ETV Bharat / state

தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்துக்கு நிதி வழங்கப்படவில்லையா? முதல்வரின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் விளக்கம்! - M K Stalin

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2024, 4:09 PM IST

M.K.Stalin: தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு கல்விக்கான நிதியை மறுப்பது தான் பாஜக அரசின் நடவடிக்கையா? என்று மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கேள்வி எழுப்பி இருந்தார். முதல்வரின் இக்குற்றச்சாட்டுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்
முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் (Photo Credits - ETV Bharat Tamil Nadu, dharmendra pradhan X Page)

சென்னை: கல்வி, சமூக நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி தர மறுப்பதா? என்று கேள்வி எழுப்பியுள்ள முதல்வர் ஸ்டாலின், சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காததற்கு மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவித்து தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டத்தில் தமிழகத்திற்கு நிதி தர மறுப்பதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கும் மத்திய அரசு சார்பில் நிதி விடுவிக்கப்பட வேண்டும். ஆனால், கல்வி, சமூக நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க மறுக்கிறது.

தேசிய கல்விக் கொள்கையை திணிக்க முயற்சி: மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழும் தமிழ்நாட்டுக்கு எஸ்எஸ்ஏ (Samagra Shiksha Scheme) திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தாமதம் செய்கிறது. தேசிய கல்விக் கொள்கையை (NEP) வலுக்கட்டாயமாக ஏற்க வைக்கும் முயற்சியாகவும், தலைவணங்க மறுத்ததற்காகவும் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு கல்விக்கான நிதியை பாஜக மறுக்கிறது.

அதே நேரத்தில் கல்வியில் குறிப்பிட்ட இலக்கை அடையாதவர்களுக்கு தாராளமாக நிதியை பாஜக அளிக்கிறது. தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்த மத்திய பாஜக அரசின் திட்டம் இதுதானா? இதுபற்றி நம் நாட்டு மக்களே முடிவெடுக்க வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், தனியார் பத்திரிகை நிறுவனத்தில் வெளியான ரிப்போர்ட் ஒன்றையும் இணைத்துள்ளார். அதில், தேசிய குடும்பநலத் துறை சர்வே 2019-2020ஐ குறிப்பிட்டு, கல்வியில் அதிக முன்னேற்றம் கண்டுள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு பிஎம் ஸ்ரீ திட்டம் மூலம் உரிய நிதியை வழங்க மறுக்கிறது என பதிவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இன்னும் இணையவில்லை. இதனால் பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு கல்வி உட்கட்டமைப்புகளுக்காக வழங்கப்படும் நிதி இன்னும் மத்திய அரசால் வழங்கப்படவில்லை என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்: தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு கல்விக்கான நிதியை மத்திய அரசு மறுத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். முதல்வரின் இக்குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலளித்துள்ளார்.

அதில், "ஜனநாயகத்தில் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி எப்போதும் வரவேற்கத்தக்கது.
மற்ற மாநிலங்களை சுட்டிக்காட்டி இதுபோன்று அறிக்கை வெளியிடுவது அரசியலமைப்புக்கு எதிராக அமையும். தேசிய புதிய கல்விக் கொள்கை பலதரப்பட்ட நபர்களிடம் கருத்துக்கள் கேட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் பதிவை சுட்டிக்காட்டி கேள்வி: புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாய் மொழியில் கல்வி என்பதை முதலமைச்சர் எதிர்க்கிறாரா? தமிழ் மொழியில் கல்வி என்பதை எதிர்க்கிறாரா? இந்தியாவில் உள்ள தமிழ் உள்ளிட்ட தாய்மொழியில் தேர்வுகள் நடத்தப்படுவதை எதிர்க்கிறாரா?

பாடபுத்தகங்கள் இந்திய மொழிகள் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்படுவதை தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்க்கிறாரா? தேசியக் கல்விக் கொள்கையின் முழுமையான சமத்துவம், மாணவர்களின் எதிர்காலம் உள்ளடக்கிய கட்டமைப்பை எதிர்க்கிறீர்களா?

அப்படியெல்லாம் இல்லையென்றால், உங்கள் அரசியல் ஆதாயங்களைவிட தமிழ்நாடு மாணவர் நலனை கருத்தில் கொண்டு தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்" என்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: திமுக பவளவிழா: "இல்லந்தோறும் கழகக்கொடி பறக்கட்டும்" - மு.க.ஸ்டாலின் போட்ட உத்தரவு!

