ETV Bharat / state

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி..ஃபேஸ்புக் நட்பால் வந்த வினை! - railway job scam

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2024, 9:05 PM IST

பேஸ்புக் மூலமாக நட்பாக பழகி ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 லட்சம் பணம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட ரமேஷ்
கைது செய்யப்பட்ட ரமேஷ் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3 லட்சம் மோசடி செய்தவரை அமைந்தகரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை அமைந்தகரை பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். இவர் கடந்த மார்ச் மாதம் அமைந்தகரை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “ரமேஷ் என்பவர் பேஸ்புக் மூலமாக தனக்கு அறிமுகமாகினார். அவர் ரயில்வே துறையில் பணி புரிவதாகவும், தனக்கும் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி தன்னிடம் இருந்து ரூ.3 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டார்.

ஆனால், இதுவரையில் வேலை வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார். இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பணத்தை திரும்பி பெற்றுத்தர வேண்டும்" என்று புகாரில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: செப். 15 இல் விநாயகர் சிலைகளை கரைக்க 4 இடங்களில் அனுமதி! - சென்னை காவல்துறை அறிவிப்பு

புகாரின் அடிப்படையில் அமைந்தகரை போலீசார் வழக்கு பதிவு செய்து ராமேஷை தேடி வந்தனர்.இந்நிலையில், ரமேஷ் பெரம்பலூர் மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலையடுத்து, அங்கு சென்ற தனிப்படை போலீசார் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையித்தில் நின்று கொண்டிருந்த ரமேஷை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர்.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரனையில், ரமேஷ் சென்னை போரூர் பகுதியை சேர்ந்தவர் என்றும், ஆகாஷிடம் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3 லட்சம் வரை பணத்தை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் ரமேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

சென்னை: ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3 லட்சம் மோசடி செய்தவரை அமைந்தகரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை அமைந்தகரை பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். இவர் கடந்த மார்ச் மாதம் அமைந்தகரை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “ரமேஷ் என்பவர் பேஸ்புக் மூலமாக தனக்கு அறிமுகமாகினார். அவர் ரயில்வே துறையில் பணி புரிவதாகவும், தனக்கும் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி தன்னிடம் இருந்து ரூ.3 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டார்.

ஆனால், இதுவரையில் வேலை வாங்கி தரவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வருகிறார். இது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது பணத்தை திரும்பி பெற்றுத்தர வேண்டும்" என்று புகாரில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: செப். 15 இல் விநாயகர் சிலைகளை கரைக்க 4 இடங்களில் அனுமதி! - சென்னை காவல்துறை அறிவிப்பு

புகாரின் அடிப்படையில் அமைந்தகரை போலீசார் வழக்கு பதிவு செய்து ராமேஷை தேடி வந்தனர்.இந்நிலையில், ரமேஷ் பெரம்பலூர் மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலையடுத்து, அங்கு சென்ற தனிப்படை போலீசார் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையித்தில் நின்று கொண்டிருந்த ரமேஷை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர்.

தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரனையில், ரமேஷ் சென்னை போரூர் பகுதியை சேர்ந்தவர் என்றும், ஆகாஷிடம் ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 3 லட்சம் வரை பணத்தை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் ரமேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.