ETV Bharat / opinion

வெடிக்கும் இமயமலை பனிப்பாறை ஏரிகள்..பெருக்கெடுக்கும் வெள்ளம்... தடுக்க என்ன வழி? - Glacial Lake Outburst Himalayas

author img

By C P Rajendran

Published : Sep 4, 2024, 10:10 AM IST

பனிப்பாறைகளின் களஞ்சியம் என்று வர்ணிக்கப்படும் இமயமலை பகுதிகளில் அமைந்துள்ள ஏரிகள் வெடித்து, வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பனிப்பாறை ஏரிகள் வெடிப்பை தடுப்பதற்கான திட்டத்தை மத்திய பேரிடர் மேலாண்மை ஆணையம் செயல்படுத்த உள்ளது.

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

ஹைதராபாத்: இமயமலையில் 5000 க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் உள்ளன. இவற்றில் 200 க்கும் மேற்பட்ட ஏரிகள் வெடிப்பு காரணமாக தற்போது நிரம்பி வழியும் அபாயத்தில் உள்ளன. காலநிலை மாற்றம் மற்றும் மனிதர்கள் புழக்கம் அதிகரிப்பின் விளைவாக இமயமலை பகுதியில் அதிகரித்துவரும் புவி வெப்பமயமாதலால் ,பனிப்பாறை ஏரிகள் வெடிக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. இதனால் இமயமலை பகுதி வெள்ளப் பெருக்கு ஆபத்தையும் எதிர்கொண்டுள்ளது. அபாய கட்டத்தில் உள்ள 200 ஏரிகளையும் தீவிரமாக கண்காணிக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) முடிவு செய்துள்ளதை சமீபத்திய ஊடக செய்திகள் மூலம் அறிய முடிகிறது.

ஒரு பனிப்பாறை வெடிப்பும், அதனால் ஏற்படும் வெள்ளமும் அறிவியல் மொழியில் Glacial Lake Outburst Flood - GLOF என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. மிக அதிக கனமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கை விட அதிக சேதம் மற்றும் அழிவை பனிப்பாறை ஏரிகள் வெடிப்பால் உண்டாகும் வெள்ளம் ஏற்படுத்துகிறது. சமீப காலத்தில் இப்பேரிழவை இமயமலைப் பகுதிகள் சந்தித்துள்ளன. 2013 இல் பனிப்பாறை ஏரிகள் வெடிப்பு வெள்ளப்பெருக்கால் கேதார்நாத்தில் ஏற்பட்ட பேரழிவு 6000 உயிர்களை பலிகொண்டது இதன் பேராபத்தை உணர்த்துவதாக உள்ளது. இதேபோன்று, 2014 ஆகஸ்ட் 6 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் லடாக்கின் கியா கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அக்கிராமத்தில் இருந்த வீடுகள், பண்ணைகள் மற்றும் பாலங்கள் கடுமையாக சேதமடைந்தன. நிலச்சரிவுகள் அல்லது பனிச்சரிவுகளால் அல்லாமல், பனிப்பாறைகள் உருகுவதால் நிலத்தடி நீர் அபாயகரமான அளவுக்கு திடீரென உயர்வதால் இப்பேரழிவு உண்டாவதாக புவியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

2021 பிப்ரவரி 7 அன்று, உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி உள்ள ரிஷிகங்கா மற்றும் தெளலிகங்கா பள்ளத்தாக்குகளில் மீண்டுமொரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இது 200 க்கும் மேற்பட்டோரின் உயிரை பலி கொண்டதுடன், இரண்டு நீர் மின் திட்டங்களிலும் கடுமையான சேதத்தை விளைவித்தது. லடாக் மற்றும் சாமோலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகள், 2013 இல் கேதார்நாத்தில் உண்டான திடீர் வெள்ளப்பெருக்கை போல் இல்லாமல் இருந்தது மட்டுமே ஒரே ஆறுதல். மேலும், வடாக் மற்றும் சாமோலில் உண்டாக இயற்கை பேரிடரில், மலையின் உச்சியில் பனிப்பாறை ஏரிகளில் இருந்து வெள்ளநீர் கசிந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதும் மற்றொரு ஆறுதலாக விஷயம்.

