ETV Bharat / state

"மண் வளத்திலிருந்து மக்கள் நலம்" - வேளாண்மை உற்பத்தி ஆணையர் அபூர்வா விளக்கம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 20, 2024, 9:12 PM IST

TN Agriculture Budget: மண் வளத்திலிருந்து மக்கள் நலம் தான் இந்த பட்ஜெட்டின் நோக்கம், அதன் அடிப்படையிலேயே முதலமைச்சரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக வேளாண்மை உற்பத்தி ஆணையர் அபூர்வா தெரிவித்தார்.

Agriculture Production Commissioner Apoorva
வேளாண்மை உற்பத்தி ஆணையர் அபூர்வா

வேளாண்மை உற்பத்தி ஆணையர் அபூர்வா பேட்டி

சென்னை: 2024 - 2025ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தில், சுமார் ரூ.42,281 கோடி மதிப்பீடு கொண்ட வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (பிப்.20) தாக்கல் செய்தார். இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழ்நாடு வேளாண்மை பட்ஜெட் முக்கிய அம்சங்கள் குறித்து முதன்மைச் செயலாளர் மற்றும் வேளாண்மை உற்பத்தி ஆணையர் அபூர்வா செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்மை உற்பத்தி ஆணையர் அபூர்வா, "அனைத்துப் பயிர்களுக்குமான திட்டங்கள் மா, பலா வாழைத்தண்டு, எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள், சிறுதானியங்கள், பருத்தி போன்றவற்றிற்கும் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய திட்டங்கள் பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மண்வளத்தைப் பேணிக் காப்பது இந்த பட்ஜெட்டில் முக்கிய திட்டமாகும். சுமார் 2 லட்சம் ஏக்கரில் பசுந்தால் உரப்பயிர் பரவலாக்கம், மண்புழு உரப்படுக்கைகள், உர தொட்டிகள், திரவ உயிர் உரங்கள் ஊக்குவித்தல் போன்றவை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் மண் வளத்திலிருந்து மக்கள் நலம் தான் இந்த பட்ஜெட்டின் நோக்கம்.

உடல் ஆரோக்கியம் பேணும் வகையில், (low glycemic index ) சர்க்கரை அளவு குறைந்துள்ள பாரம்பரிய நெல் விதைகளை விநியோகம் செய்தல், அதுபோன்று அரிசிகளைக் குறித்து ஆராய்ச்சி செய்தல் போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படும். அதேபோல வட்டாரத்திற்கு ஒரு கிராமத்திற்கு உயிர் வேளாண்மை குறித்து ஒரு மாதிரி பண்ணை அமைத்து, உதாரணக் கிராமமாக மாற்றக் கூறியுள்ளோம்.

ஒரு கிராமத்திற்கு ஒரு பயிரைச் செயல் விளக்கம் செய்ய வேண்டும் என 15,280 கிராமங்களைத் தேர்வு செய்துள்ளோம். பிற மாநிலங்களில் உயர் விளைச்சல் ரகம் நெல் இருந்தால் அதையும் இங்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம். தானியங்கி மின்னணு நீர்ப் பாசன அமைப்புகள் செய்துள்ளோம். தோட்டக்கலை பண்ணைக்குத் தேவையான இயந்திரக் கண்காட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கோவை, மதுரை, திருச்சியில் ஏற்றுமதி தரப் பரிசோதனை செய்து சான்றுகள் வழங்குவதற்கான உணவு பரிசோதனை ஆய்வகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகள் நெல் விளைவிக்கும் இடத்திலேயே நெல் மற்றும் இதர தானியங்களை உலர்த்தி கொடுக்க நடமாடும் உலர் இயந்திரம் ஏற்பாடு செய்துள்ளோம். கொடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் எல்லாம் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் கொண்டுவந்துள்ளோம்.

இலவச வேம்புக் கன்றுகள் வழங்குவது குறித்துக் குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஏற்ற வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் உழவர் சந்தை மற்றும் உழவர் அங்காடி குறித்து விவரித்த அவர், உழவர் சந்தைக்கு விவசாயிகளே நேரடியாக வந்து விற்பனை செய்யலாம். ஆனால் உழவர் அங்காடிகளில், வேளாண் துறை மூலம் அரசு பிராண்டில் விவசாயிகள் உற்பத்திப் பொருட்கள் சந்தைப்படுத்தப்படும் என்றார்.

கரும்பு கொள்முதல் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த சர்க்கரை துறை ஆணையர் விஜயராஜ், 3 லட்சம் ஹெக்டராக இருந்த கருப்பு சாகுபடி தற்போது 1.5 லட்சம் ஹெக்டராக குறைந்துள்ளது. அதனால் கரும்பு ஆலைகளுக்கு ஏற்ப கரும்பு உற்பத்தி செய்ய வேண்டுமானால், கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை கொடுக்க வேண்டியுள்ளது. எனவே மத்திய அரசு அறிவிக்கும் ஊக்கத் தொகையை விடக் கூடுதலாக வழங்க வேண்டும் என ரூ.195 கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது 215 ஆக அதிகரித்து வழங்கியுள்ளோம்.

இதன் மூலம் ஒரு டன்னுக்கு மத்திய அரசு ரூ.2,919 உடன், மாநில அரசு ரூ.215 வழங்குவதன் மூலம் ரூ.3,134 ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், பிழிதிறன் அதிகரிக்கும் பொருட்டு, இந்த விலையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும்" தெரிவித்தார்.

