ETV Bharat / state

கழிவுநீர் கிணற்றில் குதித்து 16 வயது சிறுவன் தற்கொலை.. தாய் திட்டியதால் விபரீதம்..? - 16 Years Boy Suicide in Chennai

சென்னை கோயம்பேடு அருகே கழிவுநீர் கிணற்றில் குதித்து 16 வயது சிறுவன் உயிர் இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : 2 hours ago

மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள்
மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கோயம்பேடு பகுதியில் உள்ள சின்மையா நகர் மணவாளன் சாலை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மதன்குமார் - சிலம்பரசி. இவர்களுக்கு ௧௬ வயதுடைய மகன் ஒருவர் உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்து நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது போன்ற பழக்கங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்றை முன்தினம் (அக்.05) இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த சென்று விட்டு வீட்டிற்கு வராமல் நேற்று (அக்.06) காலை வீட்டிற்கு வந்ததாகவும், இதனை அவரது தாய் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அந்த சிறுவன் தனது நண்பர் ஒருவருக்கு செல்போன் மூலம் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு, கோயம்பேடு குலசேகரபுரத்தில் உள்ள கழிவுநீர் ஊந்து நிலையத்தில் உள்ள கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிறுவன் கழிவுநீர் கிணற்றுக்குள் சடலமாக இருப்பதைக் கண்டு, காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோயம்பேடு போலீசார் மற்றும் கோயம்பேடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வீரர்கள் 30 அடி ஆழமுள்ள கழிவுநீர் கிணற்றில் சடலமாக இருந்த சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில், கயிற்றை கட்டியும் ஆக்ஸிஜன் கருவி பொருத்தியும் உள்ளே இறங்கி 4 மணி நேரம் போராடி மேலே எடுத்து வந்துள்ளனர். இதன் பின்னர், கோயம்பேடு போலீசார் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி; பொதுமக்கள் சாலை மறியல்!

இதன் தொடர்ச்சியாக, இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கோயம்பேடு போலீசார், தாய் கண்டித்ததால் தான் சிறுவன் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேற ஏதேனும் காரணமா உள்ளதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நண்பர்களுடன் சேர்ந்து சுற்றித்திரிந்த மகனை தாய் கண்டித்ததால் கழிவுநீர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இந்த சம்பவம் கோயம்பேடு பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

சென்னை: கோயம்பேடு பகுதியில் உள்ள சின்மையா நகர் மணவாளன் சாலை பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் மதன்குமார் - சிலம்பரசி. இவர்களுக்கு ௧௬ வயதுடைய மகன் ஒருவர் உள்ளார். இவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்து நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துவது போன்ற பழக்கங்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்றை முன்தினம் (அக்.05) இரவு நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த சென்று விட்டு வீட்டிற்கு வராமல் நேற்று (அக்.06) காலை வீட்டிற்கு வந்ததாகவும், இதனை அவரது தாய் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, அந்த சிறுவன் தனது நண்பர் ஒருவருக்கு செல்போன் மூலம் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு, கோயம்பேடு குலசேகரபுரத்தில் உள்ள கழிவுநீர் ஊந்து நிலையத்தில் உள்ள கிணற்றுக்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சிறுவன் கழிவுநீர் கிணற்றுக்குள் சடலமாக இருப்பதைக் கண்டு, காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோயம்பேடு போலீசார் மற்றும் கோயம்பேடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய வீரர்கள் 30 அடி ஆழமுள்ள கழிவுநீர் கிணற்றில் சடலமாக இருந்த சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வகையில், கயிற்றை கட்டியும் ஆக்ஸிஜன் கருவி பொருத்தியும் உள்ளே இறங்கி 4 மணி நேரம் போராடி மேலே எடுத்து வந்துள்ளனர். இதன் பின்னர், கோயம்பேடு போலீசார் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: திண்டுக்கல் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலி; பொதுமக்கள் சாலை மறியல்!

இதன் தொடர்ச்சியாக, இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கோயம்பேடு போலீசார், தாய் கண்டித்ததால் தான் சிறுவன் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேற ஏதேனும் காரணமா உள்ளதா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நண்பர்களுடன் சேர்ந்து சுற்றித்திரிந்த மகனை தாய் கண்டித்ததால் கழிவுநீர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் இந்த சம்பவம் கோயம்பேடு பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல் help@snehaindia.org அல்லது நேரில் தொடர்புகொள்ள, சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட், 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம், சென்னை - 600028.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.