ETV Bharat / entertainment

காமெடி நடிகர் முதல் பன்முக கதாநாயகன் வரை... சாதித்து காட்டிய 'பரோட்டா சூரி' - Actor soori birthday

author img

By ETV Bharat Entertainment Team

Published : Aug 27, 2024, 1:12 PM IST

Actor soori birthday: இன்று தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து பன்முக நடிகராக மாறிய சூரி தனது 47வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

நடிகர் சூரி புகைப்படம்
நடிகர் சூரி புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu, Lyca productions X account)

சென்னை: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நகைச்சுவை நடிகர் கொடி கட்டிப் பறப்பார். கவுண்டமணி, செந்தில் தொடங்கி விவேக், வடிவேலு, சந்தானம், யோகி பாபு வரிசையில் தனக்கென ஒரு பாதை அமைத்து வெற்றி பெற்றவர் நடிகர் சூரி. நகைச்சுவை நடிகர்களான வடிவேலு, சந்தானம் எல்லாம் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் கோலிவுட்டில் பாதை மாற, அந்த வெற்றிடத்தை வெற்றிகரமாக பிடித்துக்கொண்டு முன்னேறினார் சூரி.

மதுரையில் ஒரு எளிதான குடும்பத்தில் பிறந்த சூரிக்கு எல்லோரையும் போல சினிமா ஆசை வந்து சென்னைக்கு வந்துவிட்டார்.‌ இங்கு சிறிய வேலைகள் பார்த்து திரைப்படங்களில் ஒரு காட்சியில் வந்து தனது நடிப்பு ஆசைக்கு அடித்தளம் போட்டார். ‘மறுமலர்ச்சி’ படத்தில் ஒரு காட்சியில் வந்தவர், பின்னர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான 'வெண்ணிலா கபடிக் குழு' என்ற படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் தனது நகைச்சுவை மூலம் பிரபலமானார்.

அந்த காட்சியில் 'கோட்ட அழிங்க நான் முதல்ல இருந்து சாப்பிடுகிறேன்' என்று சொல்லி, தனக்கான எண்ணிக்கையை தொடங்கினார். திறமை ஒருபோதும் ஒருவனை கைவிடாது என்பது சூரியின் விஷயத்தில் உண்மையானது. அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அவரது உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ரஜினி, விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.‌

குறிப்பாக, சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்கள் சூரிக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது.‌ ரஜினியுடன் அண்ணாத்த, விஜய் உடன் ஜில்லா, அஜித் உடன் வேதாளம் ஆகிய படங்களில் நகைச்சுவை காட்சிகளில் ஜொலித்தார். இப்படி படிப்படியாக முன்னேறிய இவரை, கதாநாயகனாக மாற்றினார் வெற்றிமாறன். காமெடி நடிகர்கள் தொடர்ந்து நாயகனாக ஆசைப்பட்டு சொதப்பி வந்த நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கிறார் என்ற செய்தி பரபரப்பாக பேசப்பட்டது.‌

ஏனெனில், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் கால்ஷீட் கொடுக்க காத்துக் கொண்டிருக்கும் நிலையில், சூரி நடிக்கும் படத்தை அவர் இயக்குகிறாரா என கோலிவுட் ஆச்சரியத்துடன் கிசுகிசுத்தது. இளையராஜா இசையில் வெளியான 'விடுதலை' சூரியின் நடிப்பு திறமைக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. 'இவ்வளவு பயங்கரமான நடிப்புத் திறமையை வைத்துக்கொண்டு ஏன் காமெடியனாக நடிச்சீங்க' என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டனர். விடுதலை படத்தில் முற்றிலும் வேறுவிதமான பரிணாமத்தில் சூரியைப் பார்க்க முடிந்தது.

வாய்ப்பு கிடைத்தால் நானும் ஹீரோ தான் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார் சூரி, ரசிகர்களும் அவரை ஏற்றுக்கொண்டனர். அடுத்து சூரியின் பயணம் எப்படி இருக்கும் என நினைப்பதற்குள், கருடனாக கால் பதித்து மீண்டும் தான் ஒரு நல்ல நடிகன் என்பதை நிரூபித்தார். சூரி திறமையான நடிப்பை தனக்குள்ளே வைத்துக் கொண்டு வாய்ப்பு வரும் வரை காத்திருந்து சிக்ஸர் அடித்தார் என்றும் கூறலாம். தற்போது 'கொட்டுக்காளி' என்ற படத்தின் மூலம் சூரி உலக அரங்கில் தனது நடிப்புத் திறமைக்கு அங்கீகாரம் பெற்றுள்ளார்.

