ETV Bharat / sports

Ind Vs Eng 5th test: இந்திய சுழலில் சுருண்ட இங்கிலாந்து! அஸ்வின் அபாரம்! - India VS England 5th test

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 9, 2024, 2:27 PM IST

Updated : Mar 23, 2024, 10:28 AM IST

India VS England 5th test: இங்கிலாந்து அணிக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Etv Bharat
Etv Bharat

தர்மசாலா : இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் நான்கு போட்டிகள் நிறைவடைந்த நிலையில், அதில் முறையே இந்திய அணி 3-க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 7ஆம் தேதி இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் இந்திய சுழற்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இங்கிலாந்து அணி 218 ரன்களில் ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக தொடக்க வீரர் ஷேக் கிராவ்லி 79 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால 57 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

அதன்பின் நிலைத்து நின்று விளையாடிய ரோகித் சர்மா (103 ரன்), சுப்மன் கில் (110 ரன்) சதம் விளாசி அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினர். அவர்களை தொடர்ந்து அறிமுக வீரர் தேவதூத் படிகல் 65 ரன்கள் குவித்தார். அதேபோல் ஷர்பரஸ் கானும் தன் பங்குக்கு 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 124 புள்ளி 1 ஓவர்களுக்கு 477 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. 259 பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. தனது நூறாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக பந்துவீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து வீரர்களுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தார்.

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் (84 ரன்) தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஓலி போப் 19 ரன், ஜானி பேர்ஸ்டோவ் 39 ரன் கடைசி கட்டத்தில் டாம் ஹார்ட்லி 20 ரன் ஆகியோர் தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. முடிவில் இங்கிலாந்து அணி 48 புள்ளி 1 ஓவர்களில் 195 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 4-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையும் படிங்க : கர்நாடகாவில் தலை விரித்தாடும் தண்ணீர் பற்றாக்குறை! மூடு நிலையை எதிர்கொள்ளும் தொழில்நிறுவனங்கள்!

தர்மசாலா : இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் நான்கு போட்டிகள் நிறைவடைந்த நிலையில், அதில் முறையே இந்திய அணி 3-க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 7ஆம் தேதி இமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் இந்திய சுழற்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இங்கிலாந்து அணி 218 ரன்களில் ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக தொடக்க வீரர் ஷேக் கிராவ்லி 79 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். தொடர்ந்து முதல் இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால 57 ரன்கள் குவித்து நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

அதன்பின் நிலைத்து நின்று விளையாடிய ரோகித் சர்மா (103 ரன்), சுப்மன் கில் (110 ரன்) சதம் விளாசி அணியின் ஸ்கோரை ஜெட் வேகத்தில் உயர்த்தினர். அவர்களை தொடர்ந்து அறிமுக வீரர் தேவதூத் படிகல் 65 ரன்கள் குவித்தார். அதேபோல் ஷர்பரஸ் கானும் தன் பங்குக்கு 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 124 புள்ளி 1 ஓவர்களுக்கு 477 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. 259 பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. தனது நூறாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் அபாரமாக பந்துவீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்து வீரர்களுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தார்.

இங்கிலாந்து அணியில் ஜோ ரூட் (84 ரன்) தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஓலி போப் 19 ரன், ஜானி பேர்ஸ்டோவ் 39 ரன் கடைசி கட்டத்தில் டாம் ஹார்ட்லி 20 ரன் ஆகியோர் தவிர்த்து மற்ற வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. முடிவில் இங்கிலாந்து அணி 48 புள்ளி 1 ஓவர்களில் 195 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியில் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 4-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையும் படிங்க : கர்நாடகாவில் தலை விரித்தாடும் தண்ணீர் பற்றாக்குறை! மூடு நிலையை எதிர்கொள்ளும் தொழில்நிறுவனங்கள்!

Last Updated : Mar 23, 2024, 10:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.