The Glacial Lake Outbursts: An Emerging Risk In The Himalayas
The Glacial Lake Outbursts: An Emerging Risk In The Himalayas (Credits - ETV Bharat)

ஆனால், கேதார்நாத், லடாக், சாமோல் என இந்த அனைத்து இடங்களும், பனிக்கட்டிகளின் திடீர் உருகுதலால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு என்ற அடிப்படையில் தொடர்புடைவை. பெர்மாஃப்ரோல்ட் எனப்படும் மலை பனிக்கட்டி என்பது பனிப்பாறைகளுக்கு இடையே உள்ள விரிசல்கள் மற்றும் பிளவுகளில் உள்ள பனியாகும். செங்குத்தான சரிவுகளில் பனிப்பாறைகளை ஒருங்கிணைத்து அவற்றின் நிலைத்தன்மையை இப்பனிக்கட்டிகள் உறுதிப்படுத்துகின்றன. கடந்த சில தசாப்தங்களாக மெல்ல அதிகரித்துவரும் புவி வெப்பமயமாதலின் விளைவாக, பெர்மாஃப்ரோஸ்ட் பனிக்கட்டிகள் உருகி வருவது பனிப்பாறை மலை சரிவுகளை தூண்டுகிறது.

சிக்கிம் சந்தித்த பேரழிவு: அக்டோபர் 4, 2023 புதன்கிழமை அதிகாலை, சிக்கிமில் ஏற்பட்ட பனிப்பாறை ஏரிகள் வெடிப்பு வெள்ளப்பெருக்கு தொடர்பான பேரழிவு குறைந்தது 40 பேரின் உயிரை பறித்தது. மேலும் பலர் காணாமல் போனதாகக் கூறப்பட்டது. கனமழை காரணமாக சிக்கிமில் உள்ள தெற்கு லோனாக் பனிப்பாறை ஏரி வெடித்து, அதன் கீழுள்ள பகுதிகளில் பேரழிவு தரும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் லாச்சென் பள்ளத்தாக்கில் டீஸ்டா ஆற்றில் பாயும் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டியது. காட்டாற்று வெள்ளத்தில் பல பாலங்கள் மற்றும் சாலைகள் இருக்கும் இடம் தெரியாமல் போயின. அத்துடன் சிக்கிமில் உள்ள சுங்தாங்கில் உள்ள மிகப்பெரிய நீர்மின் திட்டமான டீஸ்டா-III அணையையும் இந்த வெள்ளம் தாக்கி சேதத்தை ஏற்படுத்தியது.

கடல் மட்டத்திலிருந்து 5,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள லோனாக் பனிப்பாறை ஏரியில் மேக வெடிப்பு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இறுதியி்ல் சிக்கிமில் கடும் சேதத்தை விளைவித்தது. சிக்கிம் சந்தித்த பேரழிவு என்பது இமயமலையில் நடக்கும் இத்தகைய நிகழ்வுகளின் மறுநிகழ்வாகும். புவி வெப்பமயமாதலின் விளைவாக, பனிப்பாறைகள் மற்றும் பெர்மாஃப்ரோல்ட் எனப்படும் பனிக்கட்டிகள் உருகுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கட்டுப்பாடற்ற கட்டுமானங்கள், நீர்மின் திட்டங்கள் மற்றும் மனிதர்களின் செயல்பாடுகள் புவி வெப்பமயமாதலை அதிகரித்து, பேரழிவுக்கு வழிவகுக்கின்றன.

மூன்றாவது துருவம்: வடக்கு மற்றும் தென் துவருங்களுக்கு வெளியே, 'மூன்றாவது துருவம்' என்று சொல்லத்தக்க வகையில், மிகப்பெரிய அளவிலான பனிப்பொழிவையும், பனிக்கட்டிகளையும் கொண்டதாக இமயமலை திகழ்கிறது. 'பனிப்பாறைகளின் களஞ்சியம்' என்று கூறப்படும் இமயமலை பகுதி, ஆசியாவின் காலநிலையை கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதுடன், சில முக்கிய நதிகளின் மூலமாகவும் விளங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் பல கோடிக்கணக்கான மக்கள், தங்களது தண்ணீர் தேவைகளுக்காக இமயமலை மற்றும் திபெத்திய பீடபூமியில் உற்பத்தியாகும் நதிகளையே நம்பியுள்ளனர். இத்தகைய சூழலில் புவி வெப்பமயமாதல், இமயமலை தொடர்களின் இயற்கை சமநிலையில் தாக்கத்தை உண்டாக்கி, அங்கு சுற்றுப்புறசூழலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று அறிவியல் ஆய்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

