ETV Bharat / state

பெல்ட்டுக்குள் மறைத்து 2.4 கிலோ தங்கக்கட்டி கடத்தல்.. சென்னை ஏர்போர்ட்டில் பறிமுதல்! - chennai airport gold smuggling

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 23, 2024, 3:16 PM IST

Kuwait gold smuggling to chennai: குவைத்திலிருந்து சென்னைக்கு கடத்தி கொண்டு வரப்பட்ட ரூ.1.57 கோடி மதிப்புடைய 2.4 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.

கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டி
கடத்தி வரப்பட்ட தங்கக்கட்டி (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: குவைத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று (ஜூலை 23) காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கண்காணித்து, சந்தேகப்படும் பயணிகளை நிறுத்தி பரிசோதித்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த ஷேக் முகமது பீர் (38) என்ற பயணி, சுற்றுலாப் பயணிகள் விசாவில் குவைத்துக்கு சென்று விட்டு மறுநாளே குவைத்தில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்துள்ளார். இதனால் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அந்தப் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி அவர் உடமைகளை பரிசோதித்தனர்.

ஆனால், உடைமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும், சந்தேகம் தீராமல் அந்தப் பயணியை தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக பரிசோதித்தனர். அப்போது அந்த பயணி தனது இடுப்பில் கட்டி இருந்த பெல்ட்டுக்குள் தங்கக் கட்டியை பெல்ட் அளவுக்கு தட்டை ஆக்கி மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து, பெல்ட்டுக்குள் இருந்து 2.4 கிலோ எடை உடைய ஒரே தங்கக் கட்டியை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். 24 கேரட் சுத்தமான அந்த தங்கக் கட்டியின் சர்வதேச மதிப்பு ரூ.1.57 கோடி ஆகும். இதனையடுத்து, சுங்க அதிகாரிகள் அந்தப் பயணியை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஷேக் முகமது பீர், 'கடத்தல் குருவி' என்று தெரிய வந்தது. எனவே, இவரை இந்த கடத்தலுக்காக குவைத் நாட்டிற்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்த கடத்தல் ஆசாமி யார்? என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பிரேக் அப் செய்த டியூஷன் மிஸ்.. 17 வயது சிறுவனின் 'கேஷ் ஆன் டெலிவரி' டார்ச்சர்.. சென்னையில் வினோத சம்பவம்!

சென்னை: குவைத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று (ஜூலை 23) காலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கண்காணித்து, சந்தேகப்படும் பயணிகளை நிறுத்தி பரிசோதித்துக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த ஷேக் முகமது பீர் (38) என்ற பயணி, சுற்றுலாப் பயணிகள் விசாவில் குவைத்துக்கு சென்று விட்டு மறுநாளே குவைத்தில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்துள்ளார். இதனால் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அந்தப் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரை நிறுத்தி அவர் உடமைகளை பரிசோதித்தனர்.

ஆனால், உடைமைகளில் எதுவும் இல்லை. ஆனாலும், சந்தேகம் தீராமல் அந்தப் பயணியை தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாக பரிசோதித்தனர். அப்போது அந்த பயணி தனது இடுப்பில் கட்டி இருந்த பெல்ட்டுக்குள் தங்கக் கட்டியை பெல்ட் அளவுக்கு தட்டை ஆக்கி மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து, பெல்ட்டுக்குள் இருந்து 2.4 கிலோ எடை உடைய ஒரே தங்கக் கட்டியை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினர். 24 கேரட் சுத்தமான அந்த தங்கக் கட்டியின் சர்வதேச மதிப்பு ரூ.1.57 கோடி ஆகும். இதனையடுத்து, சுங்க அதிகாரிகள் அந்தப் பயணியை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஷேக் முகமது பீர், 'கடத்தல் குருவி' என்று தெரிய வந்தது. எனவே, இவரை இந்த கடத்தலுக்காக குவைத் நாட்டிற்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பி வைத்த கடத்தல் ஆசாமி யார்? என்று தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பிரேக் அப் செய்த டியூஷன் மிஸ்.. 17 வயது சிறுவனின் 'கேஷ் ஆன் டெலிவரி' டார்ச்சர்.. சென்னையில் வினோத சம்பவம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.