ETV Bharat / state

2026-ல் கோட்டையில் தேசியக் கொடியேற்ற மக்கள் வாய்ப்பளிப்பார்கள் - அண்ணாமலை நம்பிக்கை! - BJP Annamalai

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 15, 2024, 9:11 PM IST

BJP Annamalai: உழைப்பின் மூலமாக மக்கள் அங்கீகாரத்தைப் பெற்று 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். 2026-ல் கோட்டையில் தேசியக் கொடியேற்ற மக்கள் வாய்ப்பளிப்பார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை, அரவிந்த் மேனன்
அண்ணாமலை (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: 78வது சுதந்திர தினத்தையொட்டி பாஜக தலைமை அலுவலகத்தில், கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில், இன்று தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தேசியக் கொடியை ஏற்றினார்.

பின்னர், விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது, “நமது தேசத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக மாற்றுப்பாதை கிடைத்திருக்கிறது. இன்று பிரதமர் மோடி செங்கோட்டையில், 19ஆம் நூற்றாண்டில் 40 கோடி இந்தியர்கள் போராடி நமக்கென்று ஒரு நாட்டைப் பெற்றுக் கொடுத்தார்களோ, அதேபோல், 21ஆம் நூற்றாண்டில் 140 கோடி மக்கள் போராடி நமக்கென ஒரு வளர்ந்த பாரதத்தை போராடிக் கொடுக்க வேண்டும் என்றார்.

மேலும், ஒரே நாடு ஒரே தேர்தலை மக்களிடம் வலியுறுத்தியுள்ளார். எந்த மதத்தையும் சாராத, அனைத்து மக்களை உள்ளடக்கிய சட்டங்கள் இருக்க வேண்டும். அதை நிறைவேற்றுவது நமது கடமை என வலியுறுத்தியுள்ளார். வங்கதேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, அங்கு உள்ள இந்துக்களின் பிரச்னைகள் குறித்து பேசியுள்ளார்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு, தான் இழந்த அந்தஸ்தை மீண்டும் பெறவேண்டும். தமிழகம் வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்ல வேண்டும். வருகின்ற காலத்தில் நம் உழைப்பின் மூலமாக மக்கள் அங்கீகாரத்தைப் பெற்று 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு நாம் எல்லோரும் ஒன்று சேர வேண்டும். 2026-ல் கோட்டையில் தேசியக் கொடியேற்ற மக்கள் வாய்ப்பு அளிப்பார்கள். வளர்ந்த பாரதம் வேண்டுமென்றால், திமுக ஆட்சி இருக்கக்கூடாது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருந்து, அதை துறந்துவிட்டு மக்களுக்கு ஆக்கப்பூர்வமான அரசியல் வேலையைச் செய்ய வேண்டும் என்பதற்காக மீண்டும் தமிழகத்திற்கு வந்துள்ள குஷ்புவை கட்சி சார்பாக வரவேற்கிறேன்” என்றார்.

இந்த நிகழ்வில் பாஜக துணைத் தலைவர்கள் கேசவ விநாயகம், வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், மூத்த தலைவர் எச்.ராஜா, குஷ்பூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேசியக்கொடியை ஏற்றிய பின் தேசியக்கொடி ஏந்திய வாகனப் பேரணியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார். கொடியேந்திய வாகனத்தோடு பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் வாகனப் பேரணியில் கலந்து கொண்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: சதுரங்க வேட்டை பாணியில் தேனியில் சம்பவம்.. ரூ.3.40 கோடி போலி நோட்டுகள் பறிமுதல்!

சென்னை: 78வது சுதந்திர தினத்தையொட்டி பாஜக தலைமை அலுவலகத்தில், கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை முன்னிலையில், இன்று தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் தேசியக் கொடியை ஏற்றினார்.

பின்னர், விழாவில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது, “நமது தேசத்திற்கு கடந்த 10 ஆண்டுகளாக மாற்றுப்பாதை கிடைத்திருக்கிறது. இன்று பிரதமர் மோடி செங்கோட்டையில், 19ஆம் நூற்றாண்டில் 40 கோடி இந்தியர்கள் போராடி நமக்கென்று ஒரு நாட்டைப் பெற்றுக் கொடுத்தார்களோ, அதேபோல், 21ஆம் நூற்றாண்டில் 140 கோடி மக்கள் போராடி நமக்கென ஒரு வளர்ந்த பாரதத்தை போராடிக் கொடுக்க வேண்டும் என்றார்.

மேலும், ஒரே நாடு ஒரே தேர்தலை மக்களிடம் வலியுறுத்தியுள்ளார். எந்த மதத்தையும் சாராத, அனைத்து மக்களை உள்ளடக்கிய சட்டங்கள் இருக்க வேண்டும். அதை நிறைவேற்றுவது நமது கடமை என வலியுறுத்தியுள்ளார். வங்கதேசத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, அங்கு உள்ள இந்துக்களின் பிரச்னைகள் குறித்து பேசியுள்ளார்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “தமிழ்நாடு, தான் இழந்த அந்தஸ்தை மீண்டும் பெறவேண்டும். தமிழகம் வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்ல வேண்டும். வருகின்ற காலத்தில் நம் உழைப்பின் மூலமாக மக்கள் அங்கீகாரத்தைப் பெற்று 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு நாம் எல்லோரும் ஒன்று சேர வேண்டும். 2026-ல் கோட்டையில் தேசியக் கொடியேற்ற மக்கள் வாய்ப்பு அளிப்பார்கள். வளர்ந்த பாரதம் வேண்டுமென்றால், திமுக ஆட்சி இருக்கக்கூடாது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருந்து, அதை துறந்துவிட்டு மக்களுக்கு ஆக்கப்பூர்வமான அரசியல் வேலையைச் செய்ய வேண்டும் என்பதற்காக மீண்டும் தமிழகத்திற்கு வந்துள்ள குஷ்புவை கட்சி சார்பாக வரவேற்கிறேன்” என்றார்.

இந்த நிகழ்வில் பாஜக துணைத் தலைவர்கள் கேசவ விநாயகம், வி.பி.துரைசாமி, கரு.நாகராஜன், மூத்த தலைவர் எச்.ராஜா, குஷ்பூ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தேசியக்கொடியை ஏற்றிய பின் தேசியக்கொடி ஏந்திய வாகனப் பேரணியை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார். கொடியேந்திய வாகனத்தோடு பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் வாகனப் பேரணியில் கலந்து கொண்டார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: சதுரங்க வேட்டை பாணியில் தேனியில் சம்பவம்.. ரூ.3.40 கோடி போலி நோட்டுகள் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.