ETV Bharat / entertainment

ஆன்மீகத்தில் அதிக நாட்டம் ஏன்? - சந்தானம் பளீச் பதில்! - inga naan thaan kingu

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 3, 2024, 10:40 PM IST

Inga Naan Thaan Kingu: இங்க நான் தான் கிங்கு பட செய்தியாளர்கள் சந்திப்பில், நடிகர் சந்தானம் ஒழுக்கத்திலும், செய்யும் வேலையிலும் அர்ப்பணிப்புடன் இருக்க ஒரு பேஸ் வேண்டும். அப்படி கலகலப்பாக இருப்பதற்கான அடித்தளம் தான் ஆன்மீகம் என பேசினார்.

நடிகர் சந்தானம் புகைப்படம்
நடிகர் சந்தானம் புகைப்படம் (credit to Etv bharat tamil nadu)

சென்னை: இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில், நடிகர்கள் சந்தானம், தம்பி ராமையா, பால சரவணன், நடிகை ப்ரியா லயா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'இங்க நான் தான் கிங்கு'. இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசை அமைத்துள்ளார். இப்படம் வருகிற மே 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதன் செய்தியாளர் சந்திப்பு இன்று (மே 3) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் ஆனந்த் நாராயண், இசையமைப்பாளர், நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் சேஷு மறைவுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர், நடிகர் தம்பி ராமையா பேசுகையில், "இன்றைக்கு சினிமாவை தமிழ், மலையாளம் எனப் பிரித்துப பார்க்கின்றனர்.‌ நம்முடைய கலையைத் தாழ்த்திப் பேச வேண்டிய அவசியம் இல்லை. இப்படம் காமெடிப் படமாக அமைந்துள்ளது. சந்தானத்தின் வெற்றிக்கு காரணம் அவரின் அணுகுமுறை தான். நிஜ ஹீரோ அவர்.

பழைய நண்பர்களைப் பக்கத்தில் வைத்து சகித்துப் பழக்கக்கூடியவர். இசையமைப்பாளர் இமான் இசை நன்றாக வந்துள்ளது. மைனா, கும்கி பட நினைவுகள் வருகின்றது எனக்கு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு காமெடி படம் செய்துள்ளேன். இந்தப் படம் யாரையும் ஏமாத்தாது. குடும்பத்துடன் பார்க்கக்கூடிய தகுதியுடைய படம்" என்றார்.

இசையமைப்பாளர் டி.இமான் பேசுகையில், “இந்தப் படத்தின் தயாரிப்பாளருடன் இணைந்து வெள்ளக்கார துரை மற்றும் மருது படத்தில் இசையமைத்துள்ளேன். சந்தானத்துடன் படம் இசையமைக்க ரொம்ப நாள் ஆசை. இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்தது ரொம்ப சந்தோசம். மாயோனே பாடல் நல்ல பாடலாக அமைந்துள்ளது. சந்தானம் படத்தில் மெலோடி பாடல் இல்லை என நான் நினைத்ததுண்டு. இந்தப் படத்தில் ஒரு பாடல் அமைந்துள்ளது" என்றார்.

நடிகர் சந்தானம் பேசுகையில், "மாப்பிள்ளை இவர்தான், ஆனால் அவர் போட்டு இருக்கிற சட்டை என்னுடையது என்ற படையப்பா பட டயலாக் போல பவர்ஃபுல் தயாரிப்பாளர் கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச் செழியன். இந்த நிறுவனம் என்னை வைத்து படம் எடுத்தது ரொம்ப மகிழ்ச்சி.

சாப்பாட்டுக்கு சால்ட் போல ஒரு படத்திற்குப் பாடல் ரொம்ப முக்கியம். இசையமைப்பாளர் இமான் அற்புதமாக பாடல்களை இசையமைத்துள்ளார். தம்பி ராமையா பயங்கரமான காமெடியை செய்துள்ளார். இந்தப் படத்தில் எனக்கு மாமனார் கொடுமை செய்துள்ளார். 90ஸ் கிட்ஸ் படமாக எடுத்துள்ளோம்.