பனிப்பாறைகள் உருகும் அபாயம்: பசுமை வாயுக்கள் வெளியேற்றத்தால் அதிகரிக்கும் புவிவெப்பமயமாதலின் விளைவாக, வரும் 2100 ஆம் ஆண்டுக்குள், இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள பனிப்பாறைகளில் 70 முதல் 99 சதவீதம் அளவு உருகிவிடக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இமயமலை பகுதிக்கு சுற்றுலா வரும் யாத்திரிகர்களுக்கான வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கார்பனும் இப்பகுதியின் இயற்கை சமநிலையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இமயமலையில் உள்ள பனிப்பாறைகளில் குறைந்தபட்சம் 30 சதவீதம் பாறைகள் உருகுவதற்கு வாகனங்களின் புகையில் இருந்து வெளியேறும் கார்பன் தான் காரணம் என்றும் அந்த ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

தொடர்ச்சியாக உருகும் பனிப்பாறைகள் இமயமலையில் பனிப்பாறை ஏரிகளை உருவாக்குகின்றன. பனிக்கட்டி பாலங்களால் அடித்துச் செல்லப்பட்டு அவை உருகும் இடத்தில் விடப்படும் மண்,கற்கள் இந்த ஏரிகளை தாங்கி நிற்கின்றன. இந்த ஏரிகளின் பனிக்கட்டிகள் அல்லது பல்வேறு குப்பைகளின் வீழ்தலால் பனிப்பாறை ஏரிகளில் தூண்டப்படும் வெடிப்புகள், நிலநடுக்கம் அல்லது கடும் மழையினால் உருவாகும் அலைகளை விஞ்சும் விதத்தில் உள்ளன. இதன் விளைவாக சில நிமிடங்களிலோ அல்லது சில மணி நேரங்களிலோ நிகழும் பனிப்பாறை சரிவுகளால் உண்டாகும் வெள்ளப்பெருக்கு இது உண்டாகும் இடத்திலிருந்து கீழ்நோக்கி பாய்ந்து பேரழிவை உண்டாக்குகிறது. இமயமலையின் பிற பகுதிகளை ஒப்பிடும்போது, அதன் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் பனிப்பாறை ஏரிகளின் எண்ணிக்கை, 1990 ஆம் ஆண்டு முதல் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகரித்துவரும் புவி வெப்பநிலை காரணமாக, இப்பகுதிகளில் பனிப்பாறைகள் சரிவும் அதிகரித்து வருவதாகவும் அந்த ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

பனிப்பாறை ஏரிகள் வெடிப்பால் ஏற்படும் வெள்ளத்தின் பேரழிவுகளை கருத்தில் கொண்டு, இதனை தடுக்கும் நோக்கில், தேசிய பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ள அபாயத் தடுப்புத் திட்டத்தை கடந்த ஜூலை 25 இல் மத்திய அரசு அங்கீகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. முதல்கட்டமாக சிக்கிமில் வெள்ள அபாயம் உள்ள ஆறு பனிப்பாறை ஏரிகளை தேர்ந்தெடுத்து, அவற்றின் நீள, அகலம் மற்றும் ஆழத்தை அளவிட்டு, இந்த ஏரிகளில் நீரின் அளவைக் குறைப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து. அதன் மூலம் வெள்ள அபாயத்தை தணிப்பது வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

ஆபத்தான பனிப்பாறை ஏரிகள் குறித்த வரைபடத்தை உருவாக்குதல் (MAP) மற்றும் அவற்றின் வெள்ள ஆபத்தை மதிப்பிடுதல் ஆகியவை அப்பகுதியில் இத்தகைய பேரழிவுகளின் தாக்கத்தைத் தணிக்க பொருத்தமான தடுப்பு முறைகளை உருவாக்க வழிவகுக்கும். அதிகரித்துவரும் மனித வாழ்விடங்களின் போக்கு, நீர் மின் உற்பத்தி, பாலங்கள், சுரங்கங்கள் மற்றும் சாலைகள் அமைத்தல் போன்ற இமயமலை பகுதிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் உள்கட்டமைப்பு திட்டங்கள் அதன் இயற்கை சூழலுக்கு ஊறுவிளைவிக்கும் விதத்தில் அமைந்துவிடுகின்றன.

இமயமலை பகுதிகளில் அமைந்துள்ள மாநிலங்களின் தற்போதைய வளர்ச்சி திட்டங்கள், கட்டுப்பாடற்ற சுற்றுலா உள்ளிட்டவை காலநிலை மாற்றத்தின் பின்னணியில் தீவிரமாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

இதையும் படிங்க:செயின்ட் மார்ட்டின் தீவு மீதான அமெரிக்காவின் ஆதிக்கவெறி.. இந்தியாவுக்கு சொல்லும் பாடம் என்ன?

