ETV Bharat / state

'இந்த ஏரியாவில் எல்லாம் மழை வெளுத்து வாங்க போகுது' - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! - TN Weather Update

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 7, 2024, 4:15 PM IST

Chennai Meteorological Department: தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை தொடர்பான கோப்புப்படம்
மழை தொடர்பான கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: வடதமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவையில் லேசான மழையும், காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழையும் பதிவாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: புதுக்கோட்டை 10செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; தஞ்சாவூர் 9செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் 8செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; சென்னை மற்றும் திருவண்ணாமலை 7செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; பெரம்பலூர் மற்றும் திருவள்ளூர் 6செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; செங்கல்பட்டு 6செ.மீ முதல் 2செ.மீ வரையிலும்; வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருச்சி 5செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; விருதுநகர் 5செ.மீ முதல் 2செ.மீ வரையிலும்; மதுரை, சேலம், திருவாரூர், கள்ளக்குறிச்சி 4செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; மயிலாடுதுறை 4செ.மீ வரையிலும் மழையின் அளவு பதிவாகியுள்ளது.

அதேபோல, கடலூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், நாமக்கல் மற்றும் ஈரோடு 3செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; திண்டுக்கல் 3செ.மீ முதல் 2செ.மீ வரையிலும்; கரூர் 3செ.மீ வரையிலும்; சிவகங்கை 2செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; ராமநாதபுரம், தர்மபுரி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 1செ.மீ அளவும் மழை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சமவெளிப்பகுதிகளில் பதிவான வெப்பநிலை: அதிகபட்ச வெப்பநிலையாக கரூர்பரமத்தி மற்றும் மதுரை விமானநிலையம் பகுதிகளில் 38.5 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக ஈரோடு மாவட்டத்தில் 18.0 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஆக.7) முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல, இன்று (ஆக.7) ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

இதுமட்டும் அல்லாது, ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று (ஆக.7) முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

அதேபோல, நாளை (ஆக.8) வடதமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஒகேனக்கல் தொங்கு பாலம் சேதம்.. சுற்றுலா பயணிகளுக்கு தொடரும் தடை!

சென்னை: வடதமிழக மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. புதுவையில் லேசான மழையும், காரைக்கால் பகுதிகளில் மிக லேசான மழையும் பதிவாகியுள்ளது. மேலும், தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: புதுக்கோட்டை 10செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; தஞ்சாவூர் 9செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; விழுப்புரம் மற்றும் காஞ்சிபுரம் 8செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; சென்னை மற்றும் திருவண்ணாமலை 7செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; பெரம்பலூர் மற்றும் திருவள்ளூர் 6செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; செங்கல்பட்டு 6செ.மீ முதல் 2செ.மீ வரையிலும்; வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருச்சி 5செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; விருதுநகர் 5செ.மீ முதல் 2செ.மீ வரையிலும்; மதுரை, சேலம், திருவாரூர், கள்ளக்குறிச்சி 4செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; மயிலாடுதுறை 4செ.மீ வரையிலும் மழையின் அளவு பதிவாகியுள்ளது.

அதேபோல, கடலூர், நீலகிரி, கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், அரியலூர், நாமக்கல் மற்றும் ஈரோடு 3செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; திண்டுக்கல் 3செ.மீ முதல் 2செ.மீ வரையிலும்; கரூர் 3செ.மீ வரையிலும்; சிவகங்கை 2செ.மீ முதல் 1செ.மீ வரையிலும்; ராமநாதபுரம், தர்மபுரி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 1செ.மீ அளவும் மழை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சமவெளிப்பகுதிகளில் பதிவான வெப்பநிலை: அதிகபட்ச வெப்பநிலையாக கரூர்பரமத்தி மற்றும் மதுரை விமானநிலையம் பகுதிகளில் 38.5 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக ஈரோடு மாவட்டத்தில் 18.0 டிகிரி செல்சியசும் பதிவாகியுள்ளது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஆக.7) முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் 30 முதல் 40 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதேபோல, இன்று (ஆக.7) ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

இதுமட்டும் அல்லாது, ஆகஸ்ட் 12ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று (ஆக.7) முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

அதேபோல, நாளை (ஆக.8) வடதமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே, மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஒகேனக்கல் தொங்கு பாலம் சேதம்.. சுற்றுலா பயணிகளுக்கு தொடரும் தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.