ETV Bharat / health

மார்பக புற்றுநோய் பரம்பரை பரம்பரையாக வருமா? சர்வதேச ஆய்வு சொல்வதென்ன? - REASON FOR BREAST CANCER - REASON FOR BREAST CANCER

breast cancer symptoms in tamil: மார்பக புற்றுநோயின் குடும்ப வரலாற்றைக் கொண்ட பெண்களுக்கு மார்ப்க புற்றுநோய் வரும் ஆபத்து அதிகமாக உள்ளது என நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், மார்பக புற்றுநோய் வருவதற்கான காரணங்களையும் வெளியிட்டுள்ளது..

கோப்புப்படம்
கோப்புப்படம் (CREDIT - GETTY IMAGES)
author img

By ETV Bharat Health Team

Published : Sep 19, 2024, 4:28 PM IST

ஹைதராபாத்: உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, இந்தியாவில் 28 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்த புற்றுநோய் எதனால் வருகிறது? மார்பக புற்றுநோய் பரவுமா? யாருக்கு அதிகம் வர வாய்ப்புள்ளது? போன்ற நமது கேள்விகளுக்கு ஆய்வு சொல்லும் பதில்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..

எடை அதிகரிப்பு: 2018ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட புற்றுநோய் தடுப்பு ஆய்வின் படி, அதிக எடையுடன் இருப்பது மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்கிறது. அதுமட்டுமல்லாது, இதை NIHன் நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் உறுதிசெய்துள்ளது.

கருத்தடை மாத்திரைகள் அதிகம் பயன்படுத்தக்கூடாது
கருத்தடை மாத்திரைகள் அதிகம் பயன்படுத்தக்கூடாது (CREDIT - GETTY IMAGES)

மது அருந்துதல்: மது அருந்தாதவர்களை விட மது அருந்துபவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகைபிடிப்பது மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

மது மற்றும் புகைப்பழக்கம் மார்பக புற்றுநோயிற்கு வழிவகுக்கும்
மது மற்றும் புகைப்பழக்கம் மார்பக புற்றுநோயிற்கு வழிவகுக்கும் (CREDIT - GETTY IMAGES)

உடல் உழைப்பு இல்லாமை: பெண்கள் உடற்பயிற்சி செய்யாமல் இருக்கும் போது மார்பக புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கிறது என்கிறது ஆய்வு. முறையற்ற இரத்த ஓட்டம் காரணமாக மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது.

ஹார்மோன் பிரச்சனை: பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் வலியைக் குறைக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். இது, பல ஹார்மோன் பிரச்சனைகளுக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல் புற்றுநோய் வரும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. குறிப்பாக, மெனோபாஸ் காலத்தில் இருக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்.

தாய்பால் கொடுக்காதவர்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் அதிகம்
தாய்பால் கொடுக்காதவர்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் அதிகம் (CREDIT - GETTY IMAGES)

தாய்ப்பால் கொடுக்காததால்: தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதும் மார்பக புற்றுநோயை உண்டாக்கும் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் வெளியாகியுள்ளது. குழந்தை இல்லாத பெண்களுக்கும், தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோயின் ஆபத்து குறைவாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கருத்தடை மாத்திரைகள் பயன்பாடு: கருத்தடை மாத்திரைகளை அதிகமாகப் பயன்படுத்துவதால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த மருந்துகள் ஏற்படுத்தும் ஹார்மோன் தாக்கத்தால் மார்பக புற்றுநோய் கூட வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

போதிய உடற்பயிற்சி இல்லாமை அபாயத்தை அதிகரிக்கிறது
போதிய உடற்பயிற்சி இல்லாமை அபாயத்தை அதிகரிக்கிறது (CREDIT - GETTY IMAGES)

மார்பக புற்றுநோயின் அறிகுறிகள்:

  • மார்பகத்தில் கட்டி
  • மார்பகம் அல்லது முலைக்காம்பு வடிவத்தில் மாற்றம்
  • முலைகாம்புகளில் இருந்து திரவம் கசிதல்
  • மார்பக தோல் மர்றும் முலைகாம்பு சிவத்தல்
  • கை,தோல் அல்லது அக்குளில் வீக்கம்

மார்பக புற்றுநோய் பரம்பரை பரம்பரையாக வருமா?

முதல் நிலை உறவினர்கள் ( தாய், சகோதரி,மகள்) என மார்பக புற்றுநோயின் குடும்ப வரலாற்றைக் கொண்ட பெண்களுக்கு மார்ப்க புற்றுநோய் வரும் ஆபத்து அதிகமாக உள்ளது

இதையும் படிங்க: இந்த 5 அறிகுறிகள் இருந்தால்..புற்றுநோய்க்கான அபாயம் என அர்த்தம்!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ஹைதராபாத்: உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மில்லியன் கணக்கான பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, இந்தியாவில் 28 பெண்களில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இந்த புற்றுநோய் எதனால் வருகிறது? மார்பக புற்றுநோய் பரவுமா? யாருக்கு அதிகம் வர வாய்ப்புள்ளது? போன்ற நமது கேள்விகளுக்கு ஆய்வு சொல்லும் பதில்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..

எடை அதிகரிப்பு: 2018ம் ஆண்டில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட புற்றுநோய் தடுப்பு ஆய்வின் படி, அதிக எடையுடன் இருப்பது மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்கிறது. அதுமட்டுமல்லாது, இதை NIHன் நேஷனல் கேன்சர் இன்ஸ்டிடியூட் உறுதிசெய்துள்ளது.

கருத்தடை மாத்திரைகள் அதிகம் பயன்படுத்தக்கூடாது
கருத்தடை மாத்திரைகள் அதிகம் பயன்படுத்தக்கூடாது (CREDIT - GETTY IMAGES)

மது அருந்துதல்: மது அருந்தாதவர்களை விட மது அருந்துபவர்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புகைபிடிப்பது மார்பக புற்றுநோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

மது மற்றும் புகைப்பழக்கம் மார்பக புற்றுநோயிற்கு வழிவகுக்கும்
மது மற்றும் புகைப்பழக்கம் மார்பக புற்றுநோயிற்கு வழிவகுக்கும் (CREDIT - GETTY IMAGES)

உடல் உழைப்பு இல்லாமை: பெண்கள் உடற்பயிற்சி செய்யாமல் இருக்கும் போது மார்பக புற்றுநோயின் அபாயம் அதிகரிக்கிறது என்கிறது ஆய்வு. முறையற்ற இரத்த ஓட்டம் காரணமாக மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது.

ஹார்மோன் பிரச்சனை: பல பெண்கள் மாதவிடாய் காலத்தில் வலியைக் குறைக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். இது, பல ஹார்மோன் பிரச்சனைகளுக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல் புற்றுநோய் வரும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. குறிப்பாக, மெனோபாஸ் காலத்தில் இருக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்.

தாய்பால் கொடுக்காதவர்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் அதிகம்
தாய்பால் கொடுக்காதவர்களுக்கு புற்றுநோய் வரும் அபாயம் அதிகம் (CREDIT - GETTY IMAGES)

தாய்ப்பால் கொடுக்காததால்: தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதும் மார்பக புற்றுநோயை உண்டாக்கும் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் வெளியாகியுள்ளது. குழந்தை இல்லாத பெண்களுக்கும், தாய்ப்பால் கொடுக்காத பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோயின் ஆபத்து குறைவாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கருத்தடை மாத்திரைகள் பயன்பாடு: கருத்தடை மாத்திரைகளை அதிகமாகப் பயன்படுத்துவதால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த மருந்துகள் ஏற்படுத்தும் ஹார்மோன் தாக்கத்தால் மார்பக புற்றுநோய் கூட வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

போதிய உடற்பயிற்சி இல்லாமை அபாயத்தை அதிகரிக்கிறது
போதிய உடற்பயிற்சி இல்லாமை அபாயத்தை அதிகரிக்கிறது (CREDIT - GETTY IMAGES)

மார்பக புற்றுநோயின் அறிகுறிகள்:

  • மார்பகத்தில் கட்டி
  • மார்பகம் அல்லது முலைக்காம்பு வடிவத்தில் மாற்றம்
  • முலைகாம்புகளில் இருந்து திரவம் கசிதல்
  • மார்பக தோல் மர்றும் முலைகாம்பு சிவத்தல்
  • கை,தோல் அல்லது அக்குளில் வீக்கம்

மார்பக புற்றுநோய் பரம்பரை பரம்பரையாக வருமா?

முதல் நிலை உறவினர்கள் ( தாய், சகோதரி,மகள்) என மார்பக புற்றுநோயின் குடும்ப வரலாற்றைக் கொண்ட பெண்களுக்கு மார்ப்க புற்றுநோய் வரும் ஆபத்து அதிகமாக உள்ளது

இதையும் படிங்க: இந்த 5 அறிகுறிகள் இருந்தால்..புற்றுநோய்க்கான அபாயம் என அர்த்தம்!

பொறுப்புத் துறப்பு: இங்கு, உங்களுக்கு வழங்கப்படும் அனைத்து தகவல்களும், பரிந்துரைகளும் உங்கள் புரிதலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை நாங்கள் வழங்குகிறோம். இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது என்பதை குறிப்பிடுகிறோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.