ETV Bharat / state

அமலாக்கத்துறை வழக்கில் விடுப்பு; செந்தில் பாலாஜி மனு மீது ஜூலை 12-ல் தீர்ப்பு! - senthil balaji case

Senthil Balaji Case: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது ஜூலை 12ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 10, 2024, 6:37 PM IST

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக்கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தீர்ப்பினை தள்ளி வைக்க வேண்டும்” என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் வாதங்களை துவங்காததால், விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனு மீது ஜூலை 12ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

இதையும் படிங்க: பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கட்-ஆப் மதிப்பெண் அதிகரிக்குமா? - Engineering Cut off 2024

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக்கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு வழக்கு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் தீர்ப்பினை தள்ளி வைக்க வேண்டும்” என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் வாதங்களை துவங்காததால், விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனு மீது ஜூலை 12ஆம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

இதையும் படிங்க: பொறியியல் படிப்பில் சேர்வதற்கான கட்-ஆப் மதிப்பெண் அதிகரிக்குமா? - Engineering Cut off 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.