ETV Bharat / entertainment

நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை என்ன?... அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்! - Rajinikanth Health Condition

author img

By ETV Bharat Entertainment Team

Published : 3 hours ago

Rajinikanth Health Condition: நடிகர் ரஜினிகாந்த் வெறும் வயிற்றில் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதால் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம்
நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில் சர்வதேச முதியோர் தினவிழா மற்றும் தமிழ்நாடு முழுவதும் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 975 இடங்கள் கொண்ட முதியோர் பராமரிப்பு உதவியாளர் சான்றிதழ் பயிற்சி வகுப்பை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இந்த முதியோர் பராமரிப்பு உதவியாளர் சான்றிதழ் பயிற்சி வகுப்பு 3 மாதம் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேலும் தேசிய முதியோர் மருத்துவமனையில் முதியோர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்லாங்குழி, கேரம், பாடல்களை கண்டறிதல், தினசரி வாசிப்பு போட்டிகளில் வெற்றி பெற்ற முதியோர்களுக்கு அமைச்சர் பரிசுகளையும் வழங்கி சிறப்பித்தார்.

அமைச்சர் மா.சுப்ரமணியன் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”முதியோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக உயர்ந்து வருகிறது, தமிழ்நாடு அதிகமான முதியோர்களைக் கொண்ட மாநிலமாக உள்ளது, இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் முதியோர்களுக்கான பிரத்யேக மருத்துவமனை கிண்டியில் உள்ளது. இதுவரை 1 லட்சத்து பதினோராயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர்கள் இந்த மருத்துவமனையில் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். இன்று உலகம் முழுவதும் முதியோர் பராமரிப்பில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது” என கூறினார்.

இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர் இல்லாதது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பதவி உயர்வுக்கான பட்டியலில் 26 பேர் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் சிலர் நீதிமன்றத்திற்கு சென்றதன் காரணமாக, உடனடியாக முதல்வர் பணியிடங்களை நிரப்புவதில் கால தாமதம் ஏற்பட்டது.

தற்போது அந்த வழக்கில் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது. எனவே இன்று இரவுக்குள் 26 பேரின் பட்டியலில் இருந்து, 14 பேர் காலியாக உள்ள 14 மருத்துவக் கல்லூரிகளில் முதல்வராக நியமனம் செய்து அரசாணை பிறப்பிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்சார் செய்யப்பட்ட ’வேட்டையன்’... நாளை வெளியாகும் டிரெய்லர்! - vettaiyan censored with UA

இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து கேட்டதற்கு, ”ரஜினிகாந்த் பீரியாடிக் செக்கப்பிற்காக மருத்துவமனை சென்றுள்ளார். வெறும் வயிற்றில் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதால் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று முறை அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனையிடம் பேசி விசாரித்துள்ளோம், விரைவில் நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்புவார்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

சென்னை: கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில் சர்வதேச முதியோர் தினவிழா மற்றும் தமிழ்நாடு முழுவதும் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 975 இடங்கள் கொண்ட முதியோர் பராமரிப்பு உதவியாளர் சான்றிதழ் பயிற்சி வகுப்பை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இந்த முதியோர் பராமரிப்பு உதவியாளர் சான்றிதழ் பயிற்சி வகுப்பு 3 மாதம் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேலும் தேசிய முதியோர் மருத்துவமனையில் முதியோர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்லாங்குழி, கேரம், பாடல்களை கண்டறிதல், தினசரி வாசிப்பு போட்டிகளில் வெற்றி பெற்ற முதியோர்களுக்கு அமைச்சர் பரிசுகளையும் வழங்கி சிறப்பித்தார்.

அமைச்சர் மா.சுப்ரமணியன் வீடியோ (Credits - ETV Bharat Tamil Nadu)

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”முதியோர்களின் எண்ணிக்கை தொடர்ந்து கணிசமாக உயர்ந்து வருகிறது, தமிழ்நாடு அதிகமான முதியோர்களைக் கொண்ட மாநிலமாக உள்ளது, இந்தியாவில் தமிழ்நாட்டில் தான் முதியோர்களுக்கான பிரத்யேக மருத்துவமனை கிண்டியில் உள்ளது. இதுவரை 1 லட்சத்து பதினோராயிரத்துக்கும் மேற்பட்ட முதியோர்கள் இந்த மருத்துவமனையில் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றுள்ளனர். இன்று உலகம் முழுவதும் முதியோர் பராமரிப்பில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது” என கூறினார்.

இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் முதல்வர் இல்லாதது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், “பதவி உயர்வுக்கான பட்டியலில் 26 பேர் இடம் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் சிலர் நீதிமன்றத்திற்கு சென்றதன் காரணமாக, உடனடியாக முதல்வர் பணியிடங்களை நிரப்புவதில் கால தாமதம் ஏற்பட்டது.

தற்போது அந்த வழக்கில் அரசுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது. எனவே இன்று இரவுக்குள் 26 பேரின் பட்டியலில் இருந்து, 14 பேர் காலியாக உள்ள 14 மருத்துவக் கல்லூரிகளில் முதல்வராக நியமனம் செய்து அரசாணை பிறப்பிக்கப்படும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சென்சார் செய்யப்பட்ட ’வேட்டையன்’... நாளை வெளியாகும் டிரெய்லர்! - vettaiyan censored with UA

இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து கேட்டதற்கு, ”ரஜினிகாந்த் பீரியாடிக் செக்கப்பிற்காக மருத்துவமனை சென்றுள்ளார். வெறும் வயிற்றில் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதால் நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூன்று முறை அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனையிடம் பேசி விசாரித்துள்ளோம், விரைவில் நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்புவார்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.