ETV Bharat / state

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி..பெற்றோரை இழந்த மாற்றுத்திறனாளிக்கு உதவிக்கரம் நீட்டிய அறக்கட்டளை! - govindarajapuram disabled person

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 9, 2024, 7:55 PM IST

Atchayam Trust : ஈடிவி பாரத் செய்தி எதிரொலியாக, ஈரோட்டில் பெற்றோரை இழந்த மாற்றுத்திறளானியை பாதுகாப்பதாக கூறி, அட்சயம் அறக்கட்டளை அவரை அழைத்துச் சென்றுள்ளது.

மாற்றுத்திறளானி முருகன் மற்றும் அட்சயம் அறக்கட்டளையினர்
மாற்றுத்திறளானி முருகன் மற்றும் அட்சயம் அறக்கட்டளையினர் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

ஈரோடு: "ஈரோட்டில் பெற்றோரை இழந்து நிர்கதியாக நிற்கும் மாற்றுத்திறனாளி..அரசு உதவிக்கரம் நீட்ட கோரிக்கை" என்ற தலைப்பில் ஈடிவி பாரத்தில் செப்டம்பர் 5 ஆம் தேதி செய்தி வெளியாகி இருந்தது. இதன் எதிரொலியாக பெற்றோரை இழந்த மற்றுத்திறனாளிக்கு அட்சயம் அறக்கட்டளை உதவிக்கரம் நீட்டியுள்ளது.

மாற்றுத்திறளானி முருகனுக்கு அட்சயம் அறக்கட்டளை உதவிக்கரம் (Video Credits - ETV Bharat Tamil Nadu)

ஈரோடு சத்தியமங்கலம் நகராட்சி கோவிந்தராஜபுரத்தைச் சேர்ந்தவர்கள் பழனிசாமி - நஞ்சம்மாள் தம்பதியினர். நெசவுத் தொழில் செய்து வந்த இவர்கள், மகன் முருகனுடன் (42) வசித்து வந்துள்ளனர். திருமணமாகாத இவர் ஓட்டுநராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்துள்ளது.

இதில்,முருகன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கியுள்ளார். தன்னுடைய வேலையை தானே செய்யமுடியாத மகனின் நிலைமையைக் கண்டு பெற்றோர் மன உளைச்சளில் இருந்து வந்துள்ளனர். அவரது தாய் நஞ்சம்மாள் இட்லி விற்று முருகனைப் பராமரித்து வந்துள்ளார். ஆனால், மனமுடைந்த அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். முருகனின் தாய் இறந்ததையடுத்து, மன வேதனையில் இருந்த தந்தையும் உடல்நலக்குறைவால் கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.30) உயிரிழந்துள்ளார்.

இதனால் வாடகை வீட்டில் ஆதரவின்றி, ஒரு வேளை உணவு கிடைக்காமல் முருகன் தனிமையில் தவித்து வந்துள்ளார். மேலும், அவருக்கு மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகையும் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, வாடகை வீட்டு உரிமையாளர் வீட்டை காலி செய்ய வற்புறுத்தியுள்ளனர். மேலும், உறவினர் எவரும் உதவ முன்வராத நிலையில் தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர் முருகனை அரசு காப்பகத்தில் சேர்க்க முயற்சி செய்துள்ளார்.

ஆனால், அங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே சேர்ப்பதால், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட முருகனை சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இதுகுறித்து, சொக்கலிங்கம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். இது குறித்து, தாய், தந்தையை இழந்து நடக்க முடியாமல் படுக்கையிலேயே முடங்கி கிடக்கும் முருகனுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என ஈடிவி பாரத்தில் செய்தி வெளியானது.

இந்நிலையில், இந்த செய்தியின் அடிப்படையில், ஈரோடு அட்சயம் அறக்கட்டளை முருகனை தங்கள் அறக்கட்டளையில் பராமரிக்க ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, அட்சயம் அறக்கட்டளை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள், கோவிந்தராஜபுரம் வீதியில் உள்ள முருகனை நேரில் வந்து மருத்துவ பரிசோதனை செய்தனர். தொடர்ந்து அவரை சுத்தம் செய்து புதிய ஆடைகள் அணிவித்து ஈரோடு ஆதரவற்றோர் இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கிருந்தவர்களை கண்டு முருகன் அழுத படியே சென்றார்.

இது குறித்து அட்சயம் அறக்கட்டளையின் சமூக பணியாளர் நட்றாயன் ராம் கூறியதாவது, “விபத்தில் பக்கவாதம் ஏற்பட்ட முருகனை தற்போது அட்சயம் அறக்கட்டளை ஏற்றுள்ளது. சமீப காலத்தில் பெற்றோரை இழந்துள்ளார். இவரது எந்த வேளையையும் இவர் செய்ய முடியாமல் மிகவும் சிறமப்பட்டுள்ளார். நாங்கள் செய்தியின் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் தற்போது இவரை மீட்டுள்ளோம். இவரை யாரும் பராமரிக்க முடியாத காரனத்தினால் நாங்கள் அழைத்துச் செல்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஈரோட்டில் பெற்றோரை இழந்து நிர்கதியாக நிற்கும் மாற்றுத்திறனாளி.. அரசு உதவிக்கரம் நீட்ட கோரிக்கை!