சென்னை: கல்வி, சமூக நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு நிதி தர மறுப்பதா? என்று கேள்வி எழுப்பியுள்ள முதல்வர் ஸ்டாலின், சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காததற்கு மத்திய அரசுக்கு கண்டனத்தை தெரிவித்து தனது எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசின் சமக்ரா சிக்ஷா திட்டத்தில் தமிழகத்திற்கு நிதி தர மறுப்பதை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "சமக்ரா சிக்ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கும் மத்திய அரசு சார்பில் நிதி விடுவிக்கப்பட வேண்டும். ஆனால், கல்வி, சமூக நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க மறுக்கிறது.

தேசிய கல்விக் கொள்கையை திணிக்க முயற்சி: மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழும் தமிழ்நாட்டுக்கு எஸ்எஸ்ஏ (Samagra Shiksha Scheme) திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தாமதம் செய்கிறது. தேசிய கல்விக் கொள்கையை (NEP) வலுக்கட்டாயமாக ஏற்க வைக்கும் முயற்சியாகவும், தலைவணங்க மறுத்ததற்காகவும் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு கல்விக்கான நிதியை பாஜக மறுக்கிறது.

அதே நேரத்தில் கல்வியில் குறிப்பிட்ட இலக்கை அடையாதவர்களுக்கு தாராளமாக நிதியை பாஜக அளிக்கிறது. தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்த மத்திய பாஜக அரசின் திட்டம் இதுதானா? இதுபற்றி நம் நாட்டு மக்களே முடிவெடுக்க வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், தனியார் பத்திரிகை நிறுவனத்தில் வெளியான ரிப்போர்ட் ஒன்றையும் இணைத்துள்ளார். அதில், தேசிய குடும்பநலத் துறை சர்வே 2019-2020ஐ குறிப்பிட்டு, கல்வியில் அதிக முன்னேற்றம் கண்டுள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு பிஎம் ஸ்ரீ திட்டம் மூலம் உரிய நிதியை வழங்க மறுக்கிறது என பதிவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இன்னும் இணையவில்லை. இதனால் பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு கல்வி உட்கட்டமைப்புகளுக்காக வழங்கப்படும் நிதி இன்னும் மத்திய அரசால் வழங்கப்படவில்லை என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய கல்வி அமைச்சர் விளக்கம்: தேசிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு கல்விக்கான நிதியை மத்திய அரசு மறுத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். முதல்வரின் இக்குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பதிலளித்துள்ளார்.

அதில், "ஜனநாயகத்தில் மாநிலங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி எப்போதும் வரவேற்கத்தக்கது.
மற்ற மாநிலங்களை சுட்டிக்காட்டி இதுபோன்று அறிக்கை வெளியிடுவது அரசியலமைப்புக்கு எதிராக அமையும். தேசிய புதிய கல்விக் கொள்கை பலதரப்பட்ட நபர்களிடம் கருத்துக்கள் கேட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் பதிவை சுட்டிக்காட்டி கேள்வி: புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ள தாய் மொழியில் கல்வி என்பதை முதலமைச்சர் எதிர்க்கிறாரா? தமிழ் மொழியில் கல்வி என்பதை எதிர்க்கிறாரா? இந்தியாவில் உள்ள தமிழ் உள்ளிட்ட தாய்மொழியில் தேர்வுகள் நடத்தப்படுவதை எதிர்க்கிறாரா?

பாடபுத்தகங்கள் இந்திய மொழிகள் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்படுவதை தமிழ்நாடு முதலமைச்சர் எதிர்க்கிறாரா? தேசியக் கல்விக் கொள்கையின் முழுமையான சமத்துவம், மாணவர்களின் எதிர்காலம் உள்ளடக்கிய கட்டமைப்பை எதிர்க்கிறீர்களா?

அப்படியெல்லாம் இல்லையென்றால், உங்கள் அரசியல் ஆதாயங்களைவிட தமிழ்நாடு மாணவர் நலனை கருத்தில் கொண்டு தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்" என்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிவிட்டுள்ளார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: திமுக பவளவிழா: "இல்லந்தோறும் கழகக்கொடி பறக்கட்டும்" - மு.க.ஸ்டாலின் போட்ட உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.