ETV Bharat / sports

சென்னையில் தெற்காசிய ஜூனியர் தடகள போட்டிகள்: செப்.11 துவக்கி வைக்கிறார் அமைச்சர் உதயநிதி! - junior athletics championship

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 8, 2024, 8:17 PM IST

Tamilnadu Athletic Association: தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் சுமார் 29 ஆண்டுகளுக்கு பின் செப்டம்பர் 11 முதல் 13 வரை சென்னையில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று துவக்கி வைக்கிறார்.

தமிழ்நாடு தடகள சங்கம் அறிக்கை, அமைச்சர் உதயநிதி
தமிழ்நாடு தடகள சங்கம் அறிக்கை, அமைச்சர் உதயநிதி (Credits - ETV Bharat Tamil Nadu, Udhayanidhi Stalin 'X' page)

சென்னை: தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, விளையாட்டுத்துறையில் பல்வேறு முன்னேற்றங்களும் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியார், அலை சருக்குப் போட்டி, ஃபார்முலா 4 கார் பந்தயம் உள்ளிட்ட பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் ஜூனியர் தெற்காசியா தடகள் போட்டியும் செப்டம்பர் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதில், இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலத்தீவு உட்பட 7 நாடுகளில் இருந்தும் 210 வீரர், வீராங்கனைகள் 28 பிரிவு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். தினமும் மாலை 5.30 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை இந்த போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக இந்திய அணி சார்பில் 27 பெண் வீராங்கனைகள் உட்பட 58 வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்திய அணி 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர்,1,500 மீட்டர், 3,000 மீட்டர், 110 மீட்டர் தடைஓட்டம், உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட 13 பிரிவிகளில் உள்ள போட்டிகளில் பங்கேற்கிறார்கள். தற்போது இந்த சர்வதேச தடகள போட்டியானது 1995ஆம் ஆண்டிற்குப் பின் 29 ஆண்டுகள் கழித்து நடைப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தமிழ்நாடு தடகள சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு தடகள சங்கம் (TNAA) ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் (SAAF JUNIOR ATHLETIC CHAMPIONSHIP) போட்டியை இந்திய தடகள் கூட்டமைப்பு மற்றும் தமிழக அரசுடன் இணைந்து நடத்துவதில் மகிழ்ச்சி. இந்த சாம்பியன்ஷிப் போட்டி செப்டம்பர் 11 முதல் 13 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், 7 தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 210 விளையாட்டு வீரர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 28 போட்டிகளில் பங்கேற்கின்றனர். 1995-க்குப் பிறகு TNAA நடத்தும் சர்வதேசப் போட்டி. 58 விளையாட்டு வீரர்கள் கொண்ட இந்திய அணி இந்த சாம்பியன்ஷிப்பில் போட்டியிடுகிறது. சர்வதேச விளையாட்டு வீரர்களை நேரில் காண இது ஒரு அரிய வாய்ப்பாகும்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செப்டம்பர் 11ஆம் தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சாம்பியன்ஷிப் போட்டியைத் துவக்கி வைக்கிறார். அதே சமயம், ஆசிய தடகள சம்மேளனத்தின் தலைவர் டஹ்லான் ஜுமான் அல்-ஹமத், இந்திய தடகள சம்மேளனத்தின் பிரமுகர்களுடன் மேடையில் கலந்து கொள்கிறார்.

தினமும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும். அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களைச் சேர்ந்த நண்பர்கள் இந்த போட்டியின் செய்திகளை விரிவுபடுத்தவும், விளம்பரமாக வழங்கவும் கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Ultimate Table Tennis 2024: சாம்பியன் பட்டத்தை தக்கவைத்த கோவா! டெல்லி படுதோல்வி!

சென்னை: தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, விளையாட்டுத்துறையில் பல்வேறு முன்னேற்றங்களும் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் செஸ் ஒலிம்பியார், அலை சருக்குப் போட்டி, ஃபார்முலா 4 கார் பந்தயம் உள்ளிட்ட பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் ஜூனியர் தெற்காசியா தடகள் போட்டியும் செப்டம்பர் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதில், இலங்கை, பாகிஸ்தான், நேபாளம், பூட்டான், மாலத்தீவு உட்பட 7 நாடுகளில் இருந்தும் 210 வீரர், வீராங்கனைகள் 28 பிரிவு போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். தினமும் மாலை 5.30 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை இந்த போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக இந்திய அணி சார்பில் 27 பெண் வீராங்கனைகள் உட்பட 58 வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்திய அணி 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர்,1,500 மீட்டர், 3,000 மீட்டர், 110 மீட்டர் தடைஓட்டம், உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட 13 பிரிவிகளில் உள்ள போட்டிகளில் பங்கேற்கிறார்கள். தற்போது இந்த சர்வதேச தடகள போட்டியானது 1995ஆம் ஆண்டிற்குப் பின் 29 ஆண்டுகள் கழித்து நடைப்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தமிழ்நாடு தடகள சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு தடகள சங்கம் (TNAA) ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் (SAAF JUNIOR ATHLETIC CHAMPIONSHIP) போட்டியை இந்திய தடகள் கூட்டமைப்பு மற்றும் தமிழக அரசுடன் இணைந்து நடத்துவதில் மகிழ்ச்சி. இந்த சாம்பியன்ஷிப் போட்டி செப்டம்பர் 11 முதல் 13 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், 7 தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 210 விளையாட்டு வீரர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 28 போட்டிகளில் பங்கேற்கின்றனர். 1995-க்குப் பிறகு TNAA நடத்தும் சர்வதேசப் போட்டி. 58 விளையாட்டு வீரர்கள் கொண்ட இந்திய அணி இந்த சாம்பியன்ஷிப்பில் போட்டியிடுகிறது. சர்வதேச விளையாட்டு வீரர்களை நேரில் காண இது ஒரு அரிய வாய்ப்பாகும்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செப்டம்பர் 11ஆம் தேதி மாலை 5 மணிக்கு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சாம்பியன்ஷிப் போட்டியைத் துவக்கி வைக்கிறார். அதே சமயம், ஆசிய தடகள சம்மேளனத்தின் தலைவர் டஹ்லான் ஜுமான் அல்-ஹமத், இந்திய தடகள சம்மேளனத்தின் பிரமுகர்களுடன் மேடையில் கலந்து கொள்கிறார்.

தினமும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும். அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களைச் சேர்ந்த நண்பர்கள் இந்த போட்டியின் செய்திகளை விரிவுபடுத்தவும், விளம்பரமாக வழங்கவும் கேட்டுக்கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Ultimate Table Tennis 2024: சாம்பியன் பட்டத்தை தக்கவைத்த கோவா! டெல்லி படுதோல்வி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.