இதையும் படிங்க: பசித்தவனுக்குக் கால் வயிற்றுக்கு மட்டும் உணவு.. வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் அதிருப்தி!

வேளாண்மை உற்பத்தி ஆணையர் அபூர்வா பேட்டி

சென்னை: 2024 - 2025ஆம் ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தில், சுமார் ரூ.42,281 கோடி மதிப்பீடு கொண்ட வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (பிப்.20) தாக்கல் செய்தார். இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழ்நாடு வேளாண்மை பட்ஜெட் முக்கிய அம்சங்கள் குறித்து முதன்மைச் செயலாளர் மற்றும் வேளாண்மை உற்பத்தி ஆணையர் அபூர்வா செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்மை உற்பத்தி ஆணையர் அபூர்வா, "அனைத்துப் பயிர்களுக்குமான திட்டங்கள் மா, பலா வாழைத்தண்டு, எண்ணெய் வித்துக்கள், பயறு வகைகள், சிறுதானியங்கள், பருத்தி போன்றவற்றிற்கும் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய திட்டங்கள் பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மண்வளத்தைப் பேணிக் காப்பது இந்த பட்ஜெட்டில் முக்கிய திட்டமாகும். சுமார் 2 லட்சம் ஏக்கரில் பசுந்தால் உரப்பயிர் பரவலாக்கம், மண்புழு உரப்படுக்கைகள், உர தொட்டிகள், திரவ உயிர் உரங்கள் ஊக்குவித்தல் போன்றவை மேற்கொள்ள உள்ளதாகத் தெரிவித்தார். மேலும் மண் வளத்திலிருந்து மக்கள் நலம் தான் இந்த பட்ஜெட்டின் நோக்கம்.

உடல் ஆரோக்கியம் பேணும் வகையில், (low glycemic index ) சர்க்கரை அளவு குறைந்துள்ள பாரம்பரிய நெல் விதைகளை விநியோகம் செய்தல், அதுபோன்று அரிசிகளைக் குறித்து ஆராய்ச்சி செய்தல் போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படும். அதேபோல வட்டாரத்திற்கு ஒரு கிராமத்திற்கு உயிர் வேளாண்மை குறித்து ஒரு மாதிரி பண்ணை அமைத்து, உதாரணக் கிராமமாக மாற்றக் கூறியுள்ளோம்.

ஒரு கிராமத்திற்கு ஒரு பயிரைச் செயல் விளக்கம் செய்ய வேண்டும் என 15,280 கிராமங்களைத் தேர்வு செய்துள்ளோம். பிற மாநிலங்களில் உயர் விளைச்சல் ரகம் நெல் இருந்தால் அதையும் இங்குக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளோம். தானியங்கி மின்னணு நீர்ப் பாசன அமைப்புகள் செய்துள்ளோம். தோட்டக்கலை பண்ணைக்குத் தேவையான இயந்திரக் கண்காட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கோவை, மதுரை, திருச்சியில் ஏற்றுமதி தரப் பரிசோதனை செய்து சான்றுகள் வழங்குவதற்கான உணவு பரிசோதனை ஆய்வகம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகள் நெல் விளைவிக்கும் இடத்திலேயே நெல் மற்றும் இதர தானியங்களை உலர்த்தி கொடுக்க நடமாடும் உலர் இயந்திரம் ஏற்பாடு செய்துள்ளோம். கொடுக்கப்பட்டுள்ள திட்டங்கள் எல்லாம் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் கொண்டுவந்துள்ளோம்.

இலவச வேம்புக் கன்றுகள் வழங்குவது குறித்துக் குறிப்பிட்ட அவர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஏற்ற வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார். மேலும் உழவர் சந்தை மற்றும் உழவர் அங்காடி குறித்து விவரித்த அவர், உழவர் சந்தைக்கு விவசாயிகளே நேரடியாக வந்து விற்பனை செய்யலாம். ஆனால் உழவர் அங்காடிகளில், வேளாண் துறை மூலம் அரசு பிராண்டில் விவசாயிகள் உற்பத்திப் பொருட்கள் சந்தைப்படுத்தப்படும் என்றார்.

கரும்பு கொள்முதல் குறித்த கேள்விக்குப் பதில் அளித்த சர்க்கரை துறை ஆணையர் விஜயராஜ், 3 லட்சம் ஹெக்டராக இருந்த கருப்பு சாகுபடி தற்போது 1.5 லட்சம் ஹெக்டராக குறைந்துள்ளது. அதனால் கரும்பு ஆலைகளுக்கு ஏற்ப கரும்பு உற்பத்தி செய்ய வேண்டுமானால், கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை கொடுக்க வேண்டியுள்ளது. எனவே மத்திய அரசு அறிவிக்கும் ஊக்கத் தொகையை விடக் கூடுதலாக வழங்க வேண்டும் என ரூ.195 கடந்த மூன்று ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது 215 ஆக அதிகரித்து வழங்கியுள்ளோம்.

இதன் மூலம் ஒரு டன்னுக்கு மத்திய அரசு ரூ.2,919 உடன், மாநில அரசு ரூ.215 வழங்குவதன் மூலம் ரூ.3,134 ரூபாய் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும், பிழிதிறன் அதிகரிக்கும் பொருட்டு, இந்த விலையும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும்" தெரிவித்தார்.

இதையும் படிங்க: பசித்தவனுக்குக் கால் வயிற்றுக்கு மட்டும் உணவு.. வேளாண் பட்ஜெட் குறித்து விவசாயிகள் அதிருப்தி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.