ETV Bharat / state

மெரினா மரணங்கள்: கனிமொழி சொன்ன அட்வைஸ்! மா.சு. கொடுத்த ரியாக்ஷன்! - marina air show deaths

சமாளிக்க முடியாத கூட்டங்களை இனி தவிர்க்கலாம் என திமுக எம்.பி.கனிமொழி கூறிய நிலையில், இதுகுறித்த கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 3 hours ago

கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர் மா. சுப்ரமணியன் (கோப்புப்படம்)
கனிமொழி எம்பி மற்றும் அமைச்சர் மா. சுப்ரமணியன் (கோப்புப்படம்) (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை நேற்று (அக்.6) சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கண்டு களித்தனர். சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில், மெரினாவில் குவிந்தவர்களில் பலருக்கு நீர் சத்து குறைவால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குடிக்க நீரின்றி, ஒதுங்க நிழலின்றி, பல பேர் கடும் நெரிசலுக்கு மத்தியில் வீடு போய் சேர்ந்தனர். இதற்கிடையே, மயங்கி விழுந்த 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்களில், திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (34), பெருங்களத்தூரைச் சேர்ந்த சீனிவாசன் (48), சென்னை மடுவங்கரை பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் (40), கொருக்குப்பேட்டை ஜான் (56), திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மணி (55) ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை மாநகரை சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, திமுக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

கனிமொழி ட்வீட்: இந்த நிலையில், திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில், ''சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னை ஏர் ஷோ; உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!

இதனிடையே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கனிமொழியின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், கனிமொழி கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து அவரிடமே நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் என்று முடித்துக் கொண்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

சென்னை: மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை நேற்று (அக்.6) சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கண்டு களித்தனர். சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில், மெரினாவில் குவிந்தவர்களில் பலருக்கு நீர் சத்து குறைவால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. குடிக்க நீரின்றி, ஒதுங்க நிழலின்றி, பல பேர் கடும் நெரிசலுக்கு மத்தியில் வீடு போய் சேர்ந்தனர். இதற்கிடையே, மயங்கி விழுந்த 100க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்களில், திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (34), பெருங்களத்தூரைச் சேர்ந்த சீனிவாசன் (48), சென்னை மடுவங்கரை பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் (40), கொருக்குப்பேட்டை ஜான் (56), திருவல்லிக்கேணியைச் சேர்ந்த மணி (55) ஆகிய 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை மாநகரை சோகத்தில் ஆழ்த்தியுள்ள இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, திமுக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

கனிமொழி ட்வீட்: இந்த நிலையில், திமுக எம்பி கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில், ''சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற ராணுவ விமான சாகச நிகழ்ச்சியை காண வந்த பொதுமக்கள் கூட்ட நெரிசலால் அவதியுற்றதும், வெப்ப நிலையும் அதிகமாக இருந்த நிலையில் 5 பேர் உயிரிழந்த செய்தி மிகுந்த வருத்தமும், வேதனையும் அளிக்கிறது. சமாளிக்க முடியாத கூட்டங்கள், இனி கூடுவதையும் தவிர்க்க வேண்டும்'' என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: சென்னை ஏர் ஷோ; உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!

இதனிடையே சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கனிமொழியின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், கனிமொழி கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து அவரிடமே நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் என்று முடித்துக் கொண்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.