ETV Bharat / state

“உதயநிதியைத் தவிர வேறு யாருக்கும் துணை முதல்வராகவும் தகுதி இல்லையா?” - வைகைச்செல்வன் கேள்வி! - admk vaigai selvan

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

Updated : 12 minutes ago

திமுகவில் உதயநிதியைத் தவிர வேறு யாருக்கும் துணை முதல்வராகும் தகுதி இல்லையா என அதிமுக வைகைச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் மற்றும் வைகைச்செல்வன் புகைப்படம்
உதயநிதி ஸ்டாலின் மற்றும் வைகைச்செல்வன் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

தஞ்சாவூர்: அதிமுக சார்பில், அண்ணாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தஞ்சாவூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் செய்தித் தொடர்பாளருமான வைகைச்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சேகர், மாநகரச் செயலாளர் சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த வைகைச்செல்வன் கூறியதாவது, "கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தவர் கருணாநிதி, அப்போதே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. கச்சத்தீவை தாரை வார்த்ததன் காரணமாக தமிழக மீனவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் தொடர்ந்து எழுந்து வருகிறது.

அதிமுக வைகைச்செல்வன் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

குறிப்பாக, மீனவர்கள் சிறைபிடிப்பதும், அவர்களின் படகுகளை சேதப்படுத்துவதும் போன்றவை நடைபெற்று வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்து வேண்டும். மேலும், மீனவர்கள் பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும். மிக விரைவில் கச்சத்தீவை மீட்டு நமது உரிமையை நிலைநாட்டுவதற்கு தமிழக அரசு, மத்திய அரசுடன் துணை நின்று வெற்றியைப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

'ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு' ஏற்கனவே அதிமுக ஆதரவு தெரிவித்திருந்தோம். தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், மூன்று மாதங்களுக்கு முன்பு தான் நாடாளுமன்றத் தேர்தல் நடந்திருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன்பு தான் ஜம்மு காஷ்மீர் தேர்தல் நடந்திருக்கிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலை நடத்தியிருந்தால், இது பொதுப்படையாக இருந்திருக்கும். 'ஒரே நாடு ஒரே தேர்தலில்' பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது. ஆகவே, இவை எந்த முறையிலே நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பதை வைத்து அதிமுக தனது கருத்தைச் சொல்லும் என்றும் கூறினார்.

பின்னர், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பிப்ரவரியில் அதிமுக ஒன்றிணையும் எனக் கூறியதற்கு பதிலளித்த அவர், அதிமுக பலம் பொருந்திய கட்சியாகத் தான் இருக்கிறது, பலவீனமாக இல்லை. பலவீனமாக வெளியில் நிற்பவர்கள் பயந்து கொண்டு இப்படி கருத்தை சொல்கிறார்கள்.

அதிமுக பொதுச் செயலாளர் இதற்கெல்லாம் ஒரு முடிவு சொல்வார். திமுகவைப் பொறுத்தவரை, குடும்பத்திற்குள் ஆட்சி பகிர்ந்து அளிக்கப்படுகிறது. துணை முதல்வராகும் தகுதி திமுகவில் வேறு எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கோ, அமைச்சருக்கோ இல்லையா? தாத்தா, மகன், பேரன் என இவர்களுக்குள்ளேயே ஆட்சியைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இதுதான் அண்ணாவின் கொள்கையா? அண்ணாவின் கொள்கை திமுகவில் நீர்த்துப் போய்விட்டது என்பதற்கு இதைவிட சாட்சி வேண்டுமா" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "அதிமுக மீண்டு வர வேண்டும் என்பதுதான் எனது ஆசை" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

தஞ்சாவூர்: அதிமுக சார்பில், அண்ணாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தஞ்சாவூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் செய்தித் தொடர்பாளருமான வைகைச்செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சேகர், மாநகரச் செயலாளர் சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த வைகைச்செல்வன் கூறியதாவது, "கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தவர் கருணாநிதி, அப்போதே பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. கச்சத்தீவை தாரை வார்த்ததன் காரணமாக தமிழக மீனவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் தொடர்ந்து எழுந்து வருகிறது.

அதிமுக வைகைச்செல்வன் செய்தியாளர் சந்திப்பு (Credits - ETV Bharat Tamil Nadu)

குறிப்பாக, மீனவர்கள் சிறைபிடிப்பதும், அவர்களின் படகுகளை சேதப்படுத்துவதும் போன்றவை நடைபெற்று வருகிறது. இதனைத் தடுத்து நிறுத்து வேண்டும். மேலும், மீனவர்கள் பாதுகாப்பை இந்திய அரசு உறுதி செய்ய வேண்டும். மிக விரைவில் கச்சத்தீவை மீட்டு நமது உரிமையை நிலைநாட்டுவதற்கு தமிழக அரசு, மத்திய அரசுடன் துணை நின்று வெற்றியைப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

'ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு' ஏற்கனவே அதிமுக ஆதரவு தெரிவித்திருந்தோம். தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், மூன்று மாதங்களுக்கு முன்பு தான் நாடாளுமன்றத் தேர்தல் நடந்திருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன்பு தான் ஜம்மு காஷ்மீர் தேர்தல் நடந்திருக்கிறது.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலை நடத்தியிருந்தால், இது பொதுப்படையாக இருந்திருக்கும். 'ஒரே நாடு ஒரே தேர்தலில்' பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது. ஆகவே, இவை எந்த முறையிலே நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்பதை வைத்து அதிமுக தனது கருத்தைச் சொல்லும் என்றும் கூறினார்.

பின்னர், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பிப்ரவரியில் அதிமுக ஒன்றிணையும் எனக் கூறியதற்கு பதிலளித்த அவர், அதிமுக பலம் பொருந்திய கட்சியாகத் தான் இருக்கிறது, பலவீனமாக இல்லை. பலவீனமாக வெளியில் நிற்பவர்கள் பயந்து கொண்டு இப்படி கருத்தை சொல்கிறார்கள்.

அதிமுக பொதுச் செயலாளர் இதற்கெல்லாம் ஒரு முடிவு சொல்வார். திமுகவைப் பொறுத்தவரை, குடும்பத்திற்குள் ஆட்சி பகிர்ந்து அளிக்கப்படுகிறது. துணை முதல்வராகும் தகுதி திமுகவில் வேறு எந்த ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கோ, அமைச்சருக்கோ இல்லையா? தாத்தா, மகன், பேரன் என இவர்களுக்குள்ளேயே ஆட்சியைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இதுதான் அண்ணாவின் கொள்கையா? அண்ணாவின் கொள்கை திமுகவில் நீர்த்துப் போய்விட்டது என்பதற்கு இதைவிட சாட்சி வேண்டுமா" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: "அதிமுக மீண்டு வர வேண்டும் என்பதுதான் எனது ஆசை" - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

Last Updated : 12 minutes ago
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.