ETV Bharat / state

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்: தமிழக அரசை கண்டித்து அதிமுக, கூட்டணி கட்சிகள் உண்ணாவிரத போராட்டம்! - AIADMK hunger strike

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 27, 2024, 1:01 PM IST

kallakurichi hooch tragedy: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் இன்று ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்
அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் (credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் மருத்துவனைகளி்ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் பலி தொடர்பாக சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசவும் விவாதிக்கவும் அனுமதிக்கவில்லை என முதல் நாளில் அதிமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவின் பேரில் அவை காவலர்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர்.

தொடர்ந்து சட்டமன்றத்தில் கள்ளகுறிச்சி மரணத்தை பேச அனுமதி மறுக்கப்பட்டதால் கடந்த 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் சிபிசிஐடி விசாரணை முறையாக நடைப்பெறாது எனக்கூறி சிபிஐ விராணைக்கு உத்திரவிட கோரிக்கை வைத்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி- யில் இருந்து சிபிஐக்கு மாற்றவும் சட்டப்பேரவையில் விவாதிக்கவும் அதிமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதனால் நேற்று (ஜூன் 26) கூட்டத்தொடர் முடியும் வரை சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்கக் கூடாது என சபாநாயகர் அப்பாவு தடை விதித்தார். இதனைக் கண்டிக்கும் வகையில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 64 சட்டமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர்கள் ,முன்னாள் அமைச்சர்கள் என அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சிகளான தேமுதிக, புரட்சி பாரதம் கட்சியினர் ஆகியோர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதிமுக கூட்டணி கட்சிகளான தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், புரட்சி பாரத கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, செங்கோட்டையன், பொன்னையன், ஓ.எஸ். மணியன், கடம்பூர் ராஜு, எஸ்பி வேலுமணி , கேபி முனுசாமி ,பொள்ளாச்சி ஜெயராமன், ஆர்.பி. உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன்,அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் கட்சி நிர்வாகிகள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியில் கறார் காட்டிய குஷ்பூ.. 'மெத்தனால் இருந்த ஆதாரம் எங்கே'.. கேள்விகளை அடுக்கிய கமிஷன்!

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். 140க்கும் மேற்பட்டோர் மருத்துவனைகளி்ல் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் பலி தொடர்பாக சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசவும் விவாதிக்கவும் அனுமதிக்கவில்லை என முதல் நாளில் அதிமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு உத்தரவின் பேரில் அவை காவலர்கள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர்.

தொடர்ந்து சட்டமன்றத்தில் கள்ளகுறிச்சி மரணத்தை பேச அனுமதி மறுக்கப்பட்டதால் கடந்த 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். பின்னர் சிபிசிஐடி விசாரணை முறையாக நடைப்பெறாது எனக்கூறி சிபிஐ விராணைக்கு உத்திரவிட கோரிக்கை வைத்து அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக உறுப்பினர்கள் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பான வழக்கை சிபிசிஐடி- யில் இருந்து சிபிஐக்கு மாற்றவும் சட்டப்பேரவையில் விவாதிக்கவும் அதிமுகவினர் தொடர்ந்து வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதனால் நேற்று (ஜூன் 26) கூட்டத்தொடர் முடியும் வரை சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்கக் கூடாது என சபாநாயகர் அப்பாவு தடை விதித்தார். இதனைக் கண்டிக்கும் வகையில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியம் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 64 சட்டமன்ற உறுப்பினர்கள் மாநிலங்களவை உறுப்பினர்கள் ,முன்னாள் அமைச்சர்கள் என அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சிகளான தேமுதிக, புரட்சி பாரதம் கட்சியினர் ஆகியோர் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதிமுக கூட்டணி கட்சிகளான தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், புரட்சி பாரத கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, செங்கோட்டையன், பொன்னையன், ஓ.எஸ். மணியன், கடம்பூர் ராஜு, எஸ்பி வேலுமணி , கேபி முனுசாமி ,பொள்ளாச்சி ஜெயராமன், ஆர்.பி. உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன்,அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மற்றும் கட்சி நிர்வாகிகள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியில் கறார் காட்டிய குஷ்பூ.. 'மெத்தனால் இருந்த ஆதாரம் எங்கே'.. கேள்விகளை அடுக்கிய கமிஷன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.