ETV Bharat / state

பெண் கழுத்தறுத்து கொலை.. நகைகளுடன் தப்பிய மர்ம நபர்கள்.. திருவாரூரில் நடந்த கொடூரம்..!

திருவாரூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்துவிட்டு, நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ள மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 11:33 AM IST

கொலை செய்யப்பட்ட கண்ணகி
கொலை செய்யப்பட்ட கண்ணகி (credit - ETV Bharat Tamil Nadu)

திருவாரூர்: மேல பருத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் பெருநிலக்கிழாராக இருந்து விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி கண்ணகி (48). இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இருவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பருத்தியூரில் உள்ள வீட்டில் நாராயணசாமி மற்றும் அவரது மனைவி கண்ணகி ஆகிய இருவர் மட்டும் வசித்து வந்தனர். கண்ணகி எப்போதும் கழுத்தில் ஏராளமான நகைகளை அணிந்திருப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று மாலை நாராயணசாமி திருவாரூருக்கு ஒரு வேலையாக சென்றுள்ளார். வேலை முடிந்து பருத்தியூருக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் மனைவி கண்ணகியை காணவில்லை.

இதனால் நாராயணசாமி வீட்டிற்கு பின்புறம் சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் கண்ணகி கொலையாகி கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நாராயணசாமி கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார்.

இதையும் படிங்க: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் கைது.. தஞ்சையில் பரபரப்பு!

உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது, கண்ணகி கழுத்தறுபட்டு கிடந்தது தெரிய வந்தது. மேலும், அவரது கழுத்தில் அணிந்திருந்த நகைகளும் காணவில்லை. இதனால், யாரோ மர்ம நபர்கள் கண்ணகி தனியாக வீட்டில் இருக்கிறார் என்பதை தெரிந்து அவரை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த 30 சவரனுக்கும் மேற்பட்ட நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது.

இது தொடர்பாக கொரடாச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். அத்துடன், கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

பருத்தியூர் கிராமத்தில் நகைகளுக்காக பெண் கொலை செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

திருவாரூர்: மேல பருத்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவர் பெருநிலக்கிழாராக இருந்து விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி கண்ணகி (48). இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். இருவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பருத்தியூரில் உள்ள வீட்டில் நாராயணசாமி மற்றும் அவரது மனைவி கண்ணகி ஆகிய இருவர் மட்டும் வசித்து வந்தனர். கண்ணகி எப்போதும் கழுத்தில் ஏராளமான நகைகளை அணிந்திருப்பது வழக்கம். இந்நிலையில், நேற்று மாலை நாராயணசாமி திருவாரூருக்கு ஒரு வேலையாக சென்றுள்ளார். வேலை முடிந்து பருத்தியூருக்கு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் மனைவி கண்ணகியை காணவில்லை.

இதனால் நாராயணசாமி வீட்டிற்கு பின்புறம் சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் கண்ணகி கொலையாகி கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நாராயணசாமி கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார்.

இதையும் படிங்க: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கணித ஆசிரியர் கைது.. தஞ்சையில் பரபரப்பு!

உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தபோது, கண்ணகி கழுத்தறுபட்டு கிடந்தது தெரிய வந்தது. மேலும், அவரது கழுத்தில் அணிந்திருந்த நகைகளும் காணவில்லை. இதனால், யாரோ மர்ம நபர்கள் கண்ணகி தனியாக வீட்டில் இருக்கிறார் என்பதை தெரிந்து அவரை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த 30 சவரனுக்கும் மேற்பட்ட நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது.

இது தொடர்பாக கொரடாச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். அத்துடன், கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

பருத்தியூர் கிராமத்தில் நகைகளுக்காக பெண் கொலை செய்யப்பட்டு இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.