ETV Bharat / state

“விஜய் சினிமாவைப் போல் அரசியலில் 'டூப்' போட முடியாது"- பகுஜன் சமாஜ் கட்சி எச்சரிக்கை! - TVK PARTY flag elephant ISSUE

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 27, 2024, 9:59 PM IST

TVK PARTY flag elephant ISSUE: தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியில் இருக்கும் யானையை உடனடியாக விஜய் நீக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியினர் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியினர், தவெக தலைவர் விஜய்
பகுஜன் சமாஜ் கட்சியினர், தவெக தலைவர் விஜய் (Credits- ETV Bharat Tamil Nadu)

சென்னை: பகுஜன் சமாஜ் கொடியைப்போல விஜயின் கட்சிக் கொடியிலும் யானை சின்னம் இருப்பதால் மக்களிடைய தேவையற்ற குழப்பம் ஏற்படும் என்றும், நடிகர் விஜய் அரசியல் நாகரிகமின்றி சட்ட விரோதமாக யானை சின்னத்தை பயன்படுத்தியிருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

மனு அளித்த பின் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி கூறுகையில், “ நடிகர் விஜய் தனது கட்சிக் கொடியில் பகுஜன் சமாஜ் கட்சியின் யானையை பயன்படுத்தியுள்ளார். யானை சின்னம் அம்பேத்கர் போட்டியிட தேர்ந்தெடுத்த சின்னம். அம்பேத்கரின் இந்திய குடியரசுக் கட்சிக்கு யானை சின்னமாக இருந்தது. அந்த கட்சி அங்கீகாரம் இழந்த பிறகு அதை பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராம் வாங்கினார்.

தலித் சமூகம் யானையைப் போல முழு பலத்துடன் ஆட்சி அதிகாரத்தில் அமரும் என்று குறிப்பிடும் வகையில் அம்பேத்கர் யானையை பயன்படுத்தினார். எனவே 3ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருக்கும் யானை போல் ஆளாளுக்கு யானையைப் பயன்படுத்த கூடாது.

ஃபெவிக்கால், முத்தூத் பைனான்ஸ் நிறுவன விளம்பரங்களில் யானை இருப்பது பிரச்சனை இல்லை. ஆனால் இன்னொரு அரசியல் கட்சி எந்த வடிவிலும் யானையை பயன்படுத்தக்கூடாது. நடிகர் விஜய் வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் இதை செய்துள்ளார். சினிமாவில் இருப்பவர்கள் நல்லவர்கள் போல் நடித்து, மக்களை ஏமாற்றி அதிகாரத்துக்கு வர பார்ப்பார்கள்.

திரைக்கவர்ச்சியில் அரசியலுக்கு வருவோர் மக்களின் அரசியல் அறியாமையை பயன்படுத்திக் கொள்வார்கள். திரைப்படங்களைப் போல் அரசியலில் டூப் போட முடியாது. விஜய் தனது கட்சிக் கொடியில் யானை சின்னத்தை நீக்காவிட்டால் மிகபெரிய சட்டப் போராட்டத்தை முன்னெடுப்போம்.

பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சியின் சின்னத்தை இன்னொரு கட்சி எந்த வடிவிலும் பயன்படுத்தக்கூடாது. இன்று தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு கொடுத்துள்ளோம். இந்த சின்னங்கள் தொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரம் இந்தியத் தேர்தல் ஆணையத்திடமே இருக்கிறது. சின்னங்கள் குறித்து தங்களிடம் கருத்துகளை கேட்கும் போது எங்கள் கருத்தை இந்தியத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்கிறோம்.

நடிகர் விஜய் யானையை பயன்படுத்துவதால் எங்கள் கட்சிக்கு விளம்பரம்தானே என்று கேட்கிறார்கள். அதுபோன்ற சீப்பான விளம்பரங்களை பகுஜன் சமாஜ் கட்சி விரும்பாது. எந்த நடிகர், நடிகையின் சீப்பான பிரசாரத்திலும் வளர்ந்த கட்சியல்ல பகுஜன் சமாஜ் கட்சி. விஜய் கட்சியினரிடம் எங்களது கருத்தை கூறினோம், அவர்கள் அதற்கு எந்த பதிலும் கூறாமல் இருக்கின்றனர்” என்றார்

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: படிப்புடன் பார்ட் டைமில் மூட்டை தூக்கும் மாணவன்.. வைரல் வீடியோவை பார்த்து ஓவர் நைட்டில் உதவி செய்த விஜய்!

