ETV Bharat / state

சீமான் மீதான அவதூறு வழக்கு; விசாரணை அதிகாரி நியமனம் - அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - Seeman Defamation case Update

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 3, 2024, 1:02 PM IST

Assistant Commissioner Suresh Kumar: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்புவதாக சீமான் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவரை விசாரிக்க உதவி ஆணையர் சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

சீமான்
சீமான் (Credits - Seeman 'X' Page)

சென்னை: சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன், தேர்தல் பரப்புரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறான பாடல் ஒன்றைப் பாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து புகார் எழுந்ததன் அடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காவல்துறைக்கு சவால் விடும் வகையில், "சாட்டை துரைமுருகன் பாடிய பாடலை தானும் பாடுகிறேன்.. முடிந்தால் கைது செய்து பாருங்கள்" என ஒரு செய்தியாளர் சந்திப்பில் பாடிய சம்பவம் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சீமான் மீது பல காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து, சீமானுக்கு எதிராக சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த அஜேஸ் என்பவர், கடந்த ஜூலை 16ஆம் தேதி சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், "மறைந்த தலைவர் கருணாநிதி குறித்து பாடிய பாடலில் தீண்டாமையை வலியுறுத்தும் தடை செய்யப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். மேலும், கருணாநிதியை இழிவுபடுத்தி நோக்கத்தோடு மீண்டும் பாடலாக பாடியும், பேசியும் இருக்கிறார் நாதக சீமான். இதனால் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

தற்போது, இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாநில பட்டியலின ஆணையத்திற்கு அஜேஸ் புகாரளித்தார். இதையடுத்து, இந்த புகாரைப் பரிசீலித்த பட்டியலின ஆணையம், பட்டாபிராம் காவல் நிலைய ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியது. அதுமட்டுமின்றி, சீமான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஆவடி காவல் ஆணையகரத்திற்கு எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், சீமான் மீது பதியப்பட்டுள்ள வழக்கில், விசாரணை அதிகாரியாக பட்டாபிராம் காவல் நிலைய உதவி ஆணையர் சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, சீமானிடம் நேரிலோ அல்லது காவல் நிலையத்திற்கு வரவழைத்தோ விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: கோயில் வணிக நடவடிக்கைகளுக்கான இடம் அல்ல.. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி!

சென்னை: சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன், தேர்தல் பரப்புரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறான பாடல் ஒன்றைப் பாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து புகார் எழுந்ததன் அடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காவல்துறைக்கு சவால் விடும் வகையில், "சாட்டை துரைமுருகன் பாடிய பாடலை தானும் பாடுகிறேன்.. முடிந்தால் கைது செய்து பாருங்கள்" என ஒரு செய்தியாளர் சந்திப்பில் பாடிய சம்பவம் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, சீமான் மீது பல காவல் நிலையங்களில் புகார்கள் அளிக்கப்பட்டன. தொடர்ந்து, சீமானுக்கு எதிராக சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்த அஜேஸ் என்பவர், கடந்த ஜூலை 16ஆம் தேதி சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பட்டாபிராம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில், "மறைந்த தலைவர் கருணாநிதி குறித்து பாடிய பாடலில் தீண்டாமையை வலியுறுத்தும் தடை செய்யப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளார். மேலும், கருணாநிதியை இழிவுபடுத்தி நோக்கத்தோடு மீண்டும் பாடலாக பாடியும், பேசியும் இருக்கிறார் நாதக சீமான். இதனால் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

தற்போது, இந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மாநில பட்டியலின ஆணையத்திற்கு அஜேஸ் புகாரளித்தார். இதையடுத்து, இந்த புகாரைப் பரிசீலித்த பட்டியலின ஆணையம், பட்டாபிராம் காவல் நிலைய ஆய்வாளருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியது. அதுமட்டுமின்றி, சீமான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஆவடி காவல் ஆணையகரத்திற்கு எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், சீமான் மீது பதியப்பட்டுள்ள வழக்கில், விசாரணை அதிகாரியாக பட்டாபிராம் காவல் நிலைய உதவி ஆணையர் சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, சீமானிடம் நேரிலோ அல்லது காவல் நிலையத்திற்கு வரவழைத்தோ விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: கோயில் வணிக நடவடிக்கைகளுக்கான இடம் அல்ல.. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.