ETV Bharat / state

ஆர்.எம்.வீரப்பன் மறைவு; "கலை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு" - அஞ்சலி செலுத்திய திரைப்பிரபலங்கள் உருக்கம்! - RM Veerappan

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 10, 2024, 1:00 PM IST

R.M Veerappan: உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த திரைப்பட இயக்குநரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

RM VEERAPPAN PASSED AWAY
RM VEERAPPAN PASSED AWAY

சென்னை: முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் (98) உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (ஏப்.9) மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, ஆர்.எம்.வீரப்பன் உடல் மருத்துவமனையிலிருந்து அவரது இல்லத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டது.

இன்று மாலை 4 மணிக்கு நுங்கம்பாக்கம் மைதானத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் எனும் நிலையில், அவரது உடலுக்கு பல அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேரில் வந்து அஞ்சலி செலுத்திய பின்னர், அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் பலரும் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி பேசிய போது "காரைக்குடி பகுதியிலிருந்து திராவிட இயக்கத்தின் தொண்டராக பணியைத் தொடங்கினார், ஆர்.எம்.வீரப்பன். அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பல திட்டங்களை அறிவிக்க காரணமாக இருந்தவர். அருளாளர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். ஏனென்றால், ஆர்.எம்.வீரப்பன் அனைவரோடும் அன்போடு பழகக்கூடியவர்.

இந்த தேர்தலிலும் அவர் பங்காற்ற வேண்டும் என்பதற்காக தனது எம்.ஜி.ஆர் கழகம் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். குறிப்பாக படுத்த படுக்கையாக இருந்த நேரத்தில் கூட, இந்த தேர்தலில் எம்.ஜி.ஆர் கழகம் தனது பணியை ச் செய்ய வேண்டும் என்பதற்காக, இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என கடைசியாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இறுதி நேரத்திலும் கூட யாரை அடையாளப்படுத்த வேண்டும் என அவர்களை அடையாளப்படுத்தியுள்ளார்" எனத் தெரிவித்தார்.

இதனிடையே, மறைந்த ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு மேகாலயா ஆளுநர் இல.கணேசன், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இயக்குநர் பாரதிராஜா: "தமிழ்நாட்டில் மிகச்சிறந்த அரசியல்வாதி மற்றும் நேர்மையாளர். அரசியல் நாகரிகத்தோடு எப்போதும் நடந்து கொள்ளும் சிறந்த மனிதர். எனக்கும், அவருக்கும் பல ஆண்டுகள் பழக்கம், ஆர்.எம்.வீரப்பன் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு, அதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை".

இயக்குநர் பி.வாசு: "வயது முதிர்ச்சி காரணமாக அவர் உயிரிழந்தார். இது கலை உலகிற்கு பெரும் இழப்பு. திரைத்துறையில் மக்கள் எதை விரும்புவார்கள் என்பதை அறிந்து, அதை வழங்கக் கூடியவர். பணக்காரன் படத்தில் ரஜினியுடன் பணியாற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கினார். சிறந்த மற்றும் பிரமாண்ட தயாரிப்பாளராக செயல்பட்டவர்.

அரசியல் வாழ்க்கையிலும் தனக்கென்று தனி பாணியில் சிறப்பாக செயல்பட்டவர். அவருக்கு நல்ல குடும்பம் அமைந்துள்ளது. அவரது வாழ்க்கையை அனைவரும் படிக்க வேண்டும், ஏனென்றால் அவரது வாழ்க்கையைப் பின்பற்றினாலே அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்".

நடிகர் எஸ்.வி சேகர்: "ஆரம்ப காலத்தில் நாடகங்கள் நடிக்க வந்த போது, எங்களை ஊக்குவிக்கும் விதமாக செயல்பட்டவர். அரசியலில் பல்வேறு எதிர்ப்பு வரும் போதும் தொடர்ந்து அரசியலில் செயல்பட்டவர். அவரது இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்".

நடிகர் சங்கத் தலைவர் நாசர்: "மிக அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்து நமக்கெல்லாம் உதாரணமாக இருந்திருக்கிறார். சிறந்த தயாரிப்பாளராக, சிறந்த அரசியல்வாதியாக திகழ்ந்தவர். எம்.ஜி.ஆர் தனது கட்சியை ஆரம்பிக்கும் போது முக்கிய பங்காற்றியவர். நேர்த்தியான தயாரிப்பாளர் என பெயர் பெற்றவர். நேரத்தை எப்படி சிக்கனம் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாகத் தெரிந்தவர். பல தயாரிப்பாளர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்".

நடிகர் பாண்டியராஜன்: "ஆர்.எம்.வீரப்பன் ஒரு சகாப்தம், அவரைப் பற்றி பேசுவதற்கு எனக்கு வயதும், அனுபவமும் இல்லை. ஒன்றிரண்டு முறை இவரை பார்த்திருக்கிறேன். ஆனால் இவரது புகழ் குறித்தும், இப்படி ஒரு மனிதர் இருக்கிறாரா என்பது குறித்தும் எனது மாமனார் கூற கேட்டு வியந்திருக்கிறேன். அரசியல், சினிமா, ஆன்மீகம் என அனைத்திலும் உச்சம் தொட்டவர். அரசியல் மற்றும் திரைத்துறையில் அவருக்குத் தெரியாதவை எதுவும் இல்லை. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரின் வலதுகரம்.. ஆர்.எம்.வீரப்பன் கடந்து வந்த பாதைகள்! - RM VEERAPPAN History

சென்னை: முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் (98) உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (ஏப்.9) மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து, ஆர்.எம்.வீரப்பன் உடல் மருத்துவமனையிலிருந்து அவரது இல்லத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்காக கொண்டு செல்லப்பட்டது.

