் படிக்கலாம் - இன்னார் படிக்கக் கூடாது என்ற கட்டுப்பாடுகள் தலைவிரித்து ஆடிய காலத்தில் அனைவரும் படிக்கலாம் என்ற பெரிய வாசலை திறந்து விட்ட எத்தனையோ கல்லூரிகளில் லயோலா கல்லூரியும் மிகவும் முக்கியமான ஒன்று.

சமூகத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்விக் கண்ணைத் திறந்து விட்ட கல்லூரி இந்தக் கல்லூரி. இந்திய நாட்டின் முதல் பத்து சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக இந்த லயோலா கல்லூரி இருக்கிறது. இந்த பெருமை லயோலாவுக்கு மட்டுமில்லை, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் தான் பெருமை. இந்தியாவில் எந்த வகைப்பட்ட கல்வி நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் தலைசிறந்த கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது.

நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற திட்டங்கள் அனைவருக்கும் தரமான கல்வி கிடைத்தால்தான், திராவிட மாடல் என்று சொல்வதில் அர்த்தம் இருக்கும். பெருந்தலைவர் காமராஜரின் காலம் பள்ளிக் கல்வியின் பொற்காலமாக இருந்தது. கருணாநிதி ஆட்சிக்காலம் கல்லூரிக் கல்வியின் பொற்காலமாக இருந்தது. இன்றைய திராவிட மாடல் ஆட்சியானது உயர் கல்வியின் பொற்காலமாக ஆராய்ச்சிக் கல்வியின் பொற்காலமாக திகழ்ந்து வருகிறது.

கல்வியின் தேவையை அடுத்தடுத்து வருகின்ற மாணவர்களிடமும் பதிய வைக்க வேண்டும். ஏனென்றால், கல்விக்கான தடைகள் புதிய வடிவங்களில் வரத் தொடங்கியிருக்கிறது. கல்வியின் முக்கியத்துவத்தை குறைக்கின்ற மாதிரியான பேச்சுக்கள் மீண்டும் எழத் தொடங்கியிருக்கிறது. அதையெல்லாம் அரசியல் களத்தில் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆனால், மாணவர்களான நீங்கள் அறிவுக்களத்தில் உள்ள பயணத்தை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் ” இவ்வாறு அவர் கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: வயநாடு நிலச்சரிவு; அமித் ஷா தவறான தகவல்? வானிலை அறிக்கை கூறுவது என்ன? - amit shah misleading statements

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.