சென்னை: பகுஜன் சமாஜ் கொடியைப்போல விஜயின் கட்சிக் கொடியிலும் யானை சின்னம் இருப்பதால் மக்களிடைய தேவையற்ற குழப்பம் ஏற்படும் என்றும், நடிகர் விஜய் அரசியல் நாகரிகமின்றி சட்ட விரோதமாக யானை சின்னத்தை பயன்படுத்தியிருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.

மனு அளித்த பின் தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் சத்தியமூர்த்தி கூறுகையில், “ நடிகர் விஜய் தனது கட்சிக் கொடியில் பகுஜன் சமாஜ் கட்சியின் யானையை பயன்படுத்தியுள்ளார். யானை சின்னம் அம்பேத்கர் போட்டியிட தேர்ந்தெடுத்த சின்னம். அம்பேத்கரின் இந்திய குடியரசுக் கட்சிக்கு யானை சின்னமாக இருந்தது. அந்த கட்சி அங்கீகாரம் இழந்த பிறகு அதை பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராம் வாங்கினார்.

தலித் சமூகம் யானையைப் போல முழு பலத்துடன் ஆட்சி அதிகாரத்தில் அமரும் என்று குறிப்பிடும் வகையில் அம்பேத்கர் யானையை பயன்படுத்தினார். எனவே 3ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருக்கும் யானை போல் ஆளாளுக்கு யானையைப் பயன்படுத்த கூடாது.

ஃபெவிக்கால், முத்தூத் பைனான்ஸ் நிறுவன விளம்பரங்களில் யானை இருப்பது பிரச்சனை இல்லை. ஆனால் இன்னொரு அரசியல் கட்சி எந்த வடிவிலும் யானையை பயன்படுத்தக்கூடாது. நடிகர் விஜய் வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் இதை செய்துள்ளார். சினிமாவில் இருப்பவர்கள் நல்லவர்கள் போல் நடித்து, மக்களை ஏமாற்றி அதிகாரத்துக்கு வர பார்ப்பார்கள்.

திரைக்கவர்ச்சியில் அரசியலுக்கு வருவோர் மக்களின் அரசியல் அறியாமையை பயன்படுத்திக் கொள்வார்கள். திரைப்படங்களைப் போல் அரசியலில் டூப் போட முடியாது. விஜய் தனது கட்சிக் கொடியில் யானை சின்னத்தை நீக்காவிட்டால் மிகபெரிய சட்டப் போராட்டத்தை முன்னெடுப்போம்.

பதிவு செய்யப்பட்ட ஒரு அரசியல் கட்சியின் சின்னத்தை இன்னொரு கட்சி எந்த வடிவிலும் பயன்படுத்தக்கூடாது. இன்று தலைமைத் தேர்தல் அலுவலரிடம் புகார் மனு கொடுத்துள்ளோம். இந்த சின்னங்கள் தொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரம் இந்தியத் தேர்தல் ஆணையத்திடமே இருக்கிறது. சின்னங்கள் குறித்து தங்களிடம் கருத்துகளை கேட்கும் போது எங்கள் கருத்தை இந்தியத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் தெரிவிக்கிறோம்.

நடிகர் விஜய் யானையை பயன்படுத்துவதால் எங்கள் கட்சிக்கு விளம்பரம்தானே என்று கேட்கிறார்கள். அதுபோன்ற சீப்பான விளம்பரங்களை பகுஜன் சமாஜ் கட்சி விரும்பாது. எந்த நடிகர், நடிகையின் சீப்பான பிரசாரத்திலும் வளர்ந்த கட்சியல்ல பகுஜன் சமாஜ் கட்சி. விஜய் கட்சியினரிடம் எங்களது கருத்தை கூறினோம், அவர்கள் அதற்கு எந்த பதிலும் கூறாமல் இருக்கின்றனர்” என்றார்

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: படிப்புடன் பார்ட் டைமில் மூட்டை தூக்கும் மாணவன்.. வைரல் வீடியோவை பார்த்து ஓவர் நைட்டில் உதவி செய்த விஜய்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.