'கொட்டுக்காளி' படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், சூரியின் நடிப்பு பேசப்பட்டது.‌ அடுத்து விடுதலை இரண்டாம் பாகம் வரவுள்ளது. சாதாரண நடிகராக இருந்து கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பிடித்து, கடினமான உழைத்து, இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாறியுள்ளார் சூரி. பரோட்டா காமெடியில் பிரபலமாகி, இன்று உலக அளவில் திரைப்பட விழாக்களில் நடிப்பிற்கு பாராட்டைப் பெற்று சாதித்துக் காட்டிய நடிகர் சூரிக்கு‌ பிறந்தநாள் வாழ்த்துகள்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தனுஷ் இயக்ககிய ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ முதல் சிங்கிள் எப்போது? - Nilavukku en mel ennadi kobam

சென்னை: தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நகைச்சுவை நடிகர் கொடி கட்டிப் பறப்பார். கவுண்டமணி, செந்தில் தொடங்கி விவேக், வடிவேலு, சந்தானம், யோகி பாபு வரிசையில் தனக்கென ஒரு பாதை அமைத்து வெற்றி பெற்றவர் நடிகர் சூரி. நகைச்சுவை நடிகர்களான வடிவேலு, சந்தானம் எல்லாம் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் கோலிவுட்டில் பாதை மாற, அந்த வெற்றிடத்தை வெற்றிகரமாக பிடித்துக்கொண்டு முன்னேறினார் சூரி.

மதுரையில் ஒரு எளிதான குடும்பத்தில் பிறந்த சூரிக்கு எல்லோரையும் போல சினிமா ஆசை வந்து சென்னைக்கு வந்துவிட்டார்.‌ இங்கு சிறிய வேலைகள் பார்த்து திரைப்படங்களில் ஒரு காட்சியில் வந்து தனது நடிப்பு ஆசைக்கு அடித்தளம் போட்டார். ‘மறுமலர்ச்சி’ படத்தில் ஒரு காட்சியில் வந்தவர், பின்னர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான 'வெண்ணிலா கபடிக் குழு' என்ற படத்தில் பரோட்டா சாப்பிடும் காட்சியில் தனது நகைச்சுவை மூலம் பிரபலமானார்.

அந்த காட்சியில் 'கோட்ட அழிங்க நான் முதல்ல இருந்து சாப்பிடுகிறேன்' என்று சொல்லி, தனக்கான எண்ணிக்கையை தொடங்கினார். திறமை ஒருபோதும் ஒருவனை கைவிடாது என்பது சூரியின் விஷயத்தில் உண்மையானது. அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அவரது உடல்மொழி மற்றும் வசன உச்சரிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ரஜினி, விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.‌

குறிப்பாக, சிவகார்த்திகேயன் உடன் இணைந்து நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்கள் சூரிக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது.‌ ரஜினியுடன் அண்ணாத்த, விஜய் உடன் ஜில்லா, அஜித் உடன் வேதாளம் ஆகிய படங்களில் நகைச்சுவை காட்சிகளில் ஜொலித்தார். இப்படி படிப்படியாக முன்னேறிய இவரை, கதாநாயகனாக மாற்றினார் வெற்றிமாறன். காமெடி நடிகர்கள் தொடர்ந்து நாயகனாக ஆசைப்பட்டு சொதப்பி வந்த நிலையில், வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிக்கிறார் என்ற செய்தி பரபரப்பாக பேசப்பட்டது.‌

ஏனெனில், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் கால்ஷீட் கொடுக்க காத்துக் கொண்டிருக்கும் நிலையில், சூரி நடிக்கும் படத்தை அவர் இயக்குகிறாரா என கோலிவுட் ஆச்சரியத்துடன் கிசுகிசுத்தது. இளையராஜா இசையில் வெளியான 'விடுதலை' சூரியின் நடிப்பு திறமைக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. 'இவ்வளவு பயங்கரமான நடிப்புத் திறமையை வைத்துக்கொண்டு ஏன் காமெடியனாக நடிச்சீங்க' என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டனர். விடுதலை படத்தில் முற்றிலும் வேறுவிதமான பரிணாமத்தில் சூரியைப் பார்க்க முடிந்தது.

வாய்ப்பு கிடைத்தால் நானும் ஹீரோ தான் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார் சூரி, ரசிகர்களும் அவரை ஏற்றுக்கொண்டனர். அடுத்து சூரியின் பயணம் எப்படி இருக்கும் என நினைப்பதற்குள், கருடனாக கால் பதித்து மீண்டும் தான் ஒரு நல்ல நடிகன் என்பதை நிரூபித்தார். சூரி திறமையான நடிப்பை தனக்குள்ளே வைத்துக் கொண்டு வாய்ப்பு வரும் வரை காத்திருந்து சிக்ஸர் அடித்தார் என்றும் கூறலாம். தற்போது 'கொட்டுக்காளி' என்ற படத்தின் மூலம் சூரி உலக அரங்கில் தனது நடிப்புத் திறமைக்கு அங்கீகாரம் பெற்றுள்ளார்.

'கொட்டுக்காளி' படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், சூரியின் நடிப்பு பேசப்பட்டது.‌ அடுத்து விடுதலை இரண்டாம் பாகம் வரவுள்ளது. சாதாரண நடிகராக இருந்து கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் பிடித்து, கடினமான உழைத்து, இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாறியுள்ளார் சூரி. பரோட்டா காமெடியில் பிரபலமாகி, இன்று உலக அளவில் திரைப்பட விழாக்களில் நடிப்பிற்கு பாராட்டைப் பெற்று சாதித்துக் காட்டிய நடிகர் சூரிக்கு‌ பிறந்தநாள் வாழ்த்துகள்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: தனுஷ் இயக்ககிய ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ முதல் சிங்கிள் எப்போது? - Nilavukku en mel ennadi kobam

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.