இன்றைய இளைஞர்களின் நிலையை கதையாக, காமெடியாக படத்தை எடுத்துள்ளோம். இரண்டு, மூன்று கதாநாயகிகளுடன் நடிக்க கதை இருந்தால் நடிப்பேன். நான் இந்த அளவுக்கு வெற்றியுடன் வந்துள்ளதற்கு நான் மட்டும் காரணம் அல்ல. என் உடன் இருந்த அனைத்து நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்தான் காரணம்.

இங்கு நான் தான் கிங்கு ரஜினிகாந்த் பேசிய வசனம். அது இப்படத்திற்குப் பொருத்தமாக இருந்தது. மற்றபடி அரசியல் காரணங்களுக்காக இல்லை. படத்தில் சிம்பு, விஷாலை கலாய்க்கும் வசனங்கள் உள்ளது. இது ரசிக்கப்படுகிறது” என்றார்.

நீங்கள் உங்கள் கூட நடித்தவர்களுக்கு உதவி செய்வதில்லை என்ற செய்தி பரவி வருகிறது. அதுபற்றி உங்கள் கருத்து என்ற கேள்விக்கு, எல்லோரும் என்னை ரசித்தால் நான் கடவுளாக மாறிவிடுவேன். நம்மைப் பிடிக்காதவர்கள் தவறாகச் சொல்லவும் சிலர் இருப்பார்கள். அதனை பெரிதுபடுத்த தேவையில்லை.

மரணம் என்பது நம் கையில் இல்லை. எப்போது வரும் என்று தெரியாது. இருக்கும் வரை ஆரோக்கியமாக வாழ்வதற்கான விஷயங்களை நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். அனுஷ்காவுடன் நடிக்க வேண்டும் என்று ஆசை எனச் சொல்லியிருந்தேன். கதை அமையவில்லை அமைந்தால் நடிக்கலாம்.

ஆன்மீகத்தில் அதிக நாட்டம் ஏன் என்ற கேள்விக்கு, ஒழுக்கத்திலும், செய்யும் வேலையிலும் அர்ப்பணிப்புடன் இருக்க ஒரு பேஸ் வேண்டும். அப்படி கலகலப்பாக இருப்பதற்கான அடித்தளம் ஆன்மீகத்தில் கிடைக்கிறது" என்று பேசினார்.

இதையும் படிங்க: "மனோபாலாவைப் போல உயரத்தை தொட்டவரும் இல்லை, விழுந்தவரும் இல்லை" - பூச்சி முருகன் நெகிழ்ச்சி! - ACTOR MANO BALA DEATH ANNIVERSARY

சென்னை: இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில், நடிகர்கள் சந்தானம், தம்பி ராமையா, பால சரவணன், நடிகை ப்ரியா லயா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'இங்க நான் தான் கிங்கு'. இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசை அமைத்துள்ளார். இப்படம் வருகிற மே 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதன் செய்தியாளர் சந்திப்பு இன்று (மே 3) சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் ஆனந்த் நாராயண், இசையமைப்பாளர், நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் சேஷு மறைவுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர், நடிகர் தம்பி ராமையா பேசுகையில், "இன்றைக்கு சினிமாவை தமிழ், மலையாளம் எனப் பிரித்துப பார்க்கின்றனர்.‌ நம்முடைய கலையைத் தாழ்த்திப் பேச வேண்டிய அவசியம் இல்லை. இப்படம் காமெடிப் படமாக அமைந்துள்ளது. சந்தானத்தின் வெற்றிக்கு காரணம் அவரின் அணுகுமுறை தான். நிஜ ஹீரோ அவர்.

பழைய நண்பர்களைப் பக்கத்தில் வைத்து சகித்துப் பழக்கக்கூடியவர். இசையமைப்பாளர் இமான் இசை நன்றாக வந்துள்ளது. மைனா, கும்கி பட நினைவுகள் வருகின்றது எனக்கு. நீண்ட இடைவெளிக்குப் பிறகு காமெடி படம் செய்துள்ளேன். இந்தப் படம் யாரையும் ஏமாத்தாது. குடும்பத்துடன் பார்க்கக்கூடிய தகுதியுடைய படம்" என்றார்.