ஹைதராபாத்: இமயமலையில் 5000 க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் உள்ளன. இவற்றில் 200 க்கும் மேற்பட்ட ஏரிகள் வெடிப்பு காரணமாக தற்போது நிரம்பி வழியும் அபாயத்தில் உள்ளன. காலநிலை மாற்றம் மற்றும் மனிதர்கள் புழக்கம் அதிகரிப்பின் விளைவாக இமயமலை பகுதியில் அதிகரித்துவரும் புவி வெப்பமயமாதலால் ,பனிப்பாறை ஏரிகள் வெடிக்கும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளன. இதனால் இமயமலை பகுதி வெள்ளப் பெருக்கு ஆபத்தையும் எதிர்கொண்டுள்ளது. அபாய கட்டத்தில் உள்ள 200 ஏரிகளையும் தீவிரமாக கண்காணிக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) முடிவு செய்துள்ளதை சமீபத்திய ஊடக செய்திகள் மூலம் அறிய முடிகிறது.

ஒரு பனிப்பாறை வெடிப்பும், அதனால் ஏற்படும் வெள்ளமும் அறிவியல் மொழியில் Glacial Lake Outburst Flood - GLOF என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. மிக அதிக கனமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கை விட அதிக சேதம் மற்றும் அழிவை பனிப்பாறை ஏரிகள் வெடிப்பால் உண்டாகும் வெள்ளம் ஏற்படுத்துகிறது. சமீப காலத்தில் இப்பேரிழவை இமயமலைப் பகுதிகள் சந்தித்துள்ளன. 2013 இல் பனிப்பாறை ஏரிகள் வெடிப்பு வெள்ளப்பெருக்கால் கேதார்நாத்தில் ஏற்பட்ட பேரழிவு 6000 உயிர்களை பலிகொண்டது இதன் பேராபத்தை உணர்த்துவதாக உள்ளது. இதேபோன்று, 2014 ஆகஸ்ட் 6 ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் லடாக்கின் கியா கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அக்கிராமத்தில் இருந்த வீடுகள், பண்ணைகள் மற்றும் பாலங்கள் கடுமையாக சேதமடைந்தன. நிலச்சரிவுகள் அல்லது பனிச்சரிவுகளால் அல்லாமல், பனிப்பாறைகள் உருகுவதால் நிலத்தடி நீர் அபாயகரமான அளவுக்கு திடீரென உயர்வதால் இப்பேரழிவு உண்டாவதாக புவியியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

2021 பிப்ரவரி 7 அன்று, உத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி உள்ள ரிஷிகங்கா மற்றும் தெளலிகங்கா பள்ளத்தாக்குகளில் மீண்டுமொரு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இது 200 க்கும் மேற்பட்டோரின் உயிரை பலி கொண்டதுடன், இரண்டு நீர் மின் திட்டங்களிலும் கடுமையான சேதத்தை விளைவித்தது. லடாக் மற்றும் சாமோலில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகள், 2013 இல் கேதார்நாத்தில் உண்டான திடீர் வெள்ளப்பெருக்கை போல் இல்லாமல் இருந்தது மட்டுமே ஒரே ஆறுதல். மேலும், வடாக் மற்றும் சாமோலில் உண்டாக இயற்கை பேரிடரில், மலையின் உச்சியில் பனிப்பாறை ஏரிகளில் இருந்து வெள்ளநீர் கசிந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பதும் மற்றொரு ஆறுதலாக விஷயம்.

The Glacial Lake Outbursts: An Emerging Risk In The Himalayas
The Glacial Lake Outbursts: An Emerging Risk In The Himalayas (Credits - ETV Bharat)

ஆனால், கேதார்நாத், லடாக், சாமோல் என இந்த அனைத்து இடங்களும், பனிக்கட்டிகளின் திடீர் உருகுதலால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு என்ற அடிப்படையில் தொடர்புடைவை. பெர்மாஃப்ரோல்ட் எனப்படும் மலை பனிக்கட்டி என்பது பனிப்பாறைகளுக்கு இடையே உள்ள விரிசல்கள் மற்றும் பிளவுகளில் உள்ள பனியாகும். செங்குத்தான சரிவுகளில் பனிப்பாறைகளை ஒருங்கிணைத்து அவற்றின் நிலைத்தன்மையை இப்பனிக்கட்டிகள் உறுதிப்படுத்துகின்றன. கடந்த சில தசாப்தங்களாக மெல்ல அதிகரித்துவரும் புவி வெப்பமயமாதலின் விளைவாக, பெர்மாஃப்ரோஸ்ட் பனிக்கட்டிகள் உருகி வருவது பனிப்பாறை மலை சரிவுகளை தூண்டுகிறது.

