ETV Bharat / state

பாலியல் புகாரில் சென்னை காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி கைது? - PRIEST KARTHIK MUNUSAMY CASE

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 28, 2024, 12:57 PM IST

Priest Karthik Munusamy Arrest: தனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமியை விருகம்பாக்கம் மகளிர் போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி
அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி (Credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் ஒருவர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், "சென்னை மண்ணடி பகுதியில் உள்ள காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி என்பவர், அந்த கோயிலுக்கு நான் சென்றபோது என்னுடன் நட்பாக பழகி, என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மோசடி செய்துவிட்டார்" என்று புகார் ஒன்றை அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி மீது விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நம்பிக்கை மோசடி, பெண்ணை மானபங்கம்படுத்துதல், கொலை மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், தனிப்படை அமைத்து கார்த்திக் முனுசாமியை தீவிரமாகத் தேடிவருவதோடு, காளிகாம்பாள் கோயிலின் தலைமை அர்ச்சகர் காளிதாஸ் உட்பட ஐந்து நபர்களிடம் சம்மன் அனுப்பி காவல் நிலையம் வரவழைத்து நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுமட்டும் அல்லாது, அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரால் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது. கார்த்திக் முனுசாமி தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவரை விருகம்பாக்கம் மகளிர் போலீசார் கைது செய்துள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் முனுசாமியை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பெண் தொகுப்பாளர் கொடுத்த புகாரில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும், கார்த்திக் முனுசாமி இதேபோன்று வேறு பெண்களை ஏமாற்றி உள்ளாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக, பாதிக்கப்பட்ட பெண் தொகுப்பாளர் சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் நேற்று (மே 27) விசாரணைக்கு ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திண்டுக்கல் கலெக்டர் ஆபீஸில் சிக்கிய கணக்கில் வராத ரூ.2 லட்சம் பணம்! லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி - பின்னணி என்ன?

சென்னை: சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி பெண் தொகுப்பாளர் ஒருவர் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், "சென்னை மண்ணடி பகுதியில் உள்ள காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி என்பவர், அந்த கோயிலுக்கு நான் சென்றபோது என்னுடன் நட்பாக பழகி, என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்று மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி மோசடி செய்துவிட்டார்" என்று புகார் ஒன்றை அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், கோயில் அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி மீது விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நம்பிக்கை மோசடி, பெண்ணை மானபங்கம்படுத்துதல், கொலை மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

மேலும், தனிப்படை அமைத்து கார்த்திக் முனுசாமியை தீவிரமாகத் தேடிவருவதோடு, காளிகாம்பாள் கோயிலின் தலைமை அர்ச்சகர் காளிதாஸ் உட்பட ஐந்து நபர்களிடம் சம்மன் அனுப்பி காவல் நிலையம் வரவழைத்து நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுமட்டும் அல்லாது, அர்ச்சகர் கார்த்திக் முனுசாமி வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரால் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது. கார்த்திக் முனுசாமி தலைமறைவாக இருந்து வந்த நிலையில், அவரை விருகம்பாக்கம் மகளிர் போலீசார் கைது செய்துள்ளதாகவும், கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் முனுசாமியை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பெண் தொகுப்பாளர் கொடுத்த புகாரில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும், கார்த்திக் முனுசாமி இதேபோன்று வேறு பெண்களை ஏமாற்றி உள்ளாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னதாக, பாதிக்கப்பட்ட பெண் தொகுப்பாளர் சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள மாநில மகளிர் ஆணையத்தில் நேற்று (மே 27) விசாரணைக்கு ஆஜரானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: திண்டுக்கல் கலெக்டர் ஆபீஸில் சிக்கிய கணக்கில் வராத ரூ.2 லட்சம் பணம்! லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி - பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.