ETV Bharat / entertainment

கைதான ஜாஃபர் சாதிக்..! உண்மை இருக்குமேயானால்..அடுத்து இதுதான் என் முடிவு - இயக்குனர் அமீர் அறிக்கை

Director Ameer on Jaffer Sadiq:டெல்லியில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஜாஃபர் சாதிக் பிடிபட்ட நிலையில், 'சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை' என இயக்குனர் அமீர் தெரிவித்துள்ளார்.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 27, 2024, 1:24 PM IST

Updated : Feb 27, 2024, 2:30 PM IST

Director Ameer said about Jaffer Sadiq
ஜாஃபர் சாதிக் கைது குறித்து இயக்குனர் அமீர் கருத்து

சென்னை: டெல்லியில் 50 கிலோ சூடோபெட்ரின் என்ற போதைப் பொருளை கடத்திய தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், டெல்லி காவல்துறையுடன் இணைந்து கைது செய்தனர்.

இந்த மூன்று பேரில் சினிமா தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பவரும் ஒருவர். அவர் இயக்குனர் அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் இறைவன் மிகப் பெரியவன், கயல் ஆனந்தி நடித்துள்ள மங்கை, வசந்த் ரவி நடித்துள்ள இந்திரா உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார். இதனையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணயில், சர்வதேச அளவில் ரூ.2000 கோடி மதிப்புள்ள இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாஃபர் சாதிக் எனத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் அமீர் நேற்று (பிப்.26) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், 'மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தள, வலை ஒளி, வானொலி, பண்பலை மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கு வணக்கம். கடந்த இரண்டு நாட்களாக, எனது “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் அவர்கள் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த 22-ம் தேதி நான் “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்தபோது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை. எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.

நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் என்பதை ஊடகத்துறையினர் நன்கு அறிவர். அந்த வகையில், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போதும், நான் பத்திரிகையாளர்களை வழக்கமாகச் சந்திக்கும் எனது அலுவலகத்தில் திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். முழுவிபரங்கள் தெரிந்த பிறகு, விரைவில் பத்திரிகை மற்றும் ஊடக துறையினரைச் சந்திக்கின்றேன். “இறைவன் மிகப் பெரியவன்” ' என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: டெல்லி போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்..! கூடுதலாக 2 பேருக்கு கடத்தலில் லிங்க்..!

சென்னை: டெல்லியில் 50 கிலோ சூடோபெட்ரின் என்ற போதைப் பொருளை கடத்திய தமிழகத்தைச் சேர்ந்த 3 பேரை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், டெல்லி காவல்துறையுடன் இணைந்து கைது செய்தனர்.

இந்த மூன்று பேரில் சினிமா தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் என்பவரும் ஒருவர். அவர் இயக்குனர் அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் இறைவன் மிகப் பெரியவன், கயல் ஆனந்தி நடித்துள்ள மங்கை, வசந்த் ரவி நடித்துள்ள இந்திரா உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார். இதனையடுத்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணயில், சர்வதேச அளவில் ரூ.2000 கோடி மதிப்புள்ள இந்த போதைப்பொருள் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது, தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாஃபர் சாதிக் எனத் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் அமீர் நேற்று (பிப்.26) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், 'மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தள, வலை ஒளி, வானொலி, பண்பலை மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கு வணக்கம். கடந்த இரண்டு நாட்களாக, எனது “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் அவர்கள் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த 22-ம் தேதி நான் “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்தபோது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை. எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.

நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் என்பதை ஊடகத்துறையினர் நன்கு அறிவர். அந்த வகையில், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போதும், நான் பத்திரிகையாளர்களை வழக்கமாகச் சந்திக்கும் எனது அலுவலகத்தில் திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். முழுவிபரங்கள் தெரிந்த பிறகு, விரைவில் பத்திரிகை மற்றும் ஊடக துறையினரைச் சந்திக்கின்றேன். “இறைவன் மிகப் பெரியவன்” ' என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: டெல்லி போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் திருப்பம்..! கூடுதலாக 2 பேருக்கு கடத்தலில் லிங்க்..!

Last Updated : Feb 27, 2024, 2:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.