டெல்லி: உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் வரும் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது. இதில் 133 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் 320 போட்டிகளில் 32 பிரிவுகளில் விளையாட உள்ளனர்.
இந்த ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள 28 பேர் கொண்ட இந்திய தடகள வீரர்கள் பட்டியலை இந்திய தடகள சங்கம் அறிவித்துள்ளது. இதில் 17 தடகள வீரர்களும், 11 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர். அதிலும், குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேசன், வித்யா ராம்ராஜ் ஆகிய 5 வீரர்களும், ஆசிய விளையாட்டு சாம்பியன்களான அவினாஷ் சேபிள், தஜிந்தர்பால் சிங் தூர், ஜோரி யார்ராஜி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
A memorable interaction with our contingent for Paris Olympics. Let us all #Cheer4Bharat.https://t.co/64fPsDNuRB
— Narendra Modi (@narendramodi) July 5, 2024
இந்த வீரர்கள் பட்டியலில் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.