ETV Bharat / sports

வீரர்களுக்கு 4 மாதம் சம்பளம் பாக்கி: கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்! - No Salary for Pakistan Cricketers

Pakistan Cricketers No Salary: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி, கடந்த நான்கு மாதங்களாக வீரர், வீராங்கனைகளுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

author img

By ETV Bharat Sports Team

Published : 3 hours ago

Etv Bharat
Representative Image (X/@TheRealPCB)

ஐதராபாத்: பாகிஸ்தானில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற பொருளாதாரம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை விட்டு வைக்கவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எந்த அளவுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது என்றால் கடந்த 4 மாதங்களாக வீரர் வீராங்கனைகளுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத அளவுக்கு தள்ளப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.

வீரர், வீராங்கனைகளுக்கு 23 மாத ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஊதியம் வழங்கி வருகிறது. அதன் படி கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீரர், வீராங்கனைகளிடம் கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தம் போட்டுள்ளது. ஒவ்வொரு 12 மாதத்திற்கு ஒரு முறை இந்த ஒப்பந்தம் என்பது மறு ஆய்வு செய்யப்படும்.

ஆடவர் அணியில் 25 வீரர்களிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தம் போட்டுள்ளது. அதேபோல் மகளிர் பிரிவிலும் இதே 23 மாத ஒப்பந்த விதிகளே மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இதுவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் வீராங்கனைகளிடம் ஊதிய ஒப்பந்தம் குறித்து எந்த வித ஆவணமும் கையெழுத்தாகவில்லை எனக் கூறப்படுகிறது.

கடைசியாக ஜூன் மாதம் வீரர், வீராங்கனைகளுக்கு சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், அதன்பின் இதுவரை யாருக்கும் ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் தினசரி கொடுப்பனவு கூட கடந்த செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் மற்ற நாடுகளை காட்டிலும் பாகிஸ்தான் வீராங்கனைகளே மிகக் குறைந்த அளவில் சம்பளம் பெறுகின்றனர். இருப்பினும், அவர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 20 ஒவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மகளிர் அணி கலந்து கொண்டு விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விராட் கோலியை விட அதிக சிக்சர்கள் அடித்த 5 பந்துவீச்சாளர்கள்! யாரார் தெரியுமா? - Bowlers more sixes than virat kohli

ஐதராபாத்: பாகிஸ்தானில் நிலவும் ஸ்திரத்தன்மையற்ற பொருளாதாரம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தை விட்டு வைக்கவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எந்த அளவுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளது என்றால் கடந்த 4 மாதங்களாக வீரர் வீராங்கனைகளுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாத அளவுக்கு தள்ளப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.

வீரர், வீராங்கனைகளுக்கு 23 மாத ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஊதியம் வழங்கி வருகிறது. அதன் படி கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீரர், வீராங்கனைகளிடம் கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தம் போட்டுள்ளது. ஒவ்வொரு 12 மாதத்திற்கு ஒரு முறை இந்த ஒப்பந்தம் என்பது மறு ஆய்வு செய்யப்படும்.

ஆடவர் அணியில் 25 வீரர்களிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தம் போட்டுள்ளது. அதேபோல் மகளிர் பிரிவிலும் இதே 23 மாத ஒப்பந்த விதிகளே மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இதுவரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் வீராங்கனைகளிடம் ஊதிய ஒப்பந்தம் குறித்து எந்த வித ஆவணமும் கையெழுத்தாகவில்லை எனக் கூறப்படுகிறது.

கடைசியாக ஜூன் மாதம் வீரர், வீராங்கனைகளுக்கு சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், அதன்பின் இதுவரை யாருக்கும் ஊதியம் முறையாக வழங்கப்படவில்லை என சொல்லப்படுகிறது. வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் தினசரி கொடுப்பனவு கூட கடந்த செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் மற்ற நாடுகளை காட்டிலும் பாகிஸ்தான் வீராங்கனைகளே மிகக் குறைந்த அளவில் சம்பளம் பெறுகின்றனர். இருப்பினும், அவர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 20 ஒவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மகளிர் அணி கலந்து கொண்டு விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: விராட் கோலியை விட அதிக சிக்சர்கள் அடித்த 5 பந்துவீச்சாளர்கள்! யாரார் தெரியுமா? - Bowlers more sixes than virat kohli

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.