ETV Bharat / business

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி வரிப்பகிர்வு மொத்தம் ரூ.1,78,173 கோடி! தமிழ்நாட்டுக்கு எவ்வளவு?

அக்டோபர் மாதத்திற்குரிய மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி வரிப்பகிர்வு தொகையை மத்திய அரசு இன்று விடுவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கான நிதிப்பகிர்வாக ரூ.7,268 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2024, 6:29 PM IST

கோப்புப்படம்
கோப்புப்படம் (Credits - ani)

சென்னை : மத்திய அரசு, மாநிலங்களுக்கான வரிப் பகிர்வாக ரூ. 1,78,173 கோடியை இன்று விடுவித்துள்ளது. இது வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.

ஜிஎஸ்டி வரி வருவாயை மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கிறது. மாநிலங்களின் மூலதனம் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடுவதற்காக இந்த தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, மத்திய அரசு ரூ. 1,78,173 கோடியை விடுவித்துள்ளது.

வழக்கமாக மாதாந்திர வரிப்பகிர்வு ரூ. 89,086.50 கோடியாக இருக்கும். ஆனால் தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதல் வரிப்பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், வரவிருக்கும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த வரிப்பகிர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 2024 அக்டோபர் மாதத்தில் விடுவிக்கப்பட வேண்டிய வழக்கமான முன்கூட்டிய தவணையும் அடங்கியுள்ளது. விடுவிக்கப்பட்ட தொகையின் மாநில வாரியான விவரம் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 'டெல்லி போனதும் கட்டாயம் பேசுவேன்' ஜிஎஸ்டி கலந்துரையாடலில் நிர்மலா சீதாராமன் உறுதி!

2024 அக்டோபர் மாதத்திற்கான மத்திய வரிகள் மற்றும் தீர்வைகளின் மாநில வாரியான வரிப்பகிர்வு :

வரிசை
எண்
மாநிலத்தின் பெயர்மொத்தம்
(கோடி ரூபாயில்)
1ஆந்திரப் பிரதேசம்7,211
2அருணாச்சலப் பிரதேசம்3,131
3அசாம்5,573
4பீகார்17,921
5சத்தீஸ்கர்6,070
6கோவா688
7குஜராத்6,197
8ஹரியானா1,947
9இமாச்சலப் பிரதேசம்1,479
10ஜார்க்கண்ட்5,892
11கர்நாடகா6,498
12கேரளா3,430
13மத்தியப் பிரதேசம்13,987
14மகாராஷ்டிரா11,255
15மணிப்பூர்1,276
16மேகாலயா1,367
17மிசோரம்891
18நாகாலாந்து1,014
19ஒடிசா8,068
20பஞ்சாப்3,220
21ராஜஸ்தான்10,737
22சிக்கிம்691
23தமிழ்நாடு7,268
24தெலங்கானா3,745
25திரிபுரா1,261
26உத்தரப் பிரதேசம்31,962
27உத்தராகண்ட்1,992
28மேற்கு வங்கம்13,404

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

சென்னை : மத்திய அரசு, மாநிலங்களுக்கான வரிப் பகிர்வாக ரூ. 1,78,173 கோடியை இன்று விடுவித்துள்ளது. இது வழக்கத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.

ஜிஎஸ்டி வரி வருவாயை மத்திய அரசு மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கிறது. மாநிலங்களின் மூலதனம் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு செலவிடுவதற்காக இந்த தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, மத்திய அரசு ரூ. 1,78,173 கோடியை விடுவித்துள்ளது.

வழக்கமாக மாதாந்திர வரிப்பகிர்வு ரூ. 89,086.50 கோடியாக இருக்கும். ஆனால் தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் கூடுதல் வரிப்பகிர்வு வழங்கப்பட்டுள்ளது. மேலும், வரவிருக்கும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த வரிப்பகிர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 2024 அக்டோபர் மாதத்தில் விடுவிக்கப்பட வேண்டிய வழக்கமான முன்கூட்டிய தவணையும் அடங்கியுள்ளது. விடுவிக்கப்பட்ட தொகையின் மாநில வாரியான விவரம் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 'டெல்லி போனதும் கட்டாயம் பேசுவேன்' ஜிஎஸ்டி கலந்துரையாடலில் நிர்மலா சீதாராமன் உறுதி!

2024 அக்டோபர் மாதத்திற்கான மத்திய வரிகள் மற்றும் தீர்வைகளின் மாநில வாரியான வரிப்பகிர்வு :

வரிசை
எண்
மாநிலத்தின் பெயர்மொத்தம்
(கோடி ரூபாயில்)
1ஆந்திரப் பிரதேசம்7,211
2அருணாச்சலப் பிரதேசம்3,131
3அசாம்5,573
4பீகார்17,921
5சத்தீஸ்கர்6,070
6கோவா688
7குஜராத்6,197
8ஹரியானா1,947
9இமாச்சலப் பிரதேசம்1,479
10ஜார்க்கண்ட்5,892
11கர்நாடகா6,498
12கேரளா3,430
13மத்தியப் பிரதேசம்13,987
14மகாராஷ்டிரா11,255
15மணிப்பூர்1,276
16மேகாலயா1,367
17மிசோரம்891
18நாகாலாந்து1,014
19ஒடிசா8,068
20பஞ்சாப்3,220
21ராஜஸ்தான்10,737
22சிக்கிம்691
23தமிழ்நாடு7,268
24தெலங்கானா3,745
25திரிபுரா1,261
26உத்தரப் பிரதேசம்31,962
27உத்தராகண்ட்1,992
28மேற்கு வங்கம்13,404

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.