ஈரோடு: "ஈரோட்டில் பெற்றோரை இழந்து நிர்கதியாக நிற்கும் மாற்றுத்திறனாளி..அரசு உதவிக்கரம் நீட்ட கோரிக்கை" என்ற தலைப்பில் ஈடிவி பாரத்தில் செப்டம்பர் 5 ஆம் தேதி செய்தி வெளியாகி இருந்தது. இதன் எதிரொலியாக பெற்றோரை இழந்த மற்றுத்திறனாளிக்கு அட்சயம் அறக்கட்டளை உதவிக்கரம் நீட்டியுள்ளது.

மாற்றுத்திறளானி முருகனுக்கு அட்சயம் அறக்கட்டளை உதவிக்கரம் (Video Credits - ETV Bharat Tamil Nadu)

ஈரோடு சத்தியமங்கலம் நகராட்சி கோவிந்தராஜபுரத்தைச் சேர்ந்தவர்கள் பழனிசாமி - நஞ்சம்மாள் தம்பதியினர். நெசவுத் தொழில் செய்து வந்த இவர்கள், மகன் முருகனுடன் (42) வசித்து வந்துள்ளனர். திருமணமாகாத இவர் ஓட்டுநராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்துள்ளது.

இதில்,முருகன் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கியுள்ளார். தன்னுடைய வேலையை தானே செய்யமுடியாத மகனின் நிலைமையைக் கண்டு பெற்றோர் மன உளைச்சளில் இருந்து வந்துள்ளனர். அவரது தாய் நஞ்சம்மாள் இட்லி விற்று முருகனைப் பராமரித்து வந்துள்ளார். ஆனால், மனமுடைந்த அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். முருகனின் தாய் இறந்ததையடுத்து, மன வேதனையில் இருந்த தந்தையும் உடல்நலக்குறைவால் கடந்த வெள்ளிக்கிழமை (ஆக.30) உயிரிழந்துள்ளார்.

இதனால் வாடகை வீட்டில் ஆதரவின்றி, ஒரு வேளை உணவு கிடைக்காமல் முருகன் தனிமையில் தவித்து வந்துள்ளார். மேலும், அவருக்கு மாற்றுத்திறனாளிக்கான உதவித்தொகையும் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, வாடகை வீட்டு உரிமையாளர் வீட்டை காலி செய்ய வற்புறுத்தியுள்ளனர். மேலும், உறவினர் எவரும் உதவ முன்வராத நிலையில் தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சொக்கலிங்கம் என்பவர் முருகனை அரசு காப்பகத்தில் சேர்க்க முயற்சி செய்துள்ளார்.

ஆனால், அங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே சேர்ப்பதால், பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட முருகனை சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இதுகுறித்து, சொக்கலிங்கம் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். இது குறித்து, தாய், தந்தையை இழந்து நடக்க முடியாமல் படுக்கையிலேயே முடங்கி கிடக்கும் முருகனுக்கு அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என ஈடிவி பாரத்தில் செய்தி வெளியானது.

இந்நிலையில், இந்த செய்தியின் அடிப்படையில், ஈரோடு அட்சயம் அறக்கட்டளை முருகனை தங்கள் அறக்கட்டளையில் பராமரிக்க ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, அட்சயம் அறக்கட்டளை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள், கோவிந்தராஜபுரம் வீதியில் உள்ள முருகனை நேரில் வந்து மருத்துவ பரிசோதனை செய்தனர். தொடர்ந்து அவரை சுத்தம் செய்து புதிய ஆடைகள் அணிவித்து ஈரோடு ஆதரவற்றோர் இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அங்கிருந்தவர்களை கண்டு முருகன் அழுத படியே சென்றார்.

இது குறித்து அட்சயம் அறக்கட்டளையின் சமூக பணியாளர் நட்றாயன் ராம் கூறியதாவது, “விபத்தில் பக்கவாதம் ஏற்பட்ட முருகனை தற்போது அட்சயம் அறக்கட்டளை ஏற்றுள்ளது. சமீப காலத்தில் பெற்றோரை இழந்துள்ளார். இவரது எந்த வேளையையும் இவர் செய்ய முடியாமல் மிகவும் சிறமப்பட்டுள்ளார். நாங்கள் செய்தியின் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில் தற்போது இவரை மீட்டுள்ளோம். இவரை யாரும் பராமரிக்க முடியாத காரனத்தினால் நாங்கள் அழைத்துச் செல்கிறோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஈரோட்டில் பெற்றோரை இழந்து நிர்கதியாக நிற்கும் மாற்றுத்திறனாளி.. அரசு உதவிக்கரம் நீட்ட கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.