இன்று மாலை 4 மணிக்கு நுங்கம்பாக்கம் மைதானத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் எனும் நிலையில், அவரது உடலுக்கு பல அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேரில் வந்து அஞ்சலி செலுத்திய பின்னர், அரசியல் தலைவர்கள் மற்றும் நடிகர்கள் பலரும் தங்களது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.

திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி பேசிய போது "காரைக்குடி பகுதியிலிருந்து திராவிட இயக்கத்தின் தொண்டராக பணியைத் தொடங்கினார், ஆர்.எம்.வீரப்பன். அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பல திட்டங்களை அறிவிக்க காரணமாக இருந்தவர். அருளாளர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். ஏனென்றால், ஆர்.எம்.வீரப்பன் அனைவரோடும் அன்போடு பழகக்கூடியவர்.

இந்த தேர்தலிலும் அவர் பங்காற்ற வேண்டும் என்பதற்காக தனது எம்.ஜி.ஆர் கழகம் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து இருந்தார். குறிப்பாக படுத்த படுக்கையாக இருந்த நேரத்தில் கூட, இந்த தேர்தலில் எம்.ஜி.ஆர் கழகம் தனது பணியை ச் செய்ய வேண்டும் என்பதற்காக, இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் என கடைசியாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இறுதி நேரத்திலும் கூட யாரை அடையாளப்படுத்த வேண்டும் என அவர்களை அடையாளப்படுத்தியுள்ளார்" எனத் தெரிவித்தார்.

இதனிடையே, மறைந்த ஆர்.எம்.வீரப்பன் உடலுக்கு மேகாலயா ஆளுநர் இல.கணேசன், அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இயக்குநர் பாரதிராஜா: "தமிழ்நாட்டில் மிகச்சிறந்த அரசியல்வாதி மற்றும் நேர்மையாளர். அரசியல் நாகரிகத்தோடு எப்போதும் நடந்து கொள்ளும் சிறந்த மனிதர். எனக்கும், அவருக்கும் பல ஆண்டுகள் பழக்கம், ஆர்.எம்.வீரப்பன் இழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு, அதை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை".

இயக்குநர் பி.வாசு: "வயது முதிர்ச்சி காரணமாக அவர் உயிரிழந்தார். இது கலை உலகிற்கு பெரும் இழப்பு. திரைத்துறையில் மக்கள் எதை விரும்புவார்கள் என்பதை அறிந்து, அதை வழங்கக் கூடியவர். பணக்காரன் படத்தில் ரஜினியுடன் பணியாற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கினார். சிறந்த மற்றும் பிரமாண்ட தயாரிப்பாளராக செயல்பட்டவர்.

அரசியல் வாழ்க்கையிலும் தனக்கென்று தனி பாணியில் சிறப்பாக செயல்பட்டவர். அவருக்கு நல்ல குடும்பம் அமைந்துள்ளது. அவரது வாழ்க்கையை அனைவரும் படிக்க வேண்டும், ஏனென்றால் அவரது வாழ்க்கையைப் பின்பற்றினாலே அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்".

நடிகர் எஸ்.வி சேகர்: "ஆரம்ப காலத்தில் நாடகங்கள் நடிக்க வந்த போது, எங்களை ஊக்குவிக்கும் விதமாக செயல்பட்டவர். அரசியலில் பல்வேறு எதிர்ப்பு வரும் போதும் தொடர்ந்து அரசியலில் செயல்பட்டவர். அவரது இழப்பிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்".

நடிகர் சங்கத் தலைவர் நாசர்: "மிக அற்புதமான வாழ்க்கையை வாழ்ந்து நமக்கெல்லாம் உதாரணமாக இருந்திருக்கிறார். சிறந்த தயாரிப்பாளராக, சிறந்த அரசியல்வாதியாக திகழ்ந்தவர். எம்.ஜி.ஆர் தனது கட்சியை ஆரம்பிக்கும் போது முக்கிய பங்காற்றியவர். நேர்த்தியான தயாரிப்பாளர் என பெயர் பெற்றவர். நேரத்தை எப்படி சிக்கனம் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாகத் தெரிந்தவர். பல தயாரிப்பாளர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்".

நடிகர் பாண்டியராஜன்: "ஆர்.எம்.வீரப்பன் ஒரு சகாப்தம், அவரைப் பற்றி பேசுவதற்கு எனக்கு வயதும், அனுபவமும் இல்லை. ஒன்றிரண்டு முறை இவரை பார்த்திருக்கிறேன். ஆனால் இவரது புகழ் குறித்தும், இப்படி ஒரு மனிதர் இருக்கிறாரா என்பது குறித்தும் எனது மாமனார் கூற கேட்டு வியந்திருக்கிறேன். அரசியல், சினிமா, ஆன்மீகம் என அனைத்திலும் உச்சம் தொட்டவர். அரசியல் மற்றும் திரைத்துறையில் அவருக்குத் தெரியாதவை எதுவும் இல்லை. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரின் வலதுகரம்.. ஆர்.எம்.வீரப்பன் கடந்து வந்த பாதைகள்! - RM VEERAPPAN History

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.