ETV Bharat / sports

முகமது ஷமி இல்லாததற்கு இதுதான் காரணமா? பிசிசிஐ போடும் திட்டம் உண்மை தானா?

நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் முகமது ஷமி அணிக்கு திரும்பாததற்கு காரணம் என்ன என தகவல் வெளியாகி உள்ளது.

author img

By ETV Bharat Sports Team

Published : 2 hours ago

IANS Photo
Mohammed Shami (IANS Photo)

ஐதராபாத்: நியூசிலாந்து அணி வரும் 16ஆம் தேதி முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில், நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று (அக்.11) அறிவித்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்த முறையும் இந்திய அணியில் இடம் பெறவில்லை.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷமி நிச்சயம் அணியில் இடம் பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இருப்பினும், அவர் அணிக்கு திரும்பாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது இந்திய அணியில் முகமது ஷமி கடைசியாக விளையாடி இருந்தார்.

அதன்பின் ஏறத்தாழ ஒராண்டு காலமாக அவர் அணியில் இடம் பெறவில்லை. கணுக்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமி, தற்போது பெங்களூரு உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தேர்வுக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், உடற்தேர்வின் போது முகமது ஷமிக்கு காலில் காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. நியூசிலாந்து தொடரை தொடர்ந்து இந்திய அணி நவம்பர் மாதம் இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடுகிறது. அதைத் தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

அடுத்தடுத்து இந்திய அணி முக்கியமான தொடர்களில் கலந்து கொள்ள இருப்பதால் அந்த நேரத்தில் முகமது ஷமி காயம் காரணமாக அணியில் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக தற்போது அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆஸ்திரேலியா தொடருக்காக முகமது ஷமி தொடர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக ஜஸ்பிரீத் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். வங்கதேச தொடரில் துணை கேப்டன் நியமிக்கப்படாத நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அறிவிக்கப்பட்டு இருப்பது பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.

ஆஸ்திரேலியா பார்டர் கவாஸ்கர் டிராபியில் முதல் இரண்டு ஆட்டங்களில் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக விலக உள்ளதாகவும் அந்த நேரத்தில் இந்திய அணியை ஜஸ்பிரீத் பும்ரா வழிநடத்திச் செல்வதற்கு ஏதுவாக தற்போது துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: மீண்டும் துணை கேப்டனான பும்ரா! முகமது ஷமி நீக்கத்திற்கு என்ன காரணம்?

ஐதராபாத்: நியூசிலாந்து அணி வரும் 16ஆம் தேதி முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்நிலையில், நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்று (அக்.11) அறிவித்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்த முறையும் இந்திய அணியில் இடம் பெறவில்லை.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஷமி நிச்சயம் அணியில் இடம் பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இருப்பினும், அவர் அணிக்கு திரும்பாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2023ஆம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது இந்திய அணியில் முகமது ஷமி கடைசியாக விளையாடி இருந்தார்.

அதன்பின் ஏறத்தாழ ஒராண்டு காலமாக அவர் அணியில் இடம் பெறவில்லை. கணுக்கால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட முகமது ஷமி, தற்போது பெங்களூரு உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தேர்வுக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், உடற்தேர்வின் போது முகமது ஷமிக்கு காலில் காயம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. நியூசிலாந்து தொடரை தொடர்ந்து இந்திய அணி நவம்பர் மாதம் இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடுகிறது. அதைத் தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

அடுத்தடுத்து இந்திய அணி முக்கியமான தொடர்களில் கலந்து கொள்ள இருப்பதால் அந்த நேரத்தில் முகமது ஷமி காயம் காரணமாக அணியில் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக தற்போது அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆஸ்திரேலியா தொடருக்காக முகமது ஷமி தொடர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக ஜஸ்பிரீத் பும்ரா நியமிக்கப்பட்டுள்ளார். வங்கதேச தொடரில் துணை கேப்டன் நியமிக்கப்படாத நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அறிவிக்கப்பட்டு இருப்பது பல்வேறு யூகங்களை கிளப்பியுள்ளது.

ஆஸ்திரேலியா பார்டர் கவாஸ்கர் டிராபியில் முதல் இரண்டு ஆட்டங்களில் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக விலக உள்ளதாகவும் அந்த நேரத்தில் இந்திய அணியை ஜஸ்பிரீத் பும்ரா வழிநடத்திச் செல்வதற்கு ஏதுவாக தற்போது துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: மீண்டும் துணை கேப்டனான பும்ரா! முகமது ஷமி நீக்கத்திற்கு என்ன காரணம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.