ETV Bharat / state

ஆம்ஸ்ட்ராங் துடிக்கத் துடிக்க வெட்டி கொல்லப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு; நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி - Armstrong murder video

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 14, 2024, 1:28 PM IST

Updated : Jul 14, 2024, 1:43 PM IST

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், சென்னைையில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உணவு விநியோக நிறுவன சீருடையில் ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிட்டவர்கள்
உணவு விநியோக நிறுவன சீருடையில் ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிட்டவர்கள் (Image Credit - ETV Bharat Tamilnadu)

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்படும் சிசிடிவி காட்சிகள் (Video Credit - ETV Bharat Tamilnadu)

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஐந்தாம் தேதி சென்னை பெரம்பூரில் அவரது வீட்டின் அருகே பயங்கரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக இதுவரையில் 11 பேர் கைது செய்யப்பட்டு, ஐந்து நாள் போலீஸ் காவலில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று காலை சென்னை மாதவரத்தில் திருவேங்கடம் என்ற ரவுடி போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் முக்கிய நபராக குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்படும் சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி உள்ளது.

அதில் பெரம்பூரில் வீடு கட்டும் பணிகளை ஆம்ஸ்ட்ராங் தனது நண்பர்களுடன் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது கட்டுமான பணி நடைபெறும் இடத்துக்கு அருகே, ஆங்காங்கே பதுங்கி இருந்த ரவுடி கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிடும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

அத்துடன் அந்த கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து கத்தியால் சரமாரியாக வெட்டும் காட்சிகளும் அதில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரை படுகொலை செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்யவில்லை என்றும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள், இக்கொலையை செய்வதற்கு முன்னர் எப்படி வந்தார்கள்? எப்படி அவர்கள் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டினார்கள்? என்பதை விவரிக்கும் விதத்தில் சிசிடிவி காட்சிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் போலீஸ் உயரதிகாரிகள் நேரில் ஆய்வு!

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்படும் சிசிடிவி காட்சிகள் (Video Credit - ETV Bharat Tamilnadu)

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஐந்தாம் தேதி சென்னை பெரம்பூரில் அவரது வீட்டின் அருகே பயங்கரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக இதுவரையில் 11 பேர் கைது செய்யப்பட்டு, ஐந்து நாள் போலீஸ் காவலில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று காலை சென்னை மாதவரத்தில் திருவேங்கடம் என்ற ரவுடி போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் முக்கிய நபராக குற்றம்சாட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்படும் சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி உள்ளது.

அதில் பெரம்பூரில் வீடு கட்டும் பணிகளை ஆம்ஸ்ட்ராங் தனது நண்பர்களுடன் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்போது கட்டுமான பணி நடைபெறும் இடத்துக்கு அருகே, ஆங்காங்கே பதுங்கி இருந்த ரவுடி கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை நோட்டமிடும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

அத்துடன் அந்த கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை சுற்றி வளைத்து கத்தியால் சரமாரியாக வெட்டும் காட்சிகளும் அதில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், அவரை படுகொலை செய்த நபர்களை காவல்துறையினர் கைது செய்யவில்லை என்றும் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள், இக்கொலையை செய்வதற்கு முன்னர் எப்படி வந்தார்கள்? எப்படி அவர்கள் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டினார்கள்? என்பதை விவரிக்கும் விதத்தில் சிசிடிவி காட்சிகளை காவல்துறை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க:சென்னையில் ரவுடி திருவேங்கடம் என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் போலீஸ் உயரதிகாரிகள் நேரில் ஆய்வு!

Last Updated : Jul 14, 2024, 1:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.