சிக்கிம் சந்தித்த பேரழிவு: அக்டோபர் 4, 2023 புதன்கிழமை அதிகாலை, சிக்கிமில் ஏற்பட்ட பனிப்பாறை ஏரிகள் வெடிப்பு வெள்ளப்பெருக்கு தொடர்பான பேரழிவு குறைந்தது 40 பேரின் உயிரை பறித்தது. மேலும் பலர் காணாமல் போனதாகக் கூறப்பட்டது. கனமழை காரணமாக சிக்கிமில் உள்ள தெற்கு லோனாக் பனிப்பாறை ஏரி வெடித்து, அதன் கீழுள்ள பகுதிகளில் பேரழிவு தரும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் லாச்சென் பள்ளத்தாக்கில் டீஸ்டா ஆற்றில் பாயும் வெள்ளம் அபாய கட்டத்தை தாண்டியது. காட்டாற்று வெள்ளத்தில் பல பாலங்கள் மற்றும் சாலைகள் இருக்கும் இடம் தெரியாமல் போயின. அத்துடன் சிக்கிமில் உள்ள சுங்தாங்கில் உள்ள மிகப்பெரிய நீர்மின் திட்டமான டீஸ்டா-III அணையையும் இந்த வெள்ளம் தாக்கி சேதத்தை ஏற்படுத்தியது.

கடல் மட்டத்திலிருந்து 5,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள லோனாக் பனிப்பாறை ஏரியில் மேக வெடிப்பு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இறுதியி்ல் சிக்கிமில் கடும் சேதத்தை விளைவித்தது. சிக்கிம் சந்தித்த பேரழிவு என்பது இமயமலையில் நடக்கும் இத்தகைய நிகழ்வுகளின் மறுநிகழ்வாகும். புவி வெப்பமயமாதலின் விளைவாக, பனிப்பாறைகள் மற்றும் பெர்மாஃப்ரோல்ட் எனப்படும் பனிக்கட்டிகள் உருகுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கட்டுப்பாடற்ற கட்டுமானங்கள், நீர்மின் திட்டங்கள் மற்றும் மனிதர்களின் செயல்பாடுகள் புவி வெப்பமயமாதலை அதிகரித்து, பேரழிவுக்கு வழிவகுக்கின்றன.

மூன்றாவது துருவம்: வடக்கு மற்றும் தென் துவருங்களுக்கு வெளியே, 'மூன்றாவது துருவம்' என்று சொல்லத்தக்க வகையில், மிகப்பெரிய அளவிலான பனிப்பொழிவையும், பனிக்கட்டிகளையும் கொண்டதாக இமயமலை திகழ்கிறது. 'பனிப்பாறைகளின் களஞ்சியம்' என்று கூறப்படும் இமயமலை பகுதி, ஆசியாவின் காலநிலையை கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிப்பதுடன், சில முக்கிய நதிகளின் மூலமாகவும் விளங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், சீனா மற்றும் பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாழும் பல கோடிக்கணக்கான மக்கள், தங்களது தண்ணீர் தேவைகளுக்காக இமயமலை மற்றும் திபெத்திய பீடபூமியில் உற்பத்தியாகும் நதிகளையே நம்பியுள்ளனர். இத்தகைய சூழலில் புவி வெப்பமயமாதல், இமயமலை தொடர்களின் இயற்கை சமநிலையில் தாக்கத்தை உண்டாக்கி, அங்கு சுற்றுப்புறசூழலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்று அறிவியல் ஆய்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

பனிப்பாறைகள் உருகும் அபாயம்: பசுமை வாயுக்கள் வெளியேற்றத்தால் அதிகரிக்கும் புவிவெப்பமயமாதலின் விளைவாக, வரும் 2100 ஆம் ஆண்டுக்குள், இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள பனிப்பாறைகளில் 70 முதல் 99 சதவீதம் அளவு உருகிவிடக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இமயமலை பகுதிக்கு சுற்றுலா வரும் யாத்திரிகர்களுக்கான வாகனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கார்பனும் இப்பகுதியின் இயற்கை சமநிலையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இமயமலையில் உள்ள பனிப்பாறைகளில் குறைந்தபட்சம் 30 சதவீதம் பாறைகள் உருகுவதற்கு வாகனங்களின் புகையில் இருந்து வெளியேறும் கார்பன் தான் காரணம் என்றும் அந்த ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

தொடர்ச்சியாக உருகும் பனிப்பாறைகள் இமயமலையில் பனிப்பாறை ஏரிகளை உருவாக்குகின்றன. பனிக்கட்டி பாலங்களால் அடித்துச் செல்லப்பட்டு அவை உருகும் இடத்தில் விடப்படும் மண்,கற்கள் இந்த ஏரிகளை தாங்கி நிற்கின்றன. இந்த ஏரிகளின் பனிக்கட்டிகள் அல்லது பல்வேறு குப்பைகளின் வீழ்தலால் பனிப்பாறை ஏரிகளில் தூண்டப்படும் வெடிப்புகள், நிலநடுக்கம் அல்லது கடும் மழையினால் உருவாகும் அலைகளை விஞ்சும் விதத்தில் உள்ளன. இதன் விளைவாக சில நிமிடங்களிலோ அல்லது சில மணி நேரங்களிலோ நிகழும் பனிப்பாறை சரிவுகளால் உண்டாகும் வெள்ளப்பெருக்கு இது உண்டாகும் இடத்திலிருந்து கீழ்நோக்கி பாய்ந்து பேரழிவை உண்டாக்குகிறது. இமயமலையின் பிற பகுதிகளை ஒப்பிடும்போது, அதன் மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் பனிப்பாறை ஏரிகளின் எண்ணிக்கை, 1990 ஆம் ஆண்டு முதல் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிகரித்துவரும் புவி வெப்பநிலை காரணமாக, இப்பகுதிகளில் பனிப்பாறைகள் சரிவும் அதிகரித்து வருவதாகவும் அந்த ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

பனிப்பாறை ஏரிகள் வெடிப்பால் ஏற்படும் வெள்ளத்தின் பேரழிவுகளை கருத்தில் கொண்டு, இதனை தடுக்கும் நோக்கில், தேசிய பனிப்பாறை ஏரி வெடிப்பு வெள்ள அபாயத் தடுப்புத் திட்டத்தை கடந்த ஜூலை 25 இல் மத்திய அரசு அங்கீகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகின. முதல்கட்டமாக சிக்கிமில் வெள்ள அபாயம் உள்ள ஆறு பனிப்பாறை ஏரிகளை தேர்ந்தெடுத்து, அவற்றின் நீள, அகலம் மற்றும் ஆழத்தை அளவிட்டு, இந்த ஏரிகளில் நீரின் அளவைக் குறைப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து. அதன் மூலம் வெள்ள அபாயத்தை தணிப்பது வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.

ஆபத்தான பனிப்பாறை ஏரிகள் குறித்த வரைபடத்தை உருவாக்குதல் (MAP) மற்றும் அவற்றின் வெள்ள ஆபத்தை மதிப்பிடுதல் ஆகியவை அப்பகுதியில் இத்தகைய பேரழிவுகளின் தாக்கத்தைத் தணிக்க பொருத்தமான தடுப்பு முறைகளை உருவாக்க வழிவகுக்கும். அதிகரித்துவரும் மனித வாழ்விடங்களின் போக்கு, நீர் மின் உற்பத்தி, பாலங்கள், சுரங்கங்கள் மற்றும் சாலைகள் அமைத்தல் போன்ற இமயமலை பகுதிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் உள்கட்டமைப்பு திட்டங்கள் அதன் இயற்கை சூழலுக்கு ஊறுவிளைவிக்கும் விதத்தில் அமைந்துவிடுகின்றன.

இமயமலை பகுதிகளில் அமைந்துள்ள மாநிலங்களின் தற்போதைய வளர்ச்சி திட்டங்கள், கட்டுப்பாடற்ற சுற்றுலா உள்ளிட்டவை காலநிலை மாற்றத்தின் பின்னணியில் தீவிரமாக மறுபரிசீலனை செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது.

இதையும் படிங்க:செயின்ட் மார்ட்டின் தீவு மீதான அமெரிக்காவின் ஆதிக்கவெறி.. இந்தியாவுக்கு சொல்லும் பாடம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.