ETV Bharat / sports

ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா! போட்டியின்றி தேர்வு - ICC Chairman Jay shah

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 27, 2024, 8:19 PM IST

Jay shah ICC Chairman: ஐசிசியின் தலைவராக ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். மொத்தம் உள்ள 16 உறுப்பினர்களில் 15 பேரின் ஆதரவை தொடர்ந்து போட்டியின்றி ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டார்.

Etv Bharat
Jay shah (IANS Photo)

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக இருக்கும் கிரெக் பார்க்கலேவின் பதவிக் காலம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. ஏற்கனவே அவரது பதவிக் காலம் நிறைவு பெற்று இரண்டு ஆண்டுகள் மீண்டும் நீட்டிப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில், கிரெக் பார்க்கலே மூன்றாவது முறையாக ஐசிசி தலைவராக இருக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார். வரும் நவம்பர் மாதத்துடன் அவரது பதவிக் காலம் நிறைவு பெற உள்ள நிலையில், புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் ஐசிசி தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் ஐசிசியின் புதிய தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

ஐசிசியில் மொத்தம் உள்ள 16 உறுப்பினர்களில் 15 பேரின் ஆதரவு ஜெய்ஷாவுக்கு உள்ளதாக கூறப்படும் நிலையில் போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஐசிசியின் தலைவராக ஜெய்ஷாவை நியமிக்க ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றுடன் ஐசிசி தலைவர் பதவிக்கான வேட்பு மனுத் தாக்கல் தேதி நிறைவு பெறும் நிலையில், யாரும் ஜெய்ஷாவை எதிர்த்து போட்டியிடாத நிலையில், அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இல்லையெனில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கலாகும் பட்சத்தில் வரும் டிசம்பர் மாதம் ஐசிசி தலைவருக்கான தேர்தல் நடத்த திட்டமிட்டு இருந்தது.

ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெய்ஷாவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: WWE வீரர் புற்றுநோயால் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! - WWE player dead

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவராக இருக்கும் கிரெக் பார்க்கலேவின் பதவிக் காலம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. ஏற்கனவே அவரது பதவிக் காலம் நிறைவு பெற்று இரண்டு ஆண்டுகள் மீண்டும் நீட்டிப்பு செய்யப்பட்டது.

இந்நிலையில், கிரெக் பார்க்கலே மூன்றாவது முறையாக ஐசிசி தலைவராக இருக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார். வரும் நவம்பர் மாதத்துடன் அவரது பதவிக் காலம் நிறைவு பெற உள்ள நிலையில், புதிய தலைவரை தேர்வு செய்யும் பணியில் ஐசிசி தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் ஐசிசியின் புதிய தலைவராக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

ஐசிசியில் மொத்தம் உள்ள 16 உறுப்பினர்களில் 15 பேரின் ஆதரவு ஜெய்ஷாவுக்கு உள்ளதாக கூறப்படும் நிலையில் போட்டியின்றி அவர் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஐசிசியின் தலைவராக ஜெய்ஷாவை நியமிக்க ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றுடன் ஐசிசி தலைவர் பதவிக்கான வேட்பு மனுத் தாக்கல் தேதி நிறைவு பெறும் நிலையில், யாரும் ஜெய்ஷாவை எதிர்த்து போட்டியிடாத நிலையில், அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இல்லையெனில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் தாக்கலாகும் பட்சத்தில் வரும் டிசம்பர் மாதம் ஐசிசி தலைவருக்கான தேர்தல் நடத்த திட்டமிட்டு இருந்தது.

ஐசிசி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜெய்ஷாவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: WWE வீரர் புற்றுநோயால் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்! - WWE player dead

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.