இசையமைப்பாளர் டி.இமான் பேசுகையில், “இந்தப் படத்தின் தயாரிப்பாளருடன் இணைந்து வெள்ளக்கார துரை மற்றும் மருது படத்தில் இசையமைத்துள்ளேன். சந்தானத்துடன் படம் இசையமைக்க ரொம்ப நாள் ஆசை. இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்தது ரொம்ப சந்தோசம். மாயோனே பாடல் நல்ல பாடலாக அமைந்துள்ளது. சந்தானம் படத்தில் மெலோடி பாடல் இல்லை என நான் நினைத்ததுண்டு. இந்தப் படத்தில் ஒரு பாடல் அமைந்துள்ளது" என்றார்.

நடிகர் சந்தானம் பேசுகையில், "மாப்பிள்ளை இவர்தான், ஆனால் அவர் போட்டு இருக்கிற சட்டை என்னுடையது என்ற படையப்பா பட டயலாக் போல பவர்ஃபுல் தயாரிப்பாளர் கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச் செழியன். இந்த நிறுவனம் என்னை வைத்து படம் எடுத்தது ரொம்ப மகிழ்ச்சி.

சாப்பாட்டுக்கு சால்ட் போல ஒரு படத்திற்குப் பாடல் ரொம்ப முக்கியம். இசையமைப்பாளர் இமான் அற்புதமாக பாடல்களை இசையமைத்துள்ளார். தம்பி ராமையா பயங்கரமான காமெடியை செய்துள்ளார். இந்தப் படத்தில் எனக்கு மாமனார் கொடுமை செய்துள்ளார். 90ஸ் கிட்ஸ் படமாக எடுத்துள்ளோம்.

இன்றைய இளைஞர்களின் நிலையை கதையாக, காமெடியாக படத்தை எடுத்துள்ளோம். இரண்டு, மூன்று கதாநாயகிகளுடன் நடிக்க கதை இருந்தால் நடிப்பேன். நான் இந்த அளவுக்கு வெற்றியுடன் வந்துள்ளதற்கு நான் மட்டும் காரணம் அல்ல. என் உடன் இருந்த அனைத்து நடிகர்கள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்தான் காரணம்.

இங்கு நான் தான் கிங்கு ரஜினிகாந்த் பேசிய வசனம். அது இப்படத்திற்குப் பொருத்தமாக இருந்தது. மற்றபடி அரசியல் காரணங்களுக்காக இல்லை. படத்தில் சிம்பு, விஷாலை கலாய்க்கும் வசனங்கள் உள்ளது. இது ரசிக்கப்படுகிறது” என்றார்.

நீங்கள் உங்கள் கூட நடித்தவர்களுக்கு உதவி செய்வதில்லை என்ற செய்தி பரவி வருகிறது. அதுபற்றி உங்கள் கருத்து என்ற கேள்விக்கு, எல்லோரும் என்னை ரசித்தால் நான் கடவுளாக மாறிவிடுவேன். நம்மைப் பிடிக்காதவர்கள் தவறாகச் சொல்லவும் சிலர் இருப்பார்கள். அதனை பெரிதுபடுத்த தேவையில்லை.

மரணம் என்பது நம் கையில் இல்லை. எப்போது வரும் என்று தெரியாது. இருக்கும் வரை ஆரோக்கியமாக வாழ்வதற்கான விஷயங்களை நாம் பார்த்துக் கொள்ள வேண்டும். அனுஷ்காவுடன் நடிக்க வேண்டும் என்று ஆசை எனச் சொல்லியிருந்தேன். கதை அமையவில்லை அமைந்தால் நடிக்கலாம்.

ஆன்மீகத்தில் அதிக நாட்டம் ஏன் என்ற கேள்விக்கு, ஒழுக்கத்திலும், செய்யும் வேலையிலும் அர்ப்பணிப்புடன் இருக்க ஒரு பேஸ் வேண்டும். அப்படி கலகலப்பாக இருப்பதற்கான அடித்தளம் ஆன்மீகத்தில் கிடைக்கிறது" என்று பேசினார்.

இதையும் படிங்க: "மனோபாலாவைப் போல உயரத்தை தொட்டவரும் இல்லை, விழுந்தவரும் இல்லை" - பூச்சி முருகன் நெகிழ்ச்சி! - ACTOR MANO BALA DEATH ANNIVERSARY

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.