ETV Bharat / state

'கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் - திமுகவினர் தொடர்பை வெளிக்கொண்டு வரவே சிபிஐ விசாரணை' - அண்ணாமலை - Kallakurichi Illicit Liquor Case

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 23, 2024, 12:49 PM IST

Updated : Jun 23, 2024, 1:22 PM IST

Annamalai on Kallakurichi Illicit Liquor Case: திமுகவிற்கும், கள்ளச்சாராய கும்பலுக்கும் உள்ள தொடர்பை வெளிக்கொண்டு வர சிபிஐ விசாரணை தேவைப்படுகிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைக் கண்டித்து நேற்று (ஜூன் 22) பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி இருந்த நிலையில், போலீசார் அனுமதி மறுக்கவே சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் முன்பு தடையை மீறி 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அண்ணாமலை பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர், தகவலறிந்து அங்கு வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய சாவுகளைக் கண்டித்து பாஜக தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், மதுரையில் ஆரம்பித்து, சென்னை, கோவை என அனைத்து பகுதிகளிலும் பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதைத் தடுத்து, முன்னேச்சரிகை நடவடிக்கை என்று அவர்களை கைது செய்துள்ளனர்.

டாஸ்மாக் கடைகளால் ஏற்படும் மக்கள் பிரச்சனைக்காகவும், கள்ளச்சாராய சாவுக்காகவும், தமிழகத்தில் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்காகவும் ஆர்ப்பாட்டம் நடத்த பாஜக சார்பில் அந்தந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து, பெண்கள் உள்பட அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் வைத்துள்ளனர்" என்று குற்றம்சாட்டினார்.

மதுவுக்கு அடிமையான தமிழகம் - அண்ணாமலை: மேலும் பேசிய அவர், "தமிழ்நாட்டில் 4,661 நூலகங்களும், 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. ஆனால், 5,329 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை விட 2 மடங்கு அதிகமாக டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் வெளிப்பாடு தமிழகத்தில் மதுவுக்கு அடிமையாக இருக்கக்கூடிய ஒரு தலைமுறையை உருவாக்கி இருக்கிறார்கள்.

கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 53 பேர் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இதுமட்டும் அல்லாது, 15-க்கும் மேற்பட்டவர்கள் கண்பார்வை இழந்துள்ளனர். இந்தியாவிற்கே தமிழகம் உதாரணம் என்று கூறிய காலம் போய் இன்று இந்தியாவின் முன் தமிழகம் தலைகுனிந்து நின்று கொண்டிருக்கிறோம்.

ஆளுநரிடம் மாநில பாஜக முறையீடு செய்வோம்: இந்த சூழலில், திங்கட்கிழமை (நாளை) காலை 11 மணிக்கு பாஜக கட்சி குழு தமிழக ஆளுநரை சந்திக்க உள்ளது. இந்த குழு ஆளுநரை சந்தித்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு, பாஜகவினர் நேரடியாக கள்ளக்குறிச்சிக்கு சென்று பார்வையிட்டது என அனைத்தையும் ஆளுநரிடம் தெரிவிக்க உள்ளோம்.

கள்ளக்குறிச்சி விவகாரம்; சிபிஐ விசாரணை தேவை: மேலும், இந்த சம்பவத்தில் திமுகவிற்கு உள்ள தொடர்பு குறித்து ஆளுநரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளோம். இந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணையை வலியுறுத்துவோம். திமுகவிற்கும், கள்ளச்சாராய கும்பலுக்கும் உள்ள தொடர்பை வெளி கொண்டு வர சிபிஐ விசாரணை தேவைப்படுகிறது.

தமிழகத்திற்கு சிபிஐ வர வேண்டும் என்றால் மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. தமிழகத்தில் வாரந்தோறும் கள்ளச்சாராயம் குறித்த கண்காணிப்பு கூட்டம் நடைபெறும் என்று கடந்த ஆண்டு முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி எத்தனை ஆய்வுக் கூட்டங்கள் நடந்தது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

கள்ளக்குறிச்சிக்கு முதலமைச்சர் ஏன் வரவில்லை? - அண்ணாமலை: வேறு மாநிலங்களில் ஏதாவது ஒரு தவறு நடந்தால் இங்கு உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கருத்துகளை தெரிவித்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவார்கள். ஆனால் தற்போது, ஒரு கண்டன குரல் கூட வரவில்லை. கள்ளக்குறிச்சிக்கு இன்னும் ஏன் முதலமைச்சர் செல்லவில்லை?

தேசிய பட்டியலின ஆணையம் தமிழகத்திற்கு உடனடியாக வர வேண்டும் என மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம். இதனைத் தவிர்த்து, ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றம் அனுமதி பெற்று மீண்டும் தேதி அறிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சபைக்குள் வெளிமேடையில் பேசுவதைப் போல பேசக்கூடாது! - அமைச்சருக்கும் சபாநாயகருக்கும் இடையே காரசார விவாதம்

கோயம்புத்தூர்: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததைக் கண்டித்து நேற்று (ஜூன் 22) பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி இருந்த நிலையில், போலீசார் அனுமதி மறுக்கவே சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் முன்பு தடையை மீறி 500க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அண்ணாமலை பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர், தகவலறிந்து அங்கு வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய சாவுகளைக் கண்டித்து பாஜக தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டிருந்தோம். ஆனால், மதுரையில் ஆரம்பித்து, சென்னை, கோவை என அனைத்து பகுதிகளிலும் பாஜக தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதைத் தடுத்து, முன்னேச்சரிகை நடவடிக்கை என்று அவர்களை கைது செய்துள்ளனர்.

டாஸ்மாக் கடைகளால் ஏற்படும் மக்கள் பிரச்சனைக்காகவும், கள்ளச்சாராய சாவுக்காகவும், தமிழகத்தில் நடைபெறும் தவறுகளை சுட்டிக்காட்டுவதற்காகவும் ஆர்ப்பாட்டம் நடத்த பாஜக சார்பில் அந்தந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகளிடம் முறைப்படி அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அனுமதி மறுத்து, பெண்கள் உள்பட அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் வைத்துள்ளனர்" என்று குற்றம்சாட்டினார்.

மதுவுக்கு அடிமையான தமிழகம் - அண்ணாமலை: மேலும் பேசிய அவர், "தமிழ்நாட்டில் 4,661 நூலகங்களும், 2,127 ஆரம்ப சுகாதார நிலையங்களும் உள்ளன. ஆனால், 5,329 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தமிழகத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை விட 2 மடங்கு அதிகமாக டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதன் வெளிப்பாடு தமிழகத்தில் மதுவுக்கு அடிமையாக இருக்கக்கூடிய ஒரு தலைமுறையை உருவாக்கி இருக்கிறார்கள்.

கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் இறந்துள்ளனர். இவர்களில் 53 பேர் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். இதுமட்டும் அல்லாது, 15-க்கும் மேற்பட்டவர்கள் கண்பார்வை இழந்துள்ளனர். இந்தியாவிற்கே தமிழகம் உதாரணம் என்று கூறிய காலம் போய் இன்று இந்தியாவின் முன் தமிழகம் தலைகுனிந்து நின்று கொண்டிருக்கிறோம்.

ஆளுநரிடம் மாநில பாஜக முறையீடு செய்வோம்: இந்த சூழலில், திங்கட்கிழமை (நாளை) காலை 11 மணிக்கு பாஜக கட்சி குழு தமிழக ஆளுநரை சந்திக்க உள்ளது. இந்த குழு ஆளுநரை சந்தித்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு, பாஜகவினர் நேரடியாக கள்ளக்குறிச்சிக்கு சென்று பார்வையிட்டது என அனைத்தையும் ஆளுநரிடம் தெரிவிக்க உள்ளோம்.

கள்ளக்குறிச்சி விவகாரம்; சிபிஐ விசாரணை தேவை: மேலும், இந்த சம்பவத்தில் திமுகவிற்கு உள்ள தொடர்பு குறித்து ஆளுநரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளோம். இந்த சம்பவத்தில் சிபிஐ விசாரணையை வலியுறுத்துவோம். திமுகவிற்கும், கள்ளச்சாராய கும்பலுக்கும் உள்ள தொடர்பை வெளி கொண்டு வர சிபிஐ விசாரணை தேவைப்படுகிறது.

தமிழகத்திற்கு சிபிஐ வர வேண்டும் என்றால் மாநில அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற நிலை உள்ளது. தமிழகத்தில் வாரந்தோறும் கள்ளச்சாராயம் குறித்த கண்காணிப்பு கூட்டம் நடைபெறும் என்று கடந்த ஆண்டு முதலமைச்சர் அறிவித்திருந்தார். அதன்படி எத்தனை ஆய்வுக் கூட்டங்கள் நடந்தது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

கள்ளக்குறிச்சிக்கு முதலமைச்சர் ஏன் வரவில்லை? - அண்ணாமலை: வேறு மாநிலங்களில் ஏதாவது ஒரு தவறு நடந்தால் இங்கு உள்ள பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது கருத்துகளை தெரிவித்து ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவார்கள். ஆனால் தற்போது, ஒரு கண்டன குரல் கூட வரவில்லை. கள்ளக்குறிச்சிக்கு இன்னும் ஏன் முதலமைச்சர் செல்லவில்லை?

தேசிய பட்டியலின ஆணையம் தமிழகத்திற்கு உடனடியாக வர வேண்டும் என மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம். இதனைத் தவிர்த்து, ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிமன்றம் அனுமதி பெற்று மீண்டும் தேதி அறிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சபைக்குள் வெளிமேடையில் பேசுவதைப் போல பேசக்கூடாது! - அமைச்சருக்கும் சபாநாயகருக்கும் இடையே காரசார விவாதம்

Last Updated : Jun 23, 2024, 1:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.