ETV Bharat / state

வீட்ல யாருங்க..? சுவற்றை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த யானை.. கோவை வைரல் வீடியோ! - COIMBATORE ELEPHANT

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 31, 2024, 12:09 PM IST

COIMBATORE ELEPHANT: கோயம்புத்தூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று வீட்டின் சுற்றுச் சுவரை சேதப்படுத்தி செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சுற்றுச்சுவரை சேதப்படுத்திய காட்டு யானை
சுற்றுச்சுவரை சேதப்படுத்திய காட்டு யானை (Credits - ETV Bharat Tamil Nadu)

கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொண்டாமுத்தூர், மருதமலை, தடாகம், நரசீபுரம் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது.

சுற்றுச்சுவரை சேதப்படுத்திய காட்டு யானை (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனால் உணவு மற்றும் தண்ணீர் உலா வரும் காட்டு யானை, குடியிருப்புகளையும், விளைநிலங்களையும் சேதப்படுத்திச் செல்கிறது. வனத்துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தாலும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு 9:30 மணியளவில் தொண்டாமுத்தூர் மத்திபாளையம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை ஒரு வீட்டின் கிரில் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் யானை வீட்டின் உள்ளே நுழைந்ததைக் கண்டு கூச்சலிட்டனர்.

தொடர்ந்து வீட்டின் சுற்றுச் சுவரை யானை தாண்ட முயற்சி செய்தது. இதனால் சுவர் இடிந்து சுக்கு நூறானது, பின்னர் அப்பகுதியில் இருந்து யானை சென்றது. கடந்த சில நாள்களுக்கு முன்தான், குடியிருப்பு பகுதியில் நுழைந்த யானையை, விரட்டி சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழந்தார்.

இது தொடர்பாக கடந்த இரு தினங்களுக்கு முன் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து இருந்தனர்.

இருப்பினும் நாளுக்கு, நாள் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக குடியிருப்பு வாசிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், யானைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: “சும்மாலாம் சொன்னா வேலை நடக்காது..” தொழிலாளி எடுத்த விபரீத முடிவு.. தூத்துக்குடி யூடியூபர் கைதின் பின்னணி என்ன?

கோயம்புத்தூர்: கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், சிறுத்தை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொண்டாமுத்தூர், மருதமலை, தடாகம், நரசீபுரம் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறது.

சுற்றுச்சுவரை சேதப்படுத்திய காட்டு யானை (Credits - ETV Bharat Tamil Nadu)

இதனால் உணவு மற்றும் தண்ணீர் உலா வரும் காட்டு யானை, குடியிருப்புகளையும், விளைநிலங்களையும் சேதப்படுத்திச் செல்கிறது. வனத்துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து யானைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தாலும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு 9:30 மணியளவில் தொண்டாமுத்தூர் மத்திபாளையம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை ஒரு வீட்டின் கிரில் கேட்டை உடைத்து உள்ளே நுழைந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் யானை வீட்டின் உள்ளே நுழைந்ததைக் கண்டு கூச்சலிட்டனர்.

தொடர்ந்து வீட்டின் சுற்றுச் சுவரை யானை தாண்ட முயற்சி செய்தது. இதனால் சுவர் இடிந்து சுக்கு நூறானது, பின்னர் அப்பகுதியில் இருந்து யானை சென்றது. கடந்த சில நாள்களுக்கு முன்தான், குடியிருப்பு பகுதியில் நுழைந்த யானையை, விரட்டி சென்ற இளைஞர் யானை தாக்கி உயிரிழந்தார்.

இது தொடர்பாக கடந்த இரு தினங்களுக்கு முன் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து இருந்தனர்.

இருப்பினும் நாளுக்கு, நாள் யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதாக குடியிருப்பு வாசிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்து வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், யானைகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: “சும்மாலாம் சொன்னா வேலை நடக்காது..” தொழிலாளி எடுத்த விபரீத முடிவு.. தூத்துக்குடி யூடியூபர